Tuesday 3 April 2018

பாவத்தின் திறவுகோல் எது


* பாவத்தின் திறவுகோல் ஆசை. ஞானத்தின் திறவுகோல் அன்பு.
* பிரச்னைகளை அறிந்து கொள்ளவும், சரி செய்யவும் தியானமே சிறந்த வழி.
* புயலால் அசைக்க முடியாத பாறை போல, புகழ்ச்சி, இகழ்ச்சிக்கு அசையாதவனே அறிஞன்.
* ஆசையை ஒழித்தால், துன்பம் தாமரை இலை தண்ணீர் போல எளிதில் கீழே விழுந்து விடும். 
* உலகத்தை வெல்வதை விட நம்மை நாமே வெல்வது தான் சிறந்த வெற்றி.
* எளிமையாகவும் கண்ணியமாகவும் இருப்பது தான் பண்பட்டதன் அடையாளம்.
* தடைகள் இல்லாவிட்டால், மனம் நிதானத்தை இழந்து அகந்தை கொண்டு விடும்.
* உடல், நாக்கு, மனத்தை அடக்கி ஆள்பவரே உண்மையான அடக்கம் உடையவர்.
* தான் எனும் அகந்தை இல்லாதவனை யாராலும் வெல்ல முடியாது.
* பிறரை இகழ்தல் என்பது வானை நோக்கி எச்சில் உமிழ்தலை போன்றது.
* ஒருவனுக்கு வரும் நன்மை, தீமைக்கு அவனது செயல்களே காரணம்.

No comments:

Post a Comment