Monday 2 April 2018

வண்டு சொன்ன நல்ல சேதி

Related image

அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையை, அங்கிருந்த அரக்கிகள் துன்புறுத்தினாலும், விபீஷணனின் மகளான திரிசடை மட்டும் ஏதும் செய்யவில்லை. ஒருநாள் சீதையின் காதருகில் வண்டு ஒன்று ரீங்காரம் இட்டு சென்றதை கண்ட அவள், “அம்மா! அந்த வண்டு உங்கள் காதருகே வந்து ஏதாவது நல்ல சேதி சொன்னதா! என்னைப் பொறுத்தவரை இது நல்ல சகுனம் என கருதுகிறேன். உங்களுக்கு விடிவு காலம் நெருங்குவதை உணர்கிறேன்,” என்றாள். 

இது கேட்டு சோகம் மறந்த சீதை, “உன் பேச்சு தேன் போல காதில் பாய்கிறது. அமிர்தம் போல என் மனதுக்கு நலம் தருகிறது” என்றாள். துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை சொன்னால் போதும். அவர்களின் மனதில் நம்பிக்கை துளிர் விட்டுவிடும்.

No comments:

Post a Comment