Thursday 8 February 2018

ஒரு தலை பிரம்மா


பிரம்மா என்றாலே நான்முகன் என்பர். இவருக்கு நான்கு தலைகள் இருக்கும். மதுரை அருகிலுள்ள கொடிக்குளம் வேதநாராயணப் பெருமாள் கோவிலில் இவர் ஒரு தலையுடன் பெருமாளை வணங்கிய நிலையில் இருக்கிறார். இங்குள்ள குகைக்குள் பெருமாள் பாதம் தனியாக இருக்கிறது. அந்நியர்கள் படையெடுப்பின் போது, பிள்ளை லோகாச்சாரியார் என்ற மகான், ஸ்ரீரங்கம் கோவில் உற்சவரை இங்குள்ள குகையில் சில காலம் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தார். அந்த இடத்தில் பிற்காலத்தில் சுவாமியின் பாதம் வைக்கப்பட்டது. அருகில் வேதநாராயணப் பெருமாள் சன்னிதியும், பிள்ளை லோகாச்சாரியார் சன்னிதியும் உள்ளன.

No comments:

Post a Comment