Wednesday 15 November 2017

சிவபெருமானின் திருமந்திரம்

சிவபெருமானின் திருமந்திரம்

சிவபெருமானுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது பிரதோஷ நாட்களில் சொல்லி வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

தேவருள்ளும் ஒருவரும் சிவனோடு நிகர்ப்பவர் இல்லை; மக்களுள்ளும் அவனொடு ஒப்பவராவார் இல்லை; ஆதலின், இயல்பிலே உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் (ஞான சூரியனாய்) விளங்கும் முதற்கடவுள் அச்சிவபெருமானே.

No comments:

Post a Comment