அம்மன் என்றாலே பெண்களுக்குரிய தெய்வம் என்று உரிமை கொண்டாடுவார்கள். ஆனால் கரூரில் இருந்து சின்னதாராபுரம் வழியாக 40 கி.மீ., தூரத்திலுள்ள பெரிய திருமங்கலம் அருங்கரை அம்மன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆண்கள் மட்டுமே செல்ல முடியும். விநாயகருக்கு மட்டும் சன்னிதி உண்டு. இக்கோவிலுக்குள் பிறந்த பெண் குழந்தையைக் கூட அனுமதிப்பது கிடையாது. ஆனால் வெளியே நின்றபடி வழிபடத் தடையில்லை. இந்த அம்மனை இவ்வூர் ஆண்கள் ஒரு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேளையில் கண்டுபிடித்தனர். இதன் காரணமாக இக்கோவில் செவ்வாய்க்கிழமை மட்டும் திறக்கப்பட்டு நள்ளிரவில் ஆண்களால் மட்டுமே பூஜை நடத்தப்படுகிறது.
Saturday 10 February 2018
ஆண்கள் மட்டுமே தரிசிக்கும் அம்மன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment