Monday 12 February 2018

ஏழுமலையானின் பக்தை

Image result for tirupati balaji

ஏழுமலையானின் பக்தரான வேங்கமாம்பா, தனது பெற்றோரின் வற்புறுத்தலால் வெங்கடாஜலபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் குடும்ப வாழ்வில் நாட்டம் ஏற்படவில்லை. துறவறம் பூண்டு ஏழுமலை மீதுள்ள தும்புரு தீர்த்தக்கரையில் தனித்து வாழ்ந்து அங்கேயே சமாதியானார். இவரது சமாதி திருமலை வடக்கு வீதியிலுள்ள தோட்டத்தில் உள்ளது. திருப்பதி கோவிலில் அபிஷேகத்திற்கென்றே உருவாக்கப்பட்ட போக சீனிவாசருக்கு, இவர் முத்து மாலை ஒன்றை பரிசாக அளித்துள்ளார். வெங்கடேச மகாத்மியம், தத்வ கீர்த்தனம், கிருஷ்ண மஞ்சரி, நரசிம்ம விலாசம், பாலகிருஷ்ண நாடகம் ஆகியவை இவரால் இயற்றப்பட்டவை.

No comments:

Post a Comment