Thursday 21 June 2018

கிரக தோஷங்கள் போக்கும் சூலினி துர்க்கை ஸ்லோகம்

கிரக தோஷங்கள் போக்கும் சூலினி துர்க்கை ஸ்லோகம்

கிரக தோஷத்தினால், எடுத்த செயலை செய்ய முடியாமல் தடங்கல் ஏற்படும் போது, இந்த சூலினி துர்க்கா மந்திரத்தை ஜபம் செய்து விட்டு தொடங்கினால் அதில் வெற்றி நிச்சயம்.

பிப்ரணா ஸூலபாணாஸ்யரிஸதரகதா சாபபாஸாந் கராப்ஜை:
மேகஸ்யாமா கிரீடோல்லிகிதஜலதரா பீஷணா பூஷணாட்யா
ஸிம்ஹஸ்கந்தாதிரூடா சதஸ்ருபிரஸிகேடாந்விதாபி: பரீதா
கந்யாபிர்பிந்நதைத்யா பவது பவபய தவம்ஸிநீ ஸூலிநி வ:

பொதுப் பொருள் :

சூலினி துர்க்காதேவியை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. பேரொளியோடு திகழும் திரிசூலத்தைக் கையில் தாங்கியவள்; எதிரிகளை அழிப்பதில் நிகரற்றவள். இரு புறங்களிலும் கத்தி, கேடயம் ஏந்திய தோழிகள் காவலிருக்க கம்பீரமாக கோலோச்சுபவள். இவளை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன. இந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.

No comments:

Post a Comment