Sunday 5 November 2017

இரண்டு வகை "யோகம்'


யோகம் என்பது அதிர்ஷ்டத்தைக் குறிக்கும். பங்களா, கார் என்று ஆடம்பரத்துடன் வாழ்பவனை "அவனுக்கென்ன யோகக்காரன்' என்று அனைவரும் சொல்வதுண்டு. ஆனால், ஆன்மிகத்தில் "யோகம்' என்பது இறைவனை அடைவதைக் குறிக்கும் சொல். யோகம் என்றால் "இணைப்பது' என்று பொருள். மனதை அலைபாய விடாமல் இறைவனை அதற்குள் நிலைநிறுத்துவதே ஆன்மிக யோகம். இறைவனை அடைய பக்தியோகம், கர்மயோகம் என சில வழிகள் உள்ளன. இவை பின்பற்றுவதற்கு கடினமானவை. மிக எளிமையான யோகம் ஒன்று உண்டு. அதுவே பிரபத்தியோகம். இதற்கு "இறைவனின் திருவடிகளை முழுமையாகச் சரணடைதல்' எனப்பொருள். பன்னிரு ஆழ்வார்களும் திருமாலை இந்த யோகத்தின் மூலமே அடைந்தனர். நரசிம்ம பக்தர்கள் "லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே' என்று சொல்லி அவரைச் சரணடைகிறார்கள்.

No comments:

Post a Comment