Tuesday 26 June 2018

வாழ்வில் ஏற்றம் தரும் அகோர மூர்த்தி மந்திரம்

வாழ்வில் ஏற்றம் தரும் அகோர மூர்த்தி மந்திரம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பார்கள். கண் திருஷ்டி என்பது, அவரவர் நம்பிக்கையை பொறுத்தது என்றாலும், பொதுவாக கண்திருஷ்டி படுவதை யாரும் விரும்புவதில்லை. அது தங்களது முன்னேற்றத்தை தடை செய்யக் கூடியது என்ற கருத்து ஆழமாக உள்ளது. 

ஸ்ரீ அகோர மூர்த்தியானவர் இத்தகைய கண்திருஷ்டியை போக்கி, தடைகளை நீக்கி, வெற்றியை அருள்பவர். திருவெண்காட்டில் கோவில் கொண்டுள்ள இப்பெருமானை தரிசித்தால், கண் திருஷ்டி, ஏவல்கள், காரியத் தடைகள் போன்றவை விலகி, வாழ்வில் ஏற்றம் கிடைக்கும். தினமும் அதிகாலையில் 21 முறை இத்துதியைச் சொல்லி வந்தால், நன்மை நடக்கும். 


ஸகல கன ஸமாபம்
பீமதம்ஷ்ட்ரம் த்ரிநேத்ரம்
புஜகதரம கோரம்

ரக்த வஸ்த்ராங்க தாரம்
பரசு டமரு கட்கம்
கேடகம் பாணச்சாயை
திரிசிகநர கபாலை
விப்ரதாம் பாவயாமி

No comments:

Post a Comment