Monday 11 June 2018

வாஸ்து தோஷங்களை போக்கும் மயிலிறகு

வாஸ்து தோஷங்களை போக்கும் மயிலிறகு

மயில் முருகப்பெருமானின் வாகனம். அதுமட்டுமல்ல நமது தேசியப் பறவையும் ஆகும். மழை மேகம் பார்த்தால் மயில் தோகை விரித்தாடும். அங்ஙனம் ஆடும் பொழுது ஒருசில இறகுகள் கீழே விழும்.

அங்ஙனம் கீழே விழுந்த இறகுகளை எடுத்து வந்து வீட்டு பூஜையறையில் வைத்தால் வாஸ்து தோஷம் போகும். வீட்டின் முன்பகுதியில் சொருகி வைத்தால் எதிர்மறை ஆற்றலைத் தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும்.

காவடியில் மயிலிறகு வைப்பது வழக்கம். வீட்டில் மயிலிறகு, அருகம்புல், துளசி ஆகியவற்றை வைப்பதன் மூலம் வாஸ்து தோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment