Sunday 4 February 2018

பெண் வடிவத்தில் சிவனை தரிசிக்க வேண்டுமா ?


பிருந்தாவனத்தில் உள்ள வம்சிவட் பகுதியில் கோபேஷ்வர் மகாதேவ் மந்திர் என்ற பழமை வாய்ந்த சிவன் கோவில் இருக்கிறது. இங்குள்ள சிவலிங்கத்திற்கு புடவை அணிவிக்கிறார்கள். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. ஒரு முறை பிருந்தாவனத்தில் கிருஷ்ணரும், கோபியர்களும் பவுர்ணமி இரவில் நடனமாடி (ராஸ லீலை) கொண்டிருந்தார்கள். சிவனுக்கும் அந்த நடனத்தில் பங்குகொள்ளவேண்டும் என்று ஆசை உண்டாக இங்கு வந்தார். ஆனால் பிருந்தாதேவி (துளசிமாதா) அவரை தடுத்து நிறுத்தி 'ராஸ லீலா நடனத்தில் கிருஷ்ணரைத் தவிர வேறு ஆண்கள் பங்கெடுக்க முடியாது,' என்றாள். சிவன் வருத்தப்பட்டார். இது பிருந்தாதேவியை சங்கடப்படுத்தியது. அவள் சிவனிடம், இங்குள்ள குசும் சரோவர் குளத்தில் குளித்து வருமாறு கூறினார். 

சிவன் அதில் மூழ்கி எழுந்ததும் அழகிய பெண் ரூபம் கிடைத்தது. அளவில்லா சந்தோஷத்துடன் ராஸ லீலாவில் நடனமாடி மகிழ்ந்தார். கோபியர் ரூபத்தில் இருந்த சிவனை 'கோபெஷ்வர்' என்று அழைத்தனர். வம்சிவட்டில் சிவன், கோபி (பெண்) வடிவில் உள்ள அழகிய விக்ரகம் இன்றும் உள்ளது. இந்த நிகழ்வு காரணமாகவே இந்த கோபெஷ்வர் மகாதேவ் கோவிலில் சிவலிங்கத்திற்கு புடவை அணிவிக்கிறார்கள். 

இன்னொரு விஷயம் இந்த கோவிலில் சிவாவுக்கு போகா (நைவேத்யம்) செய்வதில்லை. சிவா சாப்பிட மூன்று வேளையும் கைலாசம் சென்று வருவதாக ஐதீகம்.

No comments:

Post a Comment