Friday 23 February 2018

நாரதர் பவனி வரும் கோவில்


பிரம்மாவின் புத்திரரான நாரதருக்கு கோவில்களில் சன்னிதி இருப்பதாக தெரியவில்லை. ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சண்முகர் கோவிலில் இவர் உற்சவராக இருக்கிறார். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவன், அவரது ஒரு தலையை கொய்தார். அப்போது நாரதர், தன் தந்தை தவறு செய்யவில்லை என்று சிவனிடம் வாதிட்டார். இதனால், அவர் சிவநிந்தனைக்கு ஆளானார். அவரது தும்புராவும் வளைந்தது. பிறகு, விராலிமலை வந்து முருகப் பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு நாரதர் உற்சவராக இருக்கிறார். இவரது தும்புரா வளைந்திருக்கிறது. இக்கோவில் திருவிழா நேரத்தில், சுவாமி முன்பாக இவரும் உலா வருவது சிறப்பு.

No comments:

Post a Comment