சிவபெருமானுக்குரிய மங்கலச் சின்னங்களில் விபூதி பிரதான இடம் பெற்றுள்ளது. விபூதியை நெற்றியில் இடுவதற்கு சில முறைகள் உள்ளன. விபூதி இடும்போது, சிவ மந்திரங்களான 'நமசிவாய', 'சிவசிவ' என்றோ, 'சரவணபவ' என்றோ சொல்ல வேண்டும். வலக்கையின் பெருவிரலையும், இரண்டு நடுவிரல்களையும் இணைத்து விபூதியை எடுக்க வேண்டும். இதை ரிஷப முத்திரை என்பர். எடுத்த விபூதியை ஆள்காட்டிவிரல், நடுவிரல், மோதிர விரல் மூன்றிலும் தோய்த்து மூன்று பட்டையாக இட வேண்டும். ஆட்காட்டி விரலால் மட்டும் விபூதி, குங்குமம் இடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் என்னும் சைவப் பெருந்தகை இந்த தகவலை சொல்லியுள்ளார்.
Friday 9 February 2018
விபூதி இடும் முறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment