ஒரு கோயில் மண்டபத்தில் உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. விருப்பத்துடன் கேட்கும் ரசிகர் ஒருவர், அதைக் கவனிக்காமல் அங்குமிங்கும் பார்த்தபடியே இருந்தார். அவர் முகத்தில் வருத்தம் தெரிந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவர் எழவில்லை. விசாரித்தபோது," தான் அணிந்திருந்த ஒருபவுன் மோதிரம் தொலைந்து விட்டது. 30 வருஷமாக கையிலே போட்டிருந்தது' என்றார். அவருடைய கவலை நியாயமானது தான். இவர் இப்படி கவலைப் பட்டாலும், ""இத்தனை வருஷமாக அவருடைய விரலில் இருந்தேனே! மறுபடியும் அவரிடம் செல்லவேண்டுமே!'' என்ற கவலை மோதிரத்திற்கு ஏற்படுமா! மோதிரத்தைத் தொலைத்தவரைப் போல பரமாத்மாவான கடவுளும், நம்மை பிரகிருதி (உலகம்) மண்டலத்தில் தொலைத்துவிட்டு கவலைப்படுகிறார். அந்த மோதிரத்தைப் போல நாமும் கடவுளை மறந்து விட்டு, உலக ஆசைகளில் சிக்கிக் கிடக்கிறோம்.
Monday 6 November 2017
கவலைப்படாத மோதிரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment