நதிகளை பெண்ணாகப் போற்றுவது மரபு. இதற்காகவே, கங்கா, யமுனா, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, அமராவதி என்றெல்லாம் நதிகளுக்குப் பெயரிட்டிருக்கிறோம். இவையெல்லாம் கிழக்கு நோக்கி ஓடும் ஆறுகள். இந்த ஆறுகள் மட்டுமே பெண் தன்மை கொண்டவை. நம்நாட்டில் பெரும்பாலான நதிகள் மேற்குதொடர்ச்சிமலையில் உற்பத்தியாகி கிழக்குநோக்கி ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. அதே நேரம் நர்மதை, தப்தி நதிகள் மேற்குநோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கின்றன. இவை ஆண்தன்மை கொண்டவை என்பர். எனவே இவற்றை "நதி' என்று சொல்லாமல் ஆண்பால் சொல்லான "நதம்' என்று குறிப்பிடுவது மரபாக உள்ளது.
Saturday 11 November 2017
நதிகளில் இவை ஆண்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment