Sunday 22 April 2018

உலகின் தலைசிறந்த சொல் 'செயல்'!


ஏப்.24 - சாய்பாபா ஸித்தி தினம்

* அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட, பயனுள்ள ஒரு செயலில் ஈடுபடுவது சிறந்தது. 
* 'எனக்கு எல்லாம் நீயே; உன்னை எனக்கு கொடு' என கடவுளிடம் தினம் வழிபாடு செய்யுங்கள். * வாழ்க்கையே பிரார்த்தனை. அதில் செயல் அனைத்தும் கடவுளுக்குரிய அர்ச்சனை. 
* கலியுகத்தில் கடவுளின் திருநாமம் சொல்வதை விட, சிறந்த வழிபாடு வேறில்லை. 
* கடவுள் மின்சக்தி. மனிதன் பல்பு. நாம் ஒளி வீசுவதற்கு கடவுளை நமக்குள் கொண்டு வர வேண்டும்.
* கடவுளிடம் அன்பு செலுத்துவது உண்மை என்றால், நீங்கள் எல்லா உயிர்களையும் நேசிக்கிறீர்கள் என்று பொருள். 
* பொறுமையே தவம். திருப்தியே மகிழ்ச்சி. கருணையே புண்ணியம். கடவுளின் நாமமே பேரின்பம். 
* கடவுளை பூரணமாக சரணடைந்து விட்டால், விதி செயலிழந்து விடும். 
* அன்பான எஜமானராக கடவுள் இருக்கிறார். அவருக்கு உண்மையாக நடக்கும் ஊழியர்களை மட்டுமேபிடிக்கும். 
* முற்றிய தேங்காய் நைவேத்யமாகும் தகுதி அடைவது போல, பக்குவம் அடைந்த உள்ளம் கடவுளின் திருவடியை அடையும். 
* உணவை மட்டுமல்ல; பக்தி என்னும் நல்ல உணர்வையும் தேடுவதே வாழ்க்கை. 
* கடவுள் வழங்கிய பாத்திரமான உள்ளத்தை துாய்மையாக பாதுகாப்பது நம் கடமை. 
* மனம் எனும் வயலில் அன்பை பயிரிட்டு, சேவை எனும் நீர் பாய்ச்சுங்கள். இன்பம் என்னும் விளைச்சல் அறுவடையாகும். 
* மனத் துாய்மையின்றி கடவுள் பெயரை மட்டும் சொல்வது என்பது, காயச்சலின் போது மருந்தின் பெயரை மட்டும் சொல்வது போலாகும்.
* பணத்தை நாம் ஆள வேண்டுமே ஒழிய, ஒருபோதும் பணம் நம்மை ஆளக்கூடாது.
* உடல் நோய்க்கு எத்தனையோ மருந்துகள் இருக்கின்றன. மன நோய்க்கோ தன்னலம் அற்ற சேவையே மருந்து. 
* துன்ப இருளில் தவிக்கும் உயிர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். உங்கள் இதயத்தில் அருள் ஒளி பரவும். 
* உண்மையை விட மதிப்பு மிக்க விஷயம் வேறில்லை. அது ஒன்றே என்றும் நிலைக்கும். 
* உடல் என்னும் இயந்திரம் இயங்க, உணவு என்பது எண்ணெய் போல அளவுடன் இருக்க வேண்டும். 
* பணம் இல்லாதவன் ஏழை அல்ல. வேண்டாத ஆசை உள்ளவனே ஏழை. 
* பகலும் இரவும் போல இன்பமும் துன்பமும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்தே தீரும். 
* கன்று வளரும் போதே அதற்கு கொம்பும் வளர்வது போல, செல்வம் வளரும் போதே செருக்கும் வளர்ந்து விடுகிறது. 

No comments:

Post a Comment