Wednesday 14 February 2018

காதலன் ஏமாற்றி விட்டானா ?


காதலித்தவன் கர்ப்பமாக்கி கைவிட்டு விட்டானா? திருமணத்துக்கு பிறகு வரதட்சணைக்கு ஆசைப்பட்டோ, கர்ப்பம் தரிக்கவில்லை என்ற காரணம் காட்டியோ புகுந்த வீட்டார் விரட்டி விட்டார்களா? கட்டிய கணவன் காரணமின்றி கைவிட்டு விட்டானா? அதிகாரிகள் உங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தர லஞ்சம் கேட்கிறார்களா? இப்படி தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக் கேட்க பக்தர்கள் ஒரு அம்மன் கோவிலில் வித்தியாசமான பிரார்த்தனை ஒன்றைச் செய்கிறார்கள். பொள்ளாச்சியிலிருந்து 15கி.மீ. தூரத்திலுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் 'நீதிக்கல்' ஒன்று உள்ளது. பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அநீதியை தட்டிக் கேட்கும்படி அம்மனை வேண்டி, இந்தக்கல்லில் மிளகாய் வத்தலை அரைத்து பூசுகின்றனர். இதனால் துன்பமிழைத்தவர்கள் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வர் என்று நம்புகிறார்கள். அவ்வாறு நடந்து விடுமானால், அம்மனுக்கு நன்றி தெரிவித்து தைலாபிஷேகம் செய்கிறார்கள்.

No comments:

Post a Comment