Tuesday 20 February 2018

சிவனுக்கு நெற்றிக்கண் ஏன் ?


சிவபெருமான் நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்தார் என புராணங்கள் சொல்கின்றன. நெற்றிக்கண் என்பது அழிவு சக்தி அல்ல. அது ஞானத்தின் அடையாளம். இந்த ஞானக்கண்ணை லேசாக திறந்து, பெண்ணாசையைத் துாண்டும் காதல் தேவனான மன்மதனை அவர் அழித்தார். இதனால் தான் தியானம் செய்யும் போது, புருவ மத்தியில் (நெற்றியின் அடிப்பகுதி) நமது கருத்துக்களை ஒன்று சேர்க்கிறோம். அப்போது மனம் அடங்குகிறது. ஆசை குறைகிறது. எதைச் சேர்த்து வைத்தாலும் அதனால் பயனில்லை என்ற ஞானம் பிறக்கிறது. நெற்றிக்கண் என்பது ஆசையை அடக்கும் கருவியாகும். 

No comments:

Post a Comment