Monday, 11 September 2017

கதை கேட்கும்போது தூக்கம் வருதா?


ராமாயணக் கதைகேட்கச் செல்பவர்கள் தூங்காமல் கதைகேட்க வேண்டும். ஆனால், சிலர் தன்னையும் மீறி தூங்கிவிடுவதுண்டு. ராமாயண கதாகாலட்சேபம் நடக்கும்போது யாருக்குத் தூக்கம் வரும் என்பதை அறிந்து கொண்டால் இனிமேல் தூக்கமே வராது. அசோகவனத்தில் இருந்த சீதை ஒரு கட்டத்தில் தன் உயிரையே விடத் தீர்மானித்து விட்டாள் . அனுமன் ஒரு நாள் கழித்து வந்திருந்தாலும் இந்த அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால், அனுமன் அசோகமரத்தின் மீது அமர்ந்து ராமனின் பெருமையை தன் இனிமையான குரலில் பாடத் தொடங்கினான். அந்த ராகத்திற்கு ""ஹனுமதோடி'' என்று பெயர். 

ராமனின் புகழ்பாடும் இந்த ராகத்தைக் கேட்க ஆரம்பித்ததும் அரக்கிகள் உறங்கத் தொடங்கினார்கள். சீதையோ ரசித்துக் கேட்டு உயிர் பிழைத்தாள். இதனால் ராமாயணக்கதை கேட்கும் போது உறங்குபவர்கள் ராட்சஷகுணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ராமாயணம் மட்டுமல்ல! எந்த பக்திநூலைப் படித்தாலும், சொற்பொழிவைக் கேட்டாலும், மனம் ஒன்றிகேட்டால் தூக்கம் வராது.

No comments:

Post a Comment