Tuesday 7 November 2017

பிடிச்ச மாப்பிள்ளை வருவார்


கன்னிப்பெண்களும், சுமங்கலிப் பெண்களும் கடைபிடிக்கும் விரதம் அவ்வையார் விரதம். மாவை உப்பில்லாமல் பிசைந்து கொழுக்கட்டை செய்துவேப்பிலை, புளிய இலை, புங்க இலைகளைப் பரப்பி அதில் கொழுக்கட்டையைப் படைப்பர். நள்ளிரவில் நடத்தப்படும் இந்த வழிபாடு வயதான சுமங்கலியின் தலைமையில் நடக்கும். அப்போது அப்பெண் அவ்வையாரின் வரலாற்றை மற்ற பெண்களுக்கு எடுத்துச் சொல்வார். ஆடிச்செவ்வாயன்று இந்த விரதத்தை அனுஷ்டிப்பது வழக்கம். தை, மாசி செவ்வாய்க் கிழமைகளிலும் அவ்வையார் விரதம் மேற்கொள்வதுண்டு. இதனை சுலவடையாக" மறந்தா மாசி, தப்பினா தை, அசந்தா ஆடி' என்று சொல்வர். இவ்விரதம் மேற்கொள்ளும் கன்னியருக்கு மனதிற்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்பது ஐதீகம். ஆண்களுக்கு இந்த விரதத்தில் பங்கேற்க அனுமதியில்லை. கொழுக்கட்டை பிரசாதம் கூட தருவதில்லை.

No comments:

Post a Comment