Monday 2 April 2018

மாலை தேவையில்லை மனசு தான் தேவை



* பெரிய மாலை கடவுளுக்கு தேவை இல்லை. ஒரு பூவை மனத் துாய்மையுடன் காலடியில் வைத்தாலும் அன்புடன் ஏற்பார். 
* எங்கிருந்தாலும் உடன் இருப்பவருக்கு மகிழ்ச்சி தருபவரே பண்பு மிக்கவர். ஒருவர் சென்ற பிறகே மற்றவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால் அவர் பண்பற்றவர்.
* மனமே கடவுளின் இருப்பிடம். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அவரின் அருளால் தான் வாழ்க்கை சக்கரம் இயங்குகிறது. 
* தினமும் தியானம் செய்வதால் மனம் பக்குவம் பெறும். துன்பம் நேரும் போது சமாளிக்கும் வல்லமை உண்டாகும்.
* லாபம் என மக்கள் கருதுபவை ஆன்மிகத்தில் கிடைக்காமல் போகலாம். ஆனால், ஆன்மிகத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி மற்றதில் கிடைப்பதில்லை. 
* உள்ளத்தில் நிறைவு இருந்தால் உடலில் ஏற்படும் துன்பங்கள் ஒரு பொருட்டாக தெரிவதில்லை.
* மனிதர்கள் செய்யும் சமூகத்தொண்டு பெரிதாக தோன்றலாம். ஆனால், ஞானிகள் உலக நன்மைக்காக செய்யும் பிரார்த்தனையின் சக்தி அளப்பரியது. 
* எல்லா உயிர்களிடத்திலும் கடவுளை காணும் பாக்கியம் பெற்றவனே உண்மையான பக்தன். 
* விரதம் இருப்பதால் உடல், மனம் துாய்மையடைகின்றன. அப்போது கடவுளுக்காக கண் விழிப்பதோ, பட்டினி கிடப்பதோ சிரமமாக இருக்காது.

No comments:

Post a Comment