கணபதி, கணேசன், கணாதிபன், கணநாதர், கணநாயகன் என்று விநாயகருக்கு பல பெயர்கள் இருக்கின்றன. இவை அனைத்திற்கும் 'கணங்களின் தலைவன்' என்று பொருள். அதாவது கைலாயத்திலுள்ள சிவகணங்களின் தலைவர் விநாயகர். மகாகணபதி ஸ்தோத்திரம் என்னும் நூலில் 'கண க்ராமணி' என்ற பெயரால் குறிக்கப்படுகிறார். இதற்கு, ''கணங்கள் பரிவாரமாக சுற்றியிருக்க நடுவில் வீற்றிருப்பவர்' என்று பொருள். பொதுவாக தலைவராக இருப்பவருக்கு தொண்டர்கள் பணிவிடை செய்வது நடைமுறை. ஆனால், விநாயகர் சிறிதும் தலைக்கனம் இல்லாதவர் என்பதால் தனக்குத் தானே காதுகளால் சாமரம் வீசிக் கொள்கிறார். இதனால் 'சாமர கர்ணர்' என்றொரு பெயரும் இவருக்குண்டு.
Friday 16 February 2018
தொண்டர்களை சிரமப்படுத்தாத தலைவர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment