Wednesday 27 June 2018

வேண்டாமே முரண்பாடு


ஒரு வியாபாரி தன் மகனுக்கு வணிக தந்திரங்களை கற்றுக்கொடுத்து வந்தார். “நாணயம், புத்திக்கூர்மை இரண்டையும் பயன்படுத்து,” என்றார். “நாணயம் என்றால் என்னப்பா?” என்றான் மகன். தந்தை கூறினார்.

“நீ உன் வாடிக்கையாளருக்கு வாக்கு கொடுத்தால், உனக்கு நஷ்டம் வந்தாலும், அந்த வாக்கை நிறைவேற்று,” என பதிலளித்தார்.

அடுத்து மகன், “புத்திக்கூர்மை என்றால் என்ன?” என்றான். “நீ அப்படி ஒரு வாக்குறுதியை கொடுக்காமல் இருப்பது,” என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு நல்லதை கற்றுக் கொடுக்க வேண்டியது தான். ஆனால், அது முரண்பாடுடையதாக இருக்கக்கூடாது. இந்த வியாபாரியின் எடுத்துக்காட்டை யாரும் பின்பற்றக்கூடாது. முரண்பட்ட அறிவுரைகள் எதிர்கால தலைமுறையை உண்மையிலிருந்து விலகச் செய்து விடும்.

No comments:

Post a Comment