Thursday 2 November 2017

இவைகளை செய்தால் நமக்கே தெரியாமல் நம்முடைய தோஷம் விலகுமாம்

annathanam

நம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோஷமாகி நம்முடைய வளர்ச்சியைக் கெடுக்கிறது என்று நமக்குத் தெரியாது. அதேபோல சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கி நமக்கு நன்மை செய்யுமாம்......

• தூங்கச் செல்லும் போது தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரைக் காலையில் செடிகளுக்கு விட சுக்கிர தோஷம் படி படியாகக் குறையுமாம். அல்லது தூங்கும் போது நாம் எடுத்துச் செல்லும் குடிநீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினிக்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும்.

• அடிக்கடி பசுவிற்கு வாழைப் பழம், கற்கண்டு பொங்கல் கொடுப்பது, அகத்திய கீரை வழங்குவது சந்திரனின் ஆசிகளை நமக்குக் கொடுத்து புகழைப் பெற்று தரும்.

• வசதி இல்லாத குடும்பத்தினருக்கு ஈமச் சடங்குகள் செய்ய பணம், பொருள் கொடுத்து உதவி செய்தல் சனி பகவான் ஆசிகளைக் கொடுத்து ஆயுளை விருத்தி செய்வாராம்.

• ஆசான், வேதம் படித்தவர் நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்குப் பொருள் கொடுத்து உதவுது, குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவதால் குருவின் ஆசிகள் கிடைக்கும்.

• சிதிலம் அடைந்த கோயில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல், தண்ணீர் தொட்டி, குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல் தேவதைகளின் ஆசி கிடைக்குமாம்.

• சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும், பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும், கோவிலுக்கு சொர்ணத்தை தானமாகத் தருவது தொழு நோய், குஷ்டம் உள்ளவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசி கிடைக்கும். இதனால், நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்சம் விருத்தியாகும்.

• திருமணம் செய்ய ஏழைப் பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல், நம் வாழும் மனை, தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல், மேலும் பூமிக்கு மரியாதை செய்தல், இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் போன்றவை செவ்வாயின் ஆசிகள் நமக்கு கிடைத்து அஷ்ட சுகங்களையும் தருவாராம்.

• ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்தல், புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல், புதிய உடைகளை தானம் செய்தல் இதனால் புதனின் ஆசிகள் நமக்கு கிடைக்கும். புத பகவானின் ஆசி இருந்தால் நல்ல தொழில், மென்மையான வாழ்க்கை கிடைக்கும்.

• நாகங்களைக் கண்டதும் அடிக்காமல் இருப்பது, இறந்த நாகத்தின் உடலை கண்டதும் தீயிட்டுக் கொளுத்துவது, குடி கெடுத்தவன், குடிகாரன், குரு துரோகி, பசுவைக் கொன்றவன் இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்த்தால் ராகு-கேது ஆசிகளைப் பெறலாம். 

• பாழடைந்த சிவன் கோயிலில் விளக்கு ஏற்றுவது, பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்குத் தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது, வெள்ளத்துடன் பச்சரிசி தூளை கலந்து அந்தக் கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும், இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.

பொதுவான இந்தப் பரிகாரங்கள், நமக்குப் புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் கிடைக்கும். 

No comments:

Post a Comment