Friday 9 February 2018

மந்திரப்பூவை பார்த்திருக்கிறீர்களா ?


வீட்டில் தினசரி பூஜை செய்பவர்கள் சுவாமியின் திருநாமங்களை அஷ்டோத்திரம் அல்லது 108 போற்றி மந்திரங்களைச் சொல்லி வழிபடுவர். அப்போது ஒவ்வொரு நாமத்திற்கும் ஒரு பூ வீதம் சுவாமியின் திருவடியில் இடுவது வழக்கம். ஒற்றைக் கையால் பூக்களைத் தூவாமல், இரு கைகளையும் ஒன்று சேர்த்து, உதிரிப்பூக்களை எடுத்து கடவுளின் திருவடியில் சேர்ப்பது சிறந்த முறையாகும். அஷ்டோத்திரம் சொல்லி முடித்ததும், வழிபாட்டின் நிறைவில் தங்களுக்கு தெரிந்த ஸ்லோகம் அல்லது பாடல்களைப் படித்தால் தான் வழிபாடு முழுமை பெறும். இதனை 'மந்திர புஷ்பம்' என்று சொல்வர். தெய்வத்திற்குச் செய்யும் விசேஷமான உபசாரம் என்று இதை சாஸ்திரம் சொல்கிறது. 

No comments:

Post a Comment