Friday 15 June 2018

பெட்டிக்குள் ரகசியம்


குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். அருகில் இருந்த சீடன் கலங்கிய கண்களுடன் “குருதேவா... நீங்கள் கூறியபடி ஜபம், தியானம் எல்லாம் செய்து வருகிறேன். ஆனால் ஆன்மிக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லை. எது வரை எனது ஆன்மிக பயிற்சியை தொடர்வது. உங்களுக்கு பிறகு யாரிடம் கேட்பது?” என்றான்.

குரு அவனிடம், “இந்த கட்டிலுக்கு அடியில் ஓர் பெட்டி இருக்கிறது. அதன் உள்ளே பிற்காலத்தில் உனக்கு வேண்டிய உபதேசத்தை வைத்திருக்கிறேன். அது அனைத்து விஷயங்களையும் போதிக்கும். எனது உபதேசம் தேவைப்படும்பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார்,” என கூறி விட்டு கண்களை முடி விட்டார்.

நாட்கள் சென்றன...

தனது ஆன்மிக முயற்சியில் பலன் கிடைப்பதாக சீடனுக்கு தெரியவில்லை.குருவின் உபதேசத்தை பார்க்க பெட்டியை திறந்தான். அதில் எழுதி இருந்த வாசகம்... 'மீண்டும் முயற்சி செய்!' குரு சொன்னபடியே மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டான்.

No comments:

Post a Comment