எப்போதும் குழப்பம் நிறைந்த மனநிலை கொண்டவர்களாக இருந்தால் கட்டாயம் இதைப் படியுங்கள்.
வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கிறேன். ஆனால், வெற்றியை எட்டும் தருவாயில் அந்தக் காரியம் ஏதாவது காரணங்களால் தடைப்படுகிறது. நன்கு சம்பாதிக்கிறேன் ஆனால் கையில் காசு நிற்பதில்லை கடன் வாங்கும் சூழ்நிலை.
பெரும்பாலும் ரியல் எஸ்டேட், கமிஷன், வியாபாரிகள் போன்ற துறையில் உள்ளவர்கள் மட்டும் இல்லை, சாதாரண மக்களும் இவ்வாறு அதிகம் புலம்புவதுண்டு. முன்னேற்றம் நெருக்கும் கடைசி நிமிடத்தில் தடங்கல் ஏற்படுகிறது. இதற்கு காரணம் தான் என்ன?
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், ஜாதகருக்கு உள்ள சகடை தோஷம் தான். ஜாதகத்தில் சந்திரன் இருக்கக்கூடிய இடத்திலிருந்து ஒவ்வொருவரின் பிறந்த நேரத்திலும் ராசியிலும் 6, 8, 12-ம் வீட்டில் குரு அமர்ந்துவிட்டால் இந்தத் தோஷம் உண்டாகிறது. இந்தத் தோஷத்திற்கு சகடை தோஷம் என்று அழைக்கப்படுகிறது.
ஜாதகருக்கு இந்தத் தோஷம் அமைந்துவிட்டால் அவரிடம் தெளிந்த மனமும், உறுதியான மனோ சக்தியும் நிச்சயம் இருக்காது. எளிதில் புகழ்ச்சிக்கும் எளிதில் தேவையில்லாத விஷயத்திற்கும் மனதை செலுத்துவர். மனம் எப்போதும் அமைதி இழந்து, ஏதாவது ஒரு விஷயத்தை யோசித்துக் கொண்டே இருக்கும். அலைபாயும் சிந்தனை கொண்டவராக எப்போதும் இருப்பர்.
குழப்பிய மனநிலை, உயர்ந்த நிலையை அடைய முடியாத சூழ்நிலை, செல்வந்தர்களாக இருந்தாலும், மனஅமைதி இல்லாமை. ஒரு சிலர் அரசாங்க பதவியில் இருந்தாலும், உயர் பதவி கிடைக்காத நிலை என இவர்கள் எவ்வளவு தான் முயற்சி எடுத்தாலும், இறுதியில் தோல்வியும், தடங்களுமே இவர்களுக்கு மிஞ்சும்.
மதியோ நின்ற இடம் தன்னில்
அந்தனன் 6, 8, 12-ல் அமர்ந்துவிட்டால்
சகடை என்று சூளுரை
அந்த ஜாதகனுக்கோ சாதகம்
முன்னேற்றத்திலும் சீருடன் இரவே இராது
என்று நீ சொல்வாயாக...
இது ஒரு பாடல்....சந்திரன் என்பது மதி (நிலவு) குரு என்பது யானை. யானைக்கும் நிலவுக்கும் ஏதாவது தொடர்புண்டா என்றால்? நிச்சயம் இல்லை.
ஆனால், இத்தோஷம் உள்ளவர்கள் அறிவாளிகள் தான். நிறைய திறமை, அனுபவம், நல்ல புத்திசாலித்தனம் பெற்றிருப்பார்கள். ஆனாலும், நிலையான வாழ்வை அமைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். வண்டிச் சக்கரம் உருளுவது போல மேலும் கீழும் வாழ்வு உருளும். ஒரு கால கட்டத்தில் ஓஹோ என்று இருக்கும் இவர்கள் நிலை மாறி திடீரென சரிவு ஏற்படும். காடாறு மாதம், நாடாறு மாதம் கதை தான் இவர்களுக்கு உண்டாகும்.
என்ன பரிகாரம் செய்தால் இதிலிருந்து தப்பிக்க முடியும்?
• ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி யந்திரம் வீட்டில் வாங்கி வைத்து வழிபாடு செய்யலாம்.
• முருகன், பிரகஸ்பதியை ஆலயம் சென்று வணங்கி வரலாம். பௌர்ணமி நிலவைத் தரிசிக்கலாம்.
• யானை முடியில் மோதிரம், காப்பு போன்றவற்றை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து கைகளில் அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அணிவதால் சகடை தோஷம் நீங்கி, கஜகேசரி யோகம் சித்திக்கும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. நிலையான வாழ்வும் அமைதியான சிந்தனையும் உண்டாகி உயரப் பெறுவார்கள்.
No comments:
Post a Comment