Sunday 31 December 2017

விஸ்வரூபம்

Image result for விஸ்வரூப தரிசனம்

கடவுளின் தனித்தன்மையைக் குறிப்பிடும் தெய்வீக காட்சியே விஸ்வரூபம். பிரபஞ்சம் முழுவதையும் தன்னுள் அடக்கிய சர்வ வியாபக நிலையே விஸ்வரூபம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பது இதன் பொருள். 

பகவத்கீதையின் 11-வது அத்தியாயத்தில் கிருஷ்ணர் விஸ்வரூபத்தின் சிறப்பை, அர்ஜூனனுக்கு காண்பிக்கும் பகுதி இடம் பெற்றுள்ளது. தினமும் காலையில் கோயில் நடை திறந்ததும் பெருமாளைத் தரிசிப்பதை "விஸ்வரூப தரிசனம்" என்று குறிப்பிடுவர். விஸ்வரூபத்தைத் தரிசிப்பவர்கள் பெருமாளின் பூரண அருளைப் பெறுவர்.


இடம் மாறிய நிலை


சிவபெருமானைப் "பித்தா பிறைசூடி' என்று பாடியவர் சுந்தரர். இளம்பிறையைத் தலையில் அணிந்ததால் சிவனுக்கு "பிறைசூடி' என்று பெயர் இருக்கிறது. சிவபெருமான், தனது சிரசின் இடது பக்கத்தில் பிறை சூடுவது வழக்கம். அர்த்தநாரீஸ்வரராக தேவியோடு காட்சி தரும் போது சிவனின் வலப்பாகத்தில் பிறை இடம்பெற்றிருக்கும். இடப்பாகம் அம்பிகைக்கு உரியதாக இருப்பதால் அதில் மட்டும் இடம் மாறியிருக்கும்.

நடராஜர் கால் மாறி ஆடியதன் காரணம் என்ன ?

Image result for தில்லை நடராஜர்

மதுரையில் மீனாட்சியம்மனுக்கு சுந்தரேஸ்வரருக்கும் நடைபெற்ற திருமணத்தில் தேவர்களும், முனிவர்களும் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்தவர்களை உணவு அருந்துவதற்காக சிவனும், மீனாட்சியும் அழைத்தனர். அப்போது பதஞ்சலி மகரிஷியும், வியாக்ரபாதரும் சிவனிடம், ‘‘இறைவா நாங்கள் இருவரும் தங்கள் பொன்னம்பல நடனத்தை பார்த்த பின்தான் உணவு அருந்துவது வழக்கம்,’’ என்றனர். இதைக் கேட்ட இறைவன் இவர்களின் நியமத்தை காக்கும் பொருட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலேயே திருநடனம் புரிந்து அருள்பாலிப்பதற்காக வெள்ளியம்பலத்தை ஏற்படுத்தினார். இந்த வெள்ளியம்பலத்தில் நடனமாடிய இறைவனின் திருநடனத்தை கண்டபின் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் உணவு அருந்தினர்.

மதுரையை ஆண்ட விக்ரம பாண்டியனின் மகன் ராஜசேகர பாண்டியன் என்பவன் ஆயகலைகள் அறுபத்து நான்கில் 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தான். அவன் கற்காதிருந்த ஒரு கலை, நடனம். நடராஜப் பெருமான் நடனமாடிக்கொண்டிருக்கும்போது தான் அதனைக் கற்று ஆடுவது அவருக்கே அவமரியாதை செய்வது போல ஆகாதா என்று கருதி நடனம் கற்பதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போனான். இதே காலத்தில் வாழ்ந்த கற்காற் ’சோழன் என்ற மன்னன் 64 கலைகளையும் கற்றவன் என்ற விஷயத்தை ஒரு புலவன் பாண்டியனிடம் தெரிவித்தான். அப்போதுதான் ராஜசேகர பாண்டியன், நடனம் என்பது இறைவனே நாம் உய்யும் பொருட்டு நமக்காக உருவாக்கித் தந்திருக்கும் ஒரு கலை என்பதையும், அதனை மிகச் சரியாகப் பயின்று, பக்திப் பெருக்குடன் ஆடும்போது இறைவனுக்கு நாம் சமர்ப்பிக்கும் பக்தியாகவே அது மாறும் என்றும் உணர்ந்தான். 

உடனே நடனம் கற்று முழுமையாக தேர்ச்சியும் பெற்றான். இப்படி நடனம் கற்கும்போது உடம்பெல்லாம் வலியெடுக்க, நடனக் கலையைப் பயில்வதும், அதனைத் தொடர்ந்து ஆடுவதும் எத்தகையத் துன்பகரமானது என்பதை அனுபவித்து உணர்ந்தான். அறுபத்து நாலு கலைகளையும் கற்ற நிறைவில் மதுரை வெள்ளியம்பல நடராஜரிடம் ஆசீர்வாதம் பெற வந்தான். அவரை தரிசித்ததும், நடனம் கற்பதே உடல்வலி மிகுந்த கஷ்டமான விஷயமாக இருக்கும்போது, காலம் காலமாக வலக்கால் ஊன்றி இடக்கால் தூக்கி நடனமாடி கொண்டிருக்கும் நடராஜருக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என நினைத்து மிகவும் வேதனைப்பட்டான். இதை யாரிடம் எப்படி கேட்பது? தேவர்கள் முனிவர்கள் எல்லோரும் இதைப் பற்றி பேசாமல் இருக்கும்போது நாம் எப்படி ஈசனிடம் கேட்பது என நினைத்து மனம் நொந்தான்.

இந்நிலையில் சிவராத்திரி திருவிழா வந்தது. மன்னன் நான்கு கால பூஜை முடித்து விட்டு நடராஜரின் எதிரில் நின்று, ‘ஒரே காலில் ஆடிக்கொண்டிருக்கும் இறைவா எனக்காக கால் மாறி ஆடக்கூடாதா?’ என மனம் உருகிக் கேட்டான். ‘அப்படி நீ கால் மாறி ஆடாவிட்டால் என் முன்னால் கத்தியை நிறுத்திவைத்து அதில் விழுந்து உயிர் துறப்பேன்,’ என இறைவனிடம் கண் மூடி மன்றாடினான். சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்த ராஜசேகபாண்டியன் அப்படியே மெய்சிலிர்த்து நின்று விட்டான். ஆமாம், தன்மீது வெறும் பக்தி மட்டுமல்லாமல், பாசமும் காட்டிய பக்தனுக்காக இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி ஆடினார், நடராஜப்பெருமான். அதேசமயம், ‘எனக்காக கால்மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் மதுரையிலேயே இருந்து தங்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க வேண்டும்,’ என்ற வரமும் வாங்கி விட்டான். 

அன்றிலிருந்துதான் மதுரை வெள்ளியம்பல நடராஜர் கால் மாறி ஆடும் தரிசனம் கொடுக்கிறார். மதுரை வெள்ளியம்பலத்தில் ஈசனின் கால் மாறி ஆடிய சந்தியா தாண்டவம் குறித்து பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வல்லாளசேன மன்னரின் நைக்தி செப்பு பட்டயத்தில் தொடக்கத்திலேயே காணப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீசைலம் கோயிலில் ஆனந்த தாண்டவத்தை போன்றுள்ள சந்தியா தாண்டவ சிற்பம் உள்ளது. நடராஜப் பெருமான் ஆடிக்கொண்டே இருப்பதால்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறுமுறை திருமஞ்சனம் நடக்கும். சித்திரை மாத திருவோண நட்சத்திர தினம், ஆனி மாத உத்திரம் நட்சத்திர நாள், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள் ஆகிய திருமஞ்சனங்கள் நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுபவை. மற்றவை வளர்பிறை திதியை வைத்து நடப்பவை. அதாவது மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசியில் திருமஞ்சனம் நடக்கும். தன் பக்தனுக்காக கால்மாறி ஆடிய ஈசனை நாமும் தரிசித்து வளங்கள் பெறுவோம்.

தில்லை மூவாயிரவர் என்போர் யாவர் ?

Image result for தில்லை நடராஜர்

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பெருமானைப் பூஜித்துக் கொண்டிருக்கும் அர்ச்சகர்கள் தில்லைவாழ் அந்தணர்கள், தீக்ஷிதர்கள், தில்லை மூவாயிரவர் என்று பலவாறு அழைக்கப்படுகின்றனர். தில்லை மூவாயிரவருடன் நடராஜரும் ஒருவராகவே இருக்கின்றார். இவர்கள் தங்களுக்கு முறை வைத்துக் கோயிற் பூசனையைச் செய்து வருகின்றனர். தமது வாழ்வுக்கும் கோயில் நடைமுறைகளுக்கும் வேண்டிய உயரிய திட்டங்களை வகுத்து அதில் கூறப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடந்து வருகின்றனர். ஆதியில் இவர்கள் சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டு திருமூலட்டானரையும், ரகசியத் தானத்தையும் மந்திர ரூபரான நடராஜரையும் பூஜித்து வந்தனர். 

பின்னர், சிற்றம்பலத்தைப் பெருமான் எல்லோரும் காண தோற்றுவித்து, அதில் அர்ச்சாமூர்த்தியாக எழுந்தருளிய நடராஜரை முதன்மையான மூர்த்தியாகக் கொண்டு தில்லைப் பெருங்கோயிலைப் பூஜித்து வருகின்றனர். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, இவர்கள் எல்லோரும் சிவகணநாதர்களாகத் தோன்றியதைக் கண்டு பாடிப் பரவினார் என்று கூறப்படுகின்றது. சிவனடியார்களை வரிசைப்படுத்திச் சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகை தில்லைவாழ் அந்தணரை முதலிற் கொண்டே தொடங்குகிறது. இந்நாளில் இவர்கள் 500க்கும் குறைவாகவே உள்ளனர். பதஞ்சலி முனிவர் தமக்கு வகுத்துத் தந்த பூஜாபத்ததிகளின் வழியாகவே நடராஜரைப் பூஜித்து வருகின்றனர். இப்பூஜை முறைகள் பெருமளவு மகுடாகமத்தையொட்டியுள்ளதாகக் கூறுகின்றனர்.

தில்லைச் சிற்றம்பலத்துள் பூஜிக்கும் முறையுள்ள தீக்ஷிதரை நடராஜராகவே போற்றி வணங்கி விபூதி பெற்றுக் கொள்ளுகின்றனர். பெரிய புராண தொடர் சிற்பங்களில் இவர்கள் மூவாயிரவரைக் குறிக்கும் வகையில் மூன்று திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தில்லையைப் போற்றும் பனுவல்களில் நடராஜருக்கு ஒப்ப, தில்லை மூவாயிரவரின் பக்தியும் பெருமையும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

பதஞ்சலி - வியாக்ரபாதர் - ஜைமினி :

ஆதியில் தில்லையம்பலத்தில் ஆடிக் கொண்டிருக்கும் நடராசப் பெருமானின் பிரபஞ்ச இயக்கத்திற்கான பஞ்சகிருத்திய பரமானந்தத் தாண்டவம் அதிசூட்சும நிலையில் நடந்து வந்தது. அந்த தாண்டவத்தைப் பலர் தமது அரிய தவமுயற்சியால் இறையருள் பெற்றுக் கண்டுகளித்தனர். அவர்களில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி ஆகியோர் முதன்மை பெற்றவர்கள். அவர்களுடைய வேண்டுகோளின்படியே பலரும்காண அங்கே சிற்சபை தோன்றியது. 

பதஞ்சலி :

அனந்தனில் அரிதுயில் கொண்டிருந்த விஷ்ணு ஆனந்தப் பரவசராகி முகம் பொலிவெய்தி ஆனந்தக் கண்ணீர் பெருகக் கைகளைக் கூப்பினார். இந்த வியப்புக்கு என்ன காரணம் என்றான் அனந்தன். திருமால், பெருமானின் ஆனந்தக்கூத்தை எண்ணி மகிழ்ந்ததால் உண்டானது என்றார். அனந்தனுக்குத் தானும் அக்காட்சியைக் காண விருப்பம் உண்டானது. திருமாலிடம் விடைபெற்றுக் கொண்ட அவன் கயிலை மலைக்குச் சென்று தவம் புரிந்தான். சிவபெருமான் அவனிடம் ‘அத்திரி-அனசூயா தம்பதியருக்கு மகனாகப் பிறந்து தவம் செய்வாய்’ என்றார். அவன் சிறிய பாம்பு வடிவுடன் விண்ணில் பறந்து அத்திரி ஆசிரமத்தை அடைந்தான். அவ்வேளையில் அனசூயாதேவி ருது ஸ்நானம் செய்து விட்டு கைகளில் நீரை அள்ளியெடுத்தாள். 

அனந்தன் அவளது கரங்களில் வீழ்ந்தான். அவள் பாம்பென்று பதறி அவளது கைகளை விலக்க, பாதத்தில் வீழ்ந்த அவன், அவளைத் துதித்தான். அங்கு வந்த அத்திரி அவனுக்குப் பதஞ்சலி என்று பெயர் சூட்டினார். அவன் அவரிடம் தன்னை மகனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். அத்திரியும், அனசூயாதேவியும் மகிழ்ந்து, அவனை மகனாக ஏற்று வளர்த்து வந்தனர். அவன் உரிய வயதை எய்தியபோது, அவனுக்கு உபநயனம் செய்வித்து மந்திரோபதேசமும் செய்து வைத்தார். அவன் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தில்லைவனத்தை அடைந்தான். தமக்கு முன்னமேயே அங்கு வந்து தவம் செய்து கொண்டிருந்த வியாக்ரபாதருடன் சேர்ந்து கொண்டான். 

அங்கு மூலட்டானரை வழிபட்டு மகிழ்ந்ததுடன் பாம்பரசர்களால் அங்கு நிறுவப்பட்டிருந்த அனந்தேஸ்வரர் சிவலிங்கத்தைக் கண்டு பூஜை செய்து மகிழ்ந்திருந்தான். தில்லையில் நடைபெற்று வரும் பூஜை முறைகளை வகுத்தளித்தவர் அனந்தனின் அவதாரமான பதஞ்சலியேயாவார். அவர் வகுத்தபடியேதான் இப்போதும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பதஞ்சலியின் வடிவம் ஆலயத்தில் உள்ளது.

வியாக்ரபாதர் :

மத்தியந்தின முனிவரின் குமாரர் மாத்யானந்தினர். இவர் இளம் வயதிலேயே தந்தையிடம் சகல ஞானங்களையும் கற்றார். அவற்றின் மூலம் சிவபூஜையே உயர்ந்த பூஜை எனக்கண்டு தெளிந்து, பல்வேறு தலங்களில் வழிபாடு செய்தவாறே தில்லைக்கு வந்தார். மூலட்டானரைக் கண்டு நாள்தோறும் பூஜை செய்து மகிழ்ந்திருந்தார். அவர் பூஜைக்கென பூச்சி அரிக்காத, வண்டு மொய்க்காத மலர்களைப் பெற வேண்டி அதிகாலையிலேயே நந்தவனங்களுக்குப்பூப்பறிக்கச் செல்வது வழக்கம். நந்தவனங்களில் மரக்கிளைகளில் ஏறும்போது பனியால் கால் வழுக்கியதுடன், இருள் பிரியாத நேரத்தில் பூக்களைத் தேடிப் பறிப்பதும் துன்பமாக இருந்தது. அதனால் மிகுந்த வருத்தம் அடைந்தார்.

இறைவன் அவரது துன்பத்தை மாற்ற வேண்டி இடப வாகனத்தில் காட்சி கொடுத்தார். மாத்யானந்தினர் நாள்தோறும் அதிகாலையில் சிவபூஜைக்கு வேண்டிய மலர்களைப் பெற, எளிதாக இருக்க புலிக்கு இருப்பது போன்று இரவிலும் பார்வை நல்கும் கண்களும், வழுக்காது மரங்களில் ஏற, புலி போன்று நகமும், தசைப்பற்றுகளும் கொண்ட கை-கால்களைப் பெற்றார். புலி போன்ற பாதங்களைப் பெற்றதால் வியாக்ரபாதர் என்று பெயர் பெற்றார். இவர் வசிஷ்டரின் சகோதரியை மணந்தார். அவர்களுக்குப் பிறந்தவரே உபமன்யு முனிவர். ஒரு சமயம் உபமன்யு பால் வேண்டி அழுதபோது, இறைவன் அவருக்காகப் பாற்கடலையே வரவழைத்துத் தந்தார். 

பாற்கடலின் நினைவாக தில்லையில் அமைந்ததே திருப்பாற்கடல் தீர்த்தமாகும். உபமன்யு முனிவர், முனிவர்களில் உயர்ந்தவராகப் போற்றப்படுகின்றார். வியாக்ரபாதர் தில்லைவனத்தில் மூலட்டானரை வணங்கி வந்ததுடன், திருப்புலீச்சரம் என்னும் ஆலயத்தையும், அதன் முன்பாகப் புலிமடு என்னும் தீர்த்தத்தையும் தோற்றுவித்தார். அத்தீர்த்தமே இந்நாளில் இளமையாக்கின தீர்த்தம் என வழங்குகின்றது. புலிக்கால் முனிவர் வணங்கிப் பேறுபெற்ற இடமாதலின் வியாக்ரபுரம், திருப்புலீச்சரம், பெரும் பற்ற புலியூர், புலியூர் என்னும் பெயர்களால் சிதம்பரம் அழைக்கப்படுகிறது. தில்லையில் இரண்யவர்மனைக் கொண்டு பெரும் திருப்பணிகளை நடப்பித்தவர் வியாக்ரபாதரேயாவார். 

தில்லையில் வியாக்ரபாதர் ஜைமினி, பதஞ்சலி ஆகிய மூவரும் ஒரே பீடத்தில் அமைந்த உலாத் திருமேனி உள்ளது. தைப்பூசத்திற்கு முன்பாக ஒன்பது நாட்கள் மூவரும் திருமூலட்டானரை பூஜிக்கும் ஐதீக விழா நடைபெறுகின்றது. பத்தாம் நாள் நண்பகலில் மூவருக்கும் நடனக்காட்சி அருளும் ஐதீக விழா நடைபெறுகின்றது. மூவரையும் சிற்சபைக்கு முன்பாக எழுந்தருளுவித்து தீபாராதனை செய்து அவர்களுக்கு குஞ்சிதபாதத்தைச் சூட்டுகின்றனர்.சிவபெருமானைப் பூஜிப்பவர்கள் யாவரும் சிவமாகவே போற்றப்படுகின்றனர். அவர்களை நடமாடும் சிவம் என்று சமய இலக்கியங்கள் கொண்டாடுகின்றன. தில்லையில் பூஜை செய்யும் தில்லை மூவாயிரவர் சிவகணங்களாகவே திருஞானசம்பந்தருக்குத் தோற்றம் அளித்ததாக பழைய நூல்கள் கூறுகின்றன. 

தில்லைப் பெருங்கோயிலில் சிற்சபையில் ஆறுகால பூஜைகளையும் மேற்கொண்டு நடத்தி வைக்கும் அர்ச்சகரை பூஜை முறைக்காரர் என்று அழைக்கின்றனர். பூஜை முறைக்காரரை குடை, தீவட்டி, சகிதமாக வீட்டில் இருந்து அழைத்து வந்து பூஜைகளை ஏற்கச் செய்வதுடன், பூஜை முடிந்ததும், மேற்படி மரியாதையுடன் வீட்டில் திரும்பக் கொண்டு விடும் வழக்கம் இருந்து வந்துள்ளது. முன்னாளில் பல்லக்கு பரிவாரத்துடன் பூஜைக்கு அழைப்பதும், பூஜைக்குப் பிறகு வீட்டிற்கொண்டு விடுவதுமாக இருந்ததைத் தில்லை மூவாயிரவர் வழியில் வந்த சித்தாந்த ஆசிரியரான உமாபதி சிவாச்சாரியாரின் வரலாற்றால் அறிய முடிகிறது. அர்த்தஜாமத்திற்குப் பிறகு முறைக்காரர் சண்டீசர் சந்நதிக்கு அருகில் நின்று விபூதி வழங்குவார். அதை பூஜை முறைக்காரர் விபூதி என்பர். நடராஜரே பூஜைக்காரர் வடிவில் இருந்து விபூதி வழங்குவதாகக் கருதுகின்றனர். இந்த விபூதி மிக உயர்ந்ததாகப் போற்றப்படுகின்றது.

காதல் கலப்புத் திருமணமும், தோஷ அமைப்புகளும் ?

Image result for hindu god marriage

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. பருவ வயது வந்தவுடன் இந்தக்கால அமைப்பின்படி ஒரு தொழில் அல்லது வேலையில் சேர்ந்தவுடன் திருமணம் பற்றிய பேச்சுவார்த்தையைப் பெற்றோர்கள் தொடங்குகிறார்கள். இதில் நல்ல ஜாதகம் பார்த்து நாள், நட்சத்திரம், முகூர்த்தம் வைத்து பெரியோர்கள் ஆசியுடன் நடக்கும் திருமணங்கள் ஒருவகை. 

ஆண், பெண் இருவரும் காதலித்து பெரியவர்கள் சம்மதத்துடன் நடக்கும் திருமணங்கள் ஒருவகை. இரண்டு குடும்பங்களின் சம்மதம் இல்லாமல் அவர்களே செய்துகொள்ளும் திருமணமும் உண்டு. பஞ்சாயத்து, போலீஸ், கோர்ட் என்று திசைமாறிய திருமணங்கள் உண்டு. இப்படி பலவகைகளில் அவரவர் கல்யாண வாழ்க்கையை கிரக சேர்க்கை அமைப்புகள் நடத்தி வைக்கின்றன என்றாலும் சமீபகாலமாக அதிக சதவிகிதத்தில் கல்யாணங்கள் பல இடையூறுகள், வழக்குகள், பிரச்னைகளில் சிக்கி நிம்மதி இழப்பது அதிகரித்துள்ளது. இதில் காதல், கலப்புத் திருமணங்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பருவம் வந்த அனைவருமே காதல் செய்வதில்லை.
காதல் செய்த அனைவருமே மணம் முடிப்பதில்லை.
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை.

இந்த ஆழமான அர்த்தமுள்ள வரிகள் இன்றைய இளம் நெஞ்சங்களின் இருபாலர்கள் இடத்திலும் கிரக நிலைகள் என்ற அமைப்பில் கோள்களின் கோலாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காதல், கலப்புத் திருமணங்கள் என்பது மிகவும் வினோதமானது. கண்டதும் காதல் அல்லது பல வருட காதல். மாணவ பருவத்திலேயே காதல். பணி செய்யும் இடங்களில் காதல். முதலாளி, தொழிலாளி இடையே காதல் என்று பலவகையாக காதல் உணர்வுகள் அமைகின்றன. அந்தஸ்தில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தில் இருக்கும் இருவர் காதல் மூலம் இணைகிறார்கள். இதில் ஜாதி, இன, மத, மொழி, கலாசாரம், ஏன் வயது வித்தியாசம்கூட காதல் திருமணம் செய்யும்போது அந்த பருவ உணர்ச்சியும், கோள்களின் நிலையும் எதையும் சிந்திக்க விடாமல் அவசர கோலத்திலேயே முடிவு எடுக்கச் செய்துவிடுகின்றன.

தாய், தந்தையர் தம் மகன், மகள் பற்றி பல மனக்கோட்டைகளை கட்டி வைத்திருப்பர். அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், பெரிய படிப்பு, வசதியான இடம் என்று ஏதோ பெரிய கற்பனையில் இருப்பார்கள். ஆனால், திடீரென்று ஒருநாள் பெற்றோரிடம் வந்து தாம் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் இளைஞர்கள் தெரிவிப்பார்கள். இன்னும் சிலர் பதிவுத் திருமணம் செய்துவிட்டு வந்து சொல்வார்கள், பெற்றோர்களின் கனவுகளை சிதைப்பார்கள். இதைத்தான் வினைப்பயன், கர்மா, கிரகாசாரம் என்று குறிப்பிடுகிறோம். காதல் திருமணங்கள் பற்றிய கிரக சேர்க்கை, அமைப்புகள், சார பரிவர்த்தனைகள் என்பனவற்றை ஜோதிட சாஸ்திரம் நமக்கு அறிவுறுத்துகிறது. சில கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. 

அதேநேரத்தில் காதல் திருமணம் செய்யும் அமைப்பு இருந்தும் அவர்கள் காதலில் ஈடுபடாமல் இருக்கலாம் அல்லது காதலிப்பது ஒருவரை, மணந்துகொள்வது வேறொருவரை என்றும் இருக்கலாம். நிறைவான மணவாழ்க்கைக்கு நம் நடத்தைதான் முக்கிய காரணம். இந்த நடத்தை என்ற குணத்தை தருவதில் கிரகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அதேநேரத்தில் தாய், தந்தை வளர்ப்பு முறையும் உள்ளது. தற்காலத்திய சமூக சூழ்நிலைகள், ஆண், பெண் இருவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவதும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதும், பழகுவதும், ெதாலைத்தொடர்பு சாதனங்களின் விஞ்ஞான வளர்ச்சியும் பக்குவமற்ற நிலையும், இனக்கவர்ச்சியும் இதுபோன்ற காதல் விவகாரங்களில் சிக்குவதற்கு காரணமாக அமைகின்றது.

காதலிப்பதற்கும், திருமணம் செய்வதற்கும் வயதுதான் முக்கிய காரணம். அந்தக் காலகட்டத்தில் கிரக அமைப்புகள், தசா புக்திகள், கோச்சார நிலை போன்றவை பாதகமாக இருந்தால் காதல் வயப்பட வைக்கும், மனம் சிந்திக்கும் திறனை இழக்கும். தன்னுடைய கட்டுப்பாட்டை இழப்பார்கள். தாய், தந்தை, உடன் பிறந்தோர், சொந்த பந்தம் என்று எல்லாவற்றையும் துறந்து, துச்சமென தூக்கி எறிந்துவிட்டு காதல் திருமணம் செய்துகொள்வார்கள். ஜாதகக் கட்டத்தில் 12 வீடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை. அந்த வகையில் 2, 7, 8 ஆகிய இடங்களும் சுக்கிரன், செவ்வாய், சந்திரன், புதன் போன்ற கிரக அமைப்புச் சேர்க்கையும் திருமண வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுகின்றன. இந்த விஷயத்தை நாம் ராசி சக்கரத்தில் மட்டும் பார்க்காமல் அம்சம் என்று சொல்லக்கூடிய நவாம்ச சக்கர அமைப்பையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். நவாம்ச அமைப்பில் நிறை, குறைகள் ஒருவரின் இல்லற வாழ்க்கையை அப்படியே மாற்றி அமைத்து விடுகின்றது.

காதல் கலப்பு திருமண அமைப்புகள் :

திருமண வாழ்க்கையில் குழப்பங்கள், சிக்கல்கள், மனமுறிவு, வழக்கு, விவாகரத்து போன்ற துயரங்கள் ஏற்படுவதற்கு சில கிரக அமைப்புகளே மூலகாரணம். இந்த விஷயத்தில் குரு இருக்கும் இடம், சனி பார்க்கும் இடம் தன, குடும்பஸ்தானம் எனும் இரண்டாம் இடம், களத்திரஸ்தானம் எனும் ஏழாம் இடம் ஆயுள், மாங்கல்யஸ்தானம் எனும் எட்டாம் இடம் ஆகியவை முக்கியமான அம்சங்களாகும்.

(1) எந்த லக்னமாக இருந்தாலும் குரு 2, 7, 8, 12 ஆகிய இடங்களில் தனித்து இருப்பது.

(2) இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது, ஏழாம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது.

(3) களத்திரகாரகன் சுக்கிரனுடன் ராகு அல்லது கேது இருப்பது.

(4) ஏழாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்து, லக்னாதிபதி, சுக்கிரன் நீசம் அல்லது மறைவுஸ்தானத்தில் இருப்பது.

(5) ஏழாம் அதிபதியுடன் சுக்கிரன் சேர்க்கப்பெற்று இருவரில் யாராவது கேது சாரம் பெறுவது.

(6) பன்னிரண்டாம் இடத்தில் குரு இருப்பது

(7) ஏழாம் இடத்தில் செவ்வாய், ராகு அல்லது கேதுவுடன் இருப்பது.

(8) லக்னத்திற்கு 6ம் அதிபதி 7ல் இருப்பது, 8ம் அதிபதி 7ல் இருப்பது.

(9) லக்னாதிபதி, ஏழாம் அதிபதி, சுக்கிரன் இந்த மூவரும் ராசி அல்லது அம்சத்தில் சம்பந்தம் பெறுவது.

(10) லக்னம், இரண்டு, ஐந்து, ஏழு, எட்டு ஆகிய இடங்களில் சந்திரன், சனி சேர்க்கை, சம்பந்தம் பெறுவது, உடன் சுக்கிரன் சேருவது.

(11) லக்னத்திற்கு ஏழுக்குடையவன் நவாம்சத்தில் குருவின் வீட்டில் இருப்பது.

(12) சனி, சுக்கிரன், கேது ஆகியோர் ஏழாம் இடத்திற்கோ, ஏழாம் அதிபதிக்கோ சம்பந்தம் பெறுவது.

(13) ஏழாம் அதிபதி ஆறு, எட்டுக்குடையவருடன் சேர்க்கை பெறுவது.

(14) லக்னம், இரண்டு, ஐந்து, ஏழு, எட்டு ஆகிய இடங்களில் நீச்ச கிரகம் இருப்பது.

(15) பொதுவாக 5ம் இடம், 5ம் அதிபதி, சந்திரன், புதன், ஆகியவை நல்ல நிலையில் இல்லாதிருப்பது, இவற்றிற்கு நீச்ச கிரக சேர்க்கை, பார்வை இருப்பது.

(16) சந்திரன் ஏழில் இருப்பது.

(17) களத்திரகாரகன் சுக்கிரன், ஆன்மகாரகன், சூரியன், மனோகாரகன் சந்திரன் ஆகிய மூவர் 2, 7, 8 ஆகிய இடங்களில் சம்பந்தம் பெற்றிருப்பது.

(18) பெண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 4ல் சனி, சுக்கிரனுக்கு 4ல் ராகு, சுக்கிரனுக்கு 10ல் சனி என்ற அமைப்பு இருப்பது. 

(19) பெண் ஜாதகத்தில் 4, 7, 8, 12ல் செவ்வாய்கேது சேர்க்கை இருப்பது.

(20) பெண் ஜாதகத்தில் 4, 7, 8, 12ல் சுக்கிரன்செவ்வாய் சேர்க்கை.

(21) பெண் ஜாதகத்தில் செவ்வாய், கேதுவும், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேதுவும் சேர்ந்து இருந்தால் மனக்கசப்பு, இருதார யோகம்.

(22) நான்காம் இடம் என்பது சுகஸ்தானம், வசிப்பிடத்தைக் குறிக்கும். வயிற்றையும் குறிக்கும். இந்த வீட்டில் பெண் ஜாதகத்தில் நீச்ச கிரகங்கள் இருப்பது சரியல்ல. நான்காம் வீட்டை 6, 8, 12க்குடையவர்கள் பார்ப்பதும், சனி, தேய்பிறைச் சந்திரன் பார்ப்பதும் நடத்தை, சந்தேக குணத்தால் இல்லறம் கசக்கிறது.

(23) லக்னாதிபதி எந்தக் கிரகமாக இருந்தாலும் நீசம் அடையாமல் இருப்பது நல்லது. லக்னாதிபதி சனி அல்லது சுக்கிரன் வீட்டில் இருந்தாலும் அல்லது சார, பரிவர்த்தனை தொடர்பு இருந்தாலும் அந்த ஜாதகர், ஜாதகிக்கு சிற்றின்பத்தில் இச்சை அதிகம் இருக்கும்.

(24) ஆண் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சனி, புதன் சேர்க்கை, சனி, சந்திரன் சேர்க்கை பெற்றால் விதவைக்கு வாழ்வு கொடுப்பான் அல்லது விதவைப் பெண்ணின் தொடர்பு ஏற்படும்.

(25) பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சந்திரனும், சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் முதுமை தோற்றம் கொண்ட கணவர் அமைவார். அல்லது இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட வேண்டியிருக்கும்.

(26) லக்னத்திற்கு 12ம் இடமான அயன, சயன, போகஸ்தானத்தில் நீச்ச கிரகம் இருந்தாலும் தீய ஸ்தான கிரகங்கள் பார்த்தாலும் இல்லறம் இனிக்காது.

(27) பொதுவாக லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டை புத்திரஸ்தானம் என்று சொல்வார்கள். இது தவிர அந்த வீட்டிற்கு பல முக்கியமான காரக அம்சங்கள் உள்ளன. இந்த வீட்டில் தீய, நீச கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. குறிப்பாக சனி 5ல் இருப்பது திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல. 

குரு நின்ற இடம் பாழ், சனி நின்ற இடம் விருத்தி, குரு பார்த்த இடம் விருத்தி, சனி பார்த்த இடம் பாழ் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும். சனி 5ம் வீட்டில் இருந்தபடி களத்திர ஸ்தானமான 7ம் வீட்டையும், தன, குடும்ப, வாக்குஸ்தானமான 2ம் வீட்டையும் பார்ப்பதால் திருமண உறவில் சிக்கல், வெறுப்பு, கசப்பு, நெறி தவறிய வாழ்க்கை, விவாகரத்து, ஜீவனாம்ச வழக்கு, தன் வாயாலே கெடுவது, அற்ப சிநேகிதம் போன்ற பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு இந்த 5ம் வீட்டில் இருக்கும் சனி காரணமாகின்றது. மேலும் 2, 7 ஆகிய வீடுகள் பாதிக்கப்பட்டு இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகிறது. இந்த அமைப்பு பல்வேறு ஜாதகங்களில் மிகச்சரியாக ஒத்துப் போகிறது. ஆகையால் இந்த சனி பார்வை உள்ள ஜாதகங்கள் காதல் கலப்புத் திருமணத்தில் ஈடுபடுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.

சூட்சுமமான விஷயங்கள் :

நம் வாழ்க்கையில் நடைபெறுகின்ற சம்பவங்கள் எல்லாம் நம்முடைய முன்ஜென்ம கர்ம வினை காரணமாகவே நடைபெறுகின்றது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இந்த விஷயங்களை நமக்கு ஜோதிடக்கலை மிகவும் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆனால், ஜோதிட சுவடிகள் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய பெரும்பாலான விஷய ஞானங்கள் நமக்கு கிடைக்கவில்லை. காரணம் நாம் அனுபவிக்க வேண்டியவற்றை அனுபவித்தே தீரவேண்டும் என்பது தர்ம சாஸ்திர வழிமுறையாகும். இருந்தாலும் பெற்றோர் பார்த்து செய்கின்ற திருமணமாக இருந்தாலும், காதலித்து செய்துகொள்கின்ற திருமணமாக இருந்தாலும் வாழ்க்கை பிரச்னை என்பது ஒன்றுதான். இதில் கிரகங்கள் நம் மனதை மாற்றி ஆட்டுவிக்கின்றது என்பதில் ஐயமில்லை. 

பள்ளி பாடக்கணக்கில் விடை காணுவதற்கு பல சூத்திர முறைகள் உள்ளதுபோல், வாழ்க்கை பாடக்கணக்கில் வெற்றி பெறுவதற்கு ஜோதிட சாஸ்திரம் பல்வேறு சூத்திர முறைகளை நமக்கு தந்துள்ளது. அதை சரியான சாஸ்திர, அனுபவ ஞானம் உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து பெரிய சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.

ஆண், பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாம் இடம் மிக முக்கியமான இடமாகும். இந்த இடம் ஆயுள், மாங்கல்யம் என்ற இரண்டு முக்கிய அம்சங்களை பற்றி அறிந்துகொள்ளும் இடமாகும். இந்த எட்டாம் இடத்தின் அதிபதி எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ, அந்த நட்சத்திர அதிபதி எந்தக் கிரகமோ அந்த கிரகத்தினுடைய நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் தவிர்த்து விடுவது நல்லது. 

உதாரணமாக ஒருவர் கன்னி லக்னத்தில் பிறந்தால் அவருக்கு எட்டாம் அதிபதியாக செவ்வாய் அமைவார். இந்த செவ்வாய் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரத்தில் இருப்பதாக எடுத்துக்கொண்டால், இந்த திருவாதிரை நட்சத்திரம் ராகுவின் நட்சத்திரமாகும். அதன்படி இந்த ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் தவிர்ப்பது நன்மை தரும். இந்த விஷயம் பல்வேறு ஜோதிட சூத்திரங்களில் ஒன்றாகும். இந்த அமைப்பு அனுபவ பூர்வமாக பல்வேறு ஜாதகங்களில் பொருந்தி வருகின்றது.

கிரக தோஷ அனுபவ ஜாதகங்கள் :

ஜாதகம் (1): கன்னி லக்னம், ஏழில் தனித்த குரு, எட்டில் சந்திரன்கேது, பதினொன்றில் சனி. திருமண தோஷ அமைப்பு உள்ளதால் காதல் வலையில் சிக்கி, அதன்பின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் புரிந்து பல துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதகம் (2): தனுசு லக்னம், எட்டாம் அதிபதி சந்திரன் ஏழில். ஏழுக்குடைய புதன் நீச்சம். மூன்றில் சனி இருந்து ஐந்தாம் வீட்டைப் பார்ப்பது  இந்த அமைப்பு வீட்டை விட்டுச்சென்று காதல் திருமணம் செய்ய வைத்தது.

ஜாதகம் (3): ரிஷப லக்னம். ஆறு, ஏழுக்குடைய சுக்கிரன், செவ்வாய் குடும்பஸ்தானத்தில் இரண்டாம் அதிபதி புதன்கேது சாரம் பெற்று கேதுவுடன் இணைந்து இருப்பது. மேலும் நவாம்சத்தில் சுக்கிரனுடன் கேது சம்பந்தம். இந்த அமைப்பால் காதலித்து, திருமணம் செய்து, விவாகரத்து ஆகிவிட்டது.

ஜாதகம் (4): மீன லக்னம் ஆறாம் அதிபதி சூரியன் ஏழில், ஏழாம் அதிபதி புதன் எட்டில். சனி பதினொன்றில் இருந்து ஐந்தாம் வீட்டைப் பார்ப்பது. மேலும் சில பாதக அமைப்புகளால் காதல் திருமணம் செய்து வழக்கில் பிரிந்து வாழ்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதைப்போன்ற பல்வேறு ஜாதகங்களை அனுபவ பூர்வமாக பார்க்கின்றபோது கிரக தோஷ அமைப்புகள் அதனதன் வேலையை செய்வது தெளிவாகத் தெரிகிறது. ஆகையால் பெற்றோர்கள் அதற்குரிய பருவ வயது காலகட்டத்தில் ஜாதக கட்ட அமைப்புகளை தெரிந்துகொண்டு அதற்குரிய கிரக சாந்தி பரிகாரங்களை செய்வதுடன் பிள்ளை களின் செயல்பாடுகள், நடைமுறைகளில் கவனம் செலுத்தி அவர்களின் நடவடிக்கைகளை தெரிந்து அவர்களை நல்வழிப்படுத்த முயற்சிக்கலாம்.

https://play.google.com/store/apps/details?id=com.app.tntemples&hl=en

நமக்கு எது நிகழ்ந்தாலும், அதிலும் ஒரு நன்மை இருக்கின்றது

shiva_markateyan

இரண்டு அணில்கள் நண்பர்களாக இருந்தனர். ஒருநாள் இருவரும் மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலோ சதா காலமும் கடவுளை பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கும். கடவுள் பக்தி அதிகம். 

தன் நண்பரான மற்றொரு அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே சுத்தமாக கிடையாது. திட்டமிட்டு செயல்புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும். அத்துடன் மற்ற அணில்களைக் கேலி செய்வது வழக்கமாகக் கொண்டிருந்தது. 

அணில்களுக்கிடையே விளையாட்டு சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பக்திமான் அணில் பிடி வழுக்கி மரத்தில் இருந்து கீழே விழுந்தது. பெரிதாகக் காயம் இல்லை என்றாலும் வயிற்றில் லேசான கீறல்கள்....உடனே அந்த அணில் கடவுளே பெரிய ஆபத்தில் இருந்து என்னை காப்பாற்றியதற்கு நன்றி என்றது.

இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணி விழுந்து விழுந்து சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதற்காக உன்னைத் கீழே தள்ளிவிட்டாரென்று கொஞ்சம் கேட்டு சொல்லேன் என்று கிண்டலடித்தது. 

பக்தியுள்ள அணில் கடவுளை முழுமையாக நம்பும் நாங்கள் எல்லாம் துன்பப்பட்டாலும் மாண்டுப்போவதில்லை. மீண்டுவருவோம். அதற்கும், ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்றது. 

ஆமாம்! கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுறதில்லை மீண்டும் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு தன் நண்பனை வேதனையோடு பார்த்தது. 

பக்திமான் அணில் கண்களை மூடி மீண்டும் கடவுளை வேண்டியது இந்த அவமானத்திற்கு ஏதுவாக நான் ஏதேனும் தவறு இழைத்திருந்தால் என்னை மன்னித்துவிடு என்றது. கண்களைத் திறக்கும் போது காத்திருந்தது ஒர் அதிர்ச்சி. கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கிவிட்டது. 

அதற்குப் பக்கவாட்டில் ஒரு பெரிய பாம்பு ஒன்று தன் நண்பனை நெருங்கிவந்துகொண்டிருந்தது. ஹே ஹே...உன் பக்கத்தில் பாம்பு என்று கீழிருந்து கத்தியது. ஆனால் அதற்குச் சற்றும் காதில் விழவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த நண்பன் அணிலை லபக்கென்று கவிக்கொண்டது. 

தன் நண்பன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் காரணம் உள்ளது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப்பட்டிருந்தது. 

சில நேரத்தில் நாம் தடுமாறி விழும்போது உலகம் அதைக் கேலியாய் சிரிக்கலாம். அது நம்முடைய உயிரைக் காப்பதற்காக சிறு வலியாகக் கூட இருக்கலாம். நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்குத் தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வாழ்க்கை என்றும் இன்பமே.....

https://play.google.com/store/apps/details?id=com.app.tntemples&hl=en

ஒன்பது உணர்வுகளின் நாயகி


அம்பிகை ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் நவரச நாயகியாகத் திகழ்கிறாள். அம்பாள் தவக்கோலத்தில் சிவனை பூஜிக்கும் போது சாந்தம் நிறைந்தவளாகத் திகழ்கிறாள். சிவநிந்தை புரியும் தீயவர்களைக் கண்டால் மனம் வெறுக்கிறாள். அசுரர்களை வதம் செய்யும் போது, வீரத்துடன் போர் புரிந்து வெற்றி கொள்கிறாள். சுடலையாண்டியாக சிவன் இடுகாட்டில் நள்ளிரவில் நடனமிடுவதைக் கண்டால், மென்மையால் பயம் கொள்கிறாள். தர்மத்தை மறந்து அதர்ம வழியில் நடக்கும் அசுரர்களிடம் இருந்து உயிர்களைக் காக்க ஆவேசத்துடன் கோபம் கொண்டு எழுகிறாள். 

பாற்கடலில் எழுந்த நஞ்சைக் கண்டு அஞ்சாமல் அதையும் ஏற்ற சிவனின் செயல் கண்டு ஆச்சரியம் கொள்கிறாள். சிவனின் உடலில் சரிபாதி அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தபோது, "சிருங்காரம்' என்னும் காதல் சுவையோடு இறைவனோடு மகிழ்ந்தாள். கனிக்காக போட்டியிட்டபோது, அம்மையப்பரே உலகம் என வலம் வந்த கணபதியைக் கண்டு ஹாஸ்யத்துடன் (புன்னகை) சிரித்தாள். இரக்கம் கொண்டு உயிர்களைக் காக்க ஓடி வரும் போதெல்லாம் கருணை முகிலாக அருள்மழை பொழிகிறாள். 

இந்த உணர்வுகள் அனைத்தும் மனிதர்களிடமும் உள்ளதை அவள் பிரதிபலிக்கிறாள். குணங்களே இல்லாத அந்த குணவதி, தன் பக்தர்களுக்காக இறங்கியும், இரங்கியும் வந்து இந்த நவகுணங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.

கணபதிக்கு இல்லை கட்டுப்பாடு


சிவன், அம்பிகை வழிபாட்டில் ஆசாரம், நியமம் என கட்டுப்பாடு பல உண்டு. அதைச் சரிவர கடைபிடிப்பது அவசியம். சிவனுக்கும், நந்திக்கும் குறுக்கே போகக் கூடாது. சிவ வழிபாட்டில் "இங்கே தான் நிக்கணும்! இப்படி தான் நமஸ்காரம் செய்யணும்! இன்ன பூ தான் விசேஷம்' என்றெல்லாம் நியதி பல உண்டு. "சிவசொத்து குலநாசம்' என்ற பழமொழியைக் கேட்டாலே சிலருக்கு அடி வயிற்றில் புளி கரைத்தது போலாகி விடும். அம்பிகைக்குரிய ஸ்ரீசக்ர பூஜையில் கொஞ்சம் தவறு நேர்ந்து விட்டாலும் கூட, கெடுதல் உண்டாகி விடும் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், விநாயகர் வழிபாட்டில் கட்டுப்பாடு எதுவும் கிடையாது. பக்தரை எதிர்பார்த்து வீதியெங்கும் வீற்றிருப்பவர் அவர். எளிய அருகம்புல், எருக்கம்பூவைச் சாத்தி வழிபட்டால் கூட போதும். பரம சந்தோஷத்துடன் அருளை வாரி வழங்கி விடுவார்.

பாடியதால் "பேச்சு' வந்தது


கலாவல்லியாகிய சரஸ்வதியின் அருள்பெற்றவர்களில் குமரகுருபரர் குறிப்பிடத்தக்கவர். இவருக்கு காசியில் மடம் ஒன்று கட்டும் எண்ணம் எழுந்தது. அதற்கான அனுமதியைப் பெற அங்கிருந்த சுல்தானை நேரில் சந்திக்க வேண்டிய கட்டாயம் உண்டானது. அவரிடம் இந்தியில் பேசினால் மட்டுமே விருப்பத்தைக் கூற முடியும் என்ற நிலையில், கங்கைக்கரையில் சரஸ்வதியை தியானித்து சகலகலாவல்லி மாலை என்னும் பத்து பாடல்களைப் பாடினார். அவரின் பக்திக்கு இரங்கிய சரஸ்வதி இந்தியில் பேசும் திறம் அருளினாள். இதன் பின் மன்னரைச் சந்தித்த குமரகுருபரர் திருப்பனந்தாள் காசி மடத்தைக் கட்டும் உரிமையும், அதற்கான இடமும் பெற்றார். 

Saturday 30 December 2017

எலி மீது யானை என்ன இது வினோதம்


யானை வடிவம் கொண்டவர் விநாயகர். இவர் எலி வகையைச் சேர்ந்த மூஞ்சூறுவை வாகனமாகக் கொண்டவர். பெரிய யானையை சிறிய எலி ஏற்றிச் செல்வது என்பது ஏன்? இதன் தத்துவம் தான் என்ன?'' என்பது நம் மனதில் எழும் கேள்வி. ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு வாகனம் உண்டு. அந்தந்த தெய்வத்துக்குரிய வாகனம், அந்த தெய்வத்தின் தனித்தன்மையை விளக்குகிறது. விநாயகரை "மூஞ்சூறு வாகனன்' என்று சொல்கிறோம். 

ஒரு எலி மீது யானை ஏறிச்செல்வது என்பது நகைச்சுவைக்குரிய விஷயமாகத் தோன்றலாம். யானையின் காலடியில் ஒரு துளிப்பகுதி பட்டாலே அது நசுங்கிப் போகும். ஆனால், இதுவே ஒரு யானையைத் தாங்கிச் செல்கிறது என்றால், அதனுள் இருக்கும் தத்துவம் இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை.
மனிதனுக்கு கஷ்டம் வரத்தான் செய்யும். அது உயிரே போகுமளவு தாங்க முடியாத துன்பத்தைக் கொடுக்கும். அந்த சமயத்தில் அதைப் பொறுமையுடன் ஏற்க வேண்டும். அந்தச் சோதனையில் இருந்து மீள முயற்சிக்க வேண்டும் என்பதே இதன் தத்துவம்.

ஆத்மாவைப் பற்றிய உண்மை ஒன்று உண்டு. பெரியதில் எல்லாம் பெரியது ஆத்மா. அதே போல சிறியதில் எல்லாம் சிறியது அதுவே. ஜீவாத்மாக்களின் உடலில் இயங்குவது சிறிய ஆத்மா என்றும், பெரிய உடலில் இயங்குவது பேராத்மா என்றும் எண்ணக்கூடாது. உடல் சிறியது எனினும் உள்ளிருக்கும் ஆத்மா மிகப்பெரியது. வடிவங்களுக்குள் அது கட்டுப்படுவதில்லை. அதாவது, அதற்கு ஒரு அளவைக் காட்ட முடியாது. ஆத்மா பிரிந்து விட்டால், உடல் பயனற்று சாய்ந்து விடுகிறது. 

நம் கண் முன் காணும் பொருட்களுக்கு எடை, அளவு எல்லாம் உண்டு. கனமானது, லேசானது, நீளமானது, அகலமானது, குறுகியது என்று அவற்றைப் பிரிக்கலாம். ஆனால், அறிவுப்பொருளுக்கு இப்படி அளவீடு தர முடியாது. அறிவு வளர்வதால் மூளைக்கோ, உடலுக்கோ பாரம் ஏற்படாது. அதுபோல, சிறியவர்களான நாம், இறைவனைக் குறித்த பேரறிவை வளர்த்து அவனை அடைய வேண்டும் என்பதை இந்த வாகனத்தத்துவம் உணர்த்துகிறது. 

அதாவது எலி என்பது மனிதன். யானை என்பது அறிவு. சிறியவனான மனிதன் மிகப்பெரிய அறிவைப் பெற வேண்டும் என்பதை மூஷிக வாகனன் நமக்கு எடுத்துச் சொல்கிறார். 

கோயில் கட்டிய கோபன்னா


உயிர்களுக்குத் தீங்கு செய்யாதே! பொறுமையாக இரு! பக்தி கொள்வதில் மனம் தளராதே!' என்று ஞான நூல்களும், மகான்களும் எவ்வளவு தான் சொன்னாலும், மனதில் பதிய மாட்டேன் என்கிறது. ஆனால்.... இந்த மூன்றும் இணைந்து ஒரு வரலாற்று நிகழ்வாகவே பதிவாகியுள்ளது. அது... ஹைதராபாத் நகரம் ஒரு தானீஷாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நேரத்தில், பத்ராசலம் என்ற ஊரில் கோபன்னா என்பவர் தாசில்தாராக இருந்தார். 

அப்போது ஒரு ராமர் கோயில் மோசமான நிலையில் இருந்ததால், மக்களின் வரிப்பணம் ஆறுலட்சம் வராகனை வைத்து, கோயில் திருப்பணி செய்து விட்டார் கோபன்னா. மன்னர் சும்மா இருப்பாரா? கோபன்னாவை சிறையில் தள்ளி விட்டார். <உப்பும், அரிசியும் மட்டுமே உணவாகக் கொடுக்கப்பட்டன. அவ்வப்போது, சாட்டையடி வேறு. இப்படியே ஆண்டுகள் கழிந்தன.

துன்பம் தாங்காத கோபன்னா, விஷம் குடித்து உயிரை விடத் தீர்மானித்தார். அதற்கு முன்னால், கோபன்னா ராமரை எண்ணித் தியானத்தில் ஆழ்ந்த நேரத்தில்.... அவரைக் கண்டு மனம் உருகிய சீதை,""சுவாமி! தங்களின் உத்தம பக்தனான கோபன்னாவை இப்படித் துயரப்படுத்தலாமா?'' என கேட்டாள். 

ராமர், ""தேவி! இந்தக் கோபன்னா சிறிய வயதில் ஒரு கிளியைப் பிடித்து 12 ஆண்டு கூண்டில் அடைத்து வைத்திருந்தான். அதன் பலனாக அவனுக்கு இந்த தண்டனை கிடைத்தது. கவலைப்படாதே! இன்று இரவு அவன் விடுதலையாவான். மன்னர் தானீஷாவை நேரில் பார்த்து ஆறுலட்சம் வராகனைத் தருவேன். உடனே, கோபன்னாவை விடுதலை செய்வார்,'' என்றார். 

சீதை அடுத்த கேள்வியாக ""சுவாமி! கோபன்னா உங்கள் பக்தன். அவனைப் போய் முதலில் பார்க்காமல், தானீஷாவைப் பார்ப்பதாகச் சொல்கிறீர்களே ஏன்?'' என்றாள். 

ராமர், ""தேவி! தானீஷாவும் போன பிறவியில் எனது பக்தனாக இருந்தான். ஆயிரம் குடம் நீரால் அபிஷேகம் செய்வதாக வேண்டி, 999 குடம் வரை அபிஷேகம் செய்தான். பொறுமை இழந்தவனாய், கடைசி குடத்தை தான் பூஜித்த விக்ரஹம் மீது போட்டு உடைத்தான். அதனால் தரிசனம் பெறாமல் போனான். இப்போது தரிசனம் அளிக்கப் போகிறேன். பணத்தை அவனிடம் தந்தால் தானே கோபன்னாவை விடுதலை செய்வான்...'' என்றார். அதன்படியே, கோபன்னா விடுதலையானார். 

கோபன்னாவும் தன் பெயரை "ராமதாசர்' என மாற்றிக் கொண்டு பக்தியில் ஈடுபட்டு இறைவனடி சேர்ந்தார். இரக்கம், பொறுமை, ஆழ்ந்த பக்தி, எளிமை, கருணை என நற்குணங்களை இவரின் வாழ்க்கை எடுத்துச் சொல்கிறது. அவர் கட்டியது பத்ராசலம் ராமர் கோயில் இன்றும் அவர் பெருமையை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

விநாயகரின் ரசிகர்கள்


நம் முன்னோரைப் போல் விபரமறிந்த விஞ்ஞானிகள் உலகில் வேறு எங்கும் இல்லை.

மற்ற தெய்வங்களை அந்தந்த தெய்வங்களுக்குரிய விசேஷ நாட்களில் வழிபடுவது மரபு. தினமும் வணங்கும் வழக்கமுள்ளவர்கள் கூட, முதல் கடவுளான விநாயகரை வழிபட்ட பிறகே, பிற தெய்வங்களை வணங்குவார்கள். அவ்வாறு, விநாயகரை வணங்கும் போது வாழைப்பழம், அப்பம், அவல், பொரி படைக்கிறார்கள். இதில் எதுவுமே வயிற்றுக்கு கேடு விளைவிக்காதது. இதன் மூலம், உணவே மருந்து என்ற தத்துவத்தை அன்றே விளக்கியுள்ளனர். அது மட்டுமல்ல! இந்த உணவுகள் மிகவும் சத்துள்ளவை. சத்துள்ள உணவு மனிதனை ஆரோக்கியமாக வாழ வைக்கும். யார் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறாரோ, அவரது செயல்பாடுகளில் "விக்னங்கள்' (தடைகள்) ஏதும் இருக்காது. அவர்கள் வெற்றியை நோக்கி விரைந்து செல்வார்கள். இதனால் தான், விக்னங்களை நீக்கும் விநாயகரை "விக்னேஸ்வரன்' என்றார்கள்.
காஞ்சி மகாபெரியவர், தினமும் சாப்பிடுவது தயிரில் நனைத்த அவல். இப்போதும் கூட, அவர் பிறந்த அனுஷ நட்சத்திரத்தன்று பக்தர்கள் தயிர் அல்லது வெல்லம் சேர்த்த அவல் படைத்து அவரை வணங்குகின்றனர். நல்ல உணவு வகைகளை தெய்வத்திற்கு படைத்து பிரசாதமாக உண்ணும் போது, அதிலுள்ள தெய்வீகத்தன்மை மனதிற்கு மேலும் வலு சேர்க்கிறது. மனவலிமையும், ஆரோக்கிய உடல்நிலையும் ஒன்று சேரும் போது, மனிதன் எதையும் சாதிக்கும் வல்லமை பெறுகிறான்.

விநாயகருக்கு படைத்த இவ்வகை பொருட்களை கொடுப்பதில் குழந்தைகளுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். இதனால், பகுத்து (பங்கிட்டு) உண்ணும் பண்பாடு இளமையிலேயே அவர்கள் மனதில் வளரும். அவர்கள் அதைச் சாப்பிட்டு திருப்தி அடைந்தால், அது அந்த விநாயகரே திருப்திஅடைந்ததற்கு சமம். இதனால், அவரது பூரண அருள் நமக்கு கிடைக்கும். குழந்தைகள் விநாயகரின் ரசிகர்கள். அவரது ஒவ்வொரு உறுப்பையும் நகைச்சுவை உணர்வுடன் ரசித்துப் பார்ப்பார்கள். அவ்வாறு பார்க்கும் போது, அவர்களுக்கு நாம் அந்த உறுப்புகள் குறித்த தத்துவங்களை தகுந்த கதைகளுடன் எடுத்துச் சொல்ல வேண்டும். இதன்மூலம், நாம் அவர்களை விநாயகரின் நிரந்தர ரசிகர்களாக்கிய புண்ணியத்தைப் பெறுவோம்.

பாவம் நீக்கும் பஞ்சபுராணம்


சிவனை வணங்கி பாடப்பெற்ற ஐந்து புராணங்கள், "பஞ்ச புராணங்கள்' எனப்படுகிறது. இவற்றின் ஆசிரியர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

தேவாரம் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.
திருவாசகம் - மாணிக்கவாசகர்
திருவிசைப்பா - கருவூர்த்தேவர்
திருப்பல்லாண்டு - சேந்தனார்
திருத்தொண்டர் புராணம் - சேக்கிழார்

சிவனை வணங்கும்போது, இப்புராணங்களைப் படித்து வழிபட்டால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும்.

மணலில் எழுதிய மந்திரம்


அசோகவனத்து சீதையை தன் தோளில் தூக்கிச் சென்று ராமனிடம் ஒப்படைக்க எண்ணினார் ஆஞ்சநேயர். ஆனால், ராவணனுடன் நேருக்கு நேர் மோதி வெற்றி பெற்றால் தான், ராமனின் வில்லுக்கே பெருமை என நினைத்த சீதை அவருடன் வர மறுத்து விட்டாள். அதன்படி இலங்கையில் ராம, ராவண யுத்தம் நடந்தது. ராமனுக்கு வெற்றி கிடைத்தது. இதை சீதையிடம் தெரிவிக்க எண்ணத்துடன் ஆஞ்சநேயர், வேகமாக அசோகவனத்திற்கு ஓடி வந்தார். தேவியின் முன் மூச்சிறைக்க நின்றார். அவரால் பேச முடியவில்லை. ஆனால், ஆர்வமுடன் காத்திருந்த சீதையின் முன் மணலில் "ஸ்ரீராமஜெயம்' என்ற மந்திரத்தை விரலால் எழுதிக் காட்டினார். அதைக் கண்டதும் சீதையின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. இதன் அடிப்படையில் தான் , "ஸ்ரீராம ஜெயம்' மந்திரத்தை எழுதும் வழக்கம் உண்டானது. நினைத்தது நிறைவேற பக்தர்கள் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லவோ, எழுதவோ செய்யலாம்.

21 அல்லது 108


விநாயகர் முன் நின்று தலையில் குட்டிக் கொள்வது, தோப்புக்கரணம் இடுவது, சிதறு தேங்காய் போடுவது, அர்ச்சனை செய்வது, மோதகம் படைப்பது போன்ற தனித்தன்மை மிக்க வழிபாட்டுமுறைகள் பல இருக்கின்றன. இதையெல்லாம் விட விசேஷமான வழிபாடு விநாயகரை வலம் வருவது தான். ஏனென்றால், அவரே இதை விருப்பத்தோடு செய்திருக்கிறார். கனிக்கான போட்டியில், அம்மையப்பரே உலகம் என்று பெற்றோரை வலம் வந்து வணங்கினார். பொதுவாக கோயில்களில் மூன்று முறை வலம் வருவது வழக்கம். ஆனால், விநாயகரிடம் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வணங்கும்போது 21 அல்லது 108 முறை வலம் வந்து வணங்குவது மரபு.

கடவுள் கை நீட்டியது ஏன் ?


தேவலோகமே மகாபலியால் அல்லல்பட்டு கொண்டிருந்தது. தேவர்களைக் காக்க விஷ்ணு வாமனராக அவதாரம் எடுத்தார். மகாபலி நடத்தும் யாகசாலைக்குச் சென்று மூன்றடி நிலம் யாசகம் கேட்டார். ஒரு மனிதன் பிறரிடம் கைநீட்டி யாசிப்பது மிகவும் அற்பமான காரியம் என்பது உலகியல். யாசிக்க செல்பவனின் கை நடுங்கும். வாய் குழறும். உடம்பெல்லாம் வியர்க்கும். என்ன கேட்பதென்பதே தெரியாது. "நான்....நான்' என்று சொல்வது தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றாது. உயிர் நீங்கும் போது, என்ன சிரமம் உண்டாகுமோ அத்தனையும் நேரும் என்கிறது சாஸ்திரம். மனிதனுக்கே இப்படி என்றால், கடவுள் தன் நிலையில் இருந்து இறங்கி பிச்சை ஏற்க வந்தது எதற்காக? கடவுள் என்றும் பாராமல், தன்னை நம்பி வந்த தேவர்களைக் காப்பதற்காக! பக்தனைக் காக்க, பகவான் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கி வருவான் என்பது இதிலுள்ள தாத்பர்யம்.

கிரக தோஷம் போக்குபவர்


நவக்கிரகங்களில் கேதுவின் அதிபதியாக விநாயகர் விளங்குகிறார். கேது திசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள் விநாயகரை செவ்வாய்க்கிழமையில் வழிபட்டால் கேதுதோஷம் நீங்கி நன்மை உண்டாகும். சனிதோஷத்தால் சிரமப்படுபவர்கள் வன்னி இலையால் சனிக்கிழமையன்று விநாயகரை அர்ச்சித்து வழிபட வேண்டும். விநாயகருக்கு விருப்பமான வன்னி இலையே சனீஸ்வரருக்கு உகந்ததாக இருக்கிறது. 

விநாயகருக்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் எருக்கம்பூமாலை அணிவித்து வழிபட்டால் சூரியதோஷம் அகலும். சூரியன் மூலவராக இருக்கும் சூரியனார் கோயில் தலவிருட்சம் எருக்கஞ்செடி என்பது குறிப்பிடத்தக்கது.

மணி அடிக்க வேண்டிய நேரம்


பூஜைப்பொருளில் ஒன்றான மணியை இஷ்டம் போல நினைத்த நேரமெல்லாம் அடிக்கக் கூடாது. அதற்குரிய நேரத்தில் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்கிறது பரசுராம கல்ப சூத்திரம்.

"ஸ்நாநே தூபே ததா தீபே நைவேத்யே பூஷணே ததா
கண்டா நாதம் ப்ரகுர்வீத ததா நீராஜநேபிச'' என்கிறது அதற்கான ஸ்லோகம்.

அபிஷேகத்தின் போதும், சாம்பிராணி காட்டும் போதும், தீபாராதனை வேளையிலும், நைவேத்யம் செய்யும்போதும், ஆபரணம் அணிவித்து அலங்கரிக்கும் போதும், நீராஞ்ஜனம் என்னும் கற்பூர ஆரத்தியின் போதும் மணியோசை எழுப்ப வேண்டும். வீட்டில் கற்பூர ஆரத்தி காட்டும் போது மணியடிப்பது நல்லது.

கணபதியின் காதுகள்


விநாயகருக்கு யானை முகம் என்பதால், அவரது காதுகள் நீண்டு பெரிதாக அமைந்திருக்கின்றன. பிறர் கருத்தையும் பரந்த மனதுடன் செவி சாய்த்து ஏற்கவேண்டும் என்பதையும், அதில் தேவையானதைச் சிந்தித்து தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அவரின் அகன்ற நீண்ட செவிகள் உணர்த்துகின்றன.

Friday 29 December 2017

அக்கா தம்பி சந்நதி


அட்டவீரட்டத் தலங்களில் (சிவன் வீரச்செயல்கள் நிகழ்த்திய இடங்கள்) ஒன்று, கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலுள்ள திருவதிகை. நாவுக்கரசரின் காடிய சூலைநோயினைப் போக்கிய வீரட்டானேஸ்வரர் இங்குள்ள கோயிலில் உள்ளார். இக்கோயிலில் நாவுக்கரசருக்கும், அவரது சகோதரி திலகவதியாருக்கும் சந்நிதி உண்டு. தேவாரத்தில், தான் பாடிய முதல் பாடலில் இத்தல சிவனைப் பற்றியே நாவுக்கரசர் பாடியிருக்கிறார். வீரட்டானேஸ்வரரை வழிபட்டே திலகவதியார், சமணமதத்தை தழுவிய தன் தம்பியை சைவ சமயத்திற்கு மாற்றினார்.

இடது கை எதற்கு ?


இடது கை என்றாலே வேண்டா வெறுப்பாகப் பார்க்கிறோம். ஆனால், எதையும் ஆண்டவன் நன்மைக்கே கொடுக்கிறான். தினமும் வீட்டில் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தை ஸ்தோத்திரம் சொல்லி வழி படுகிறோம். பூஜையின் நிறைவில், இரு கைகளையும் ஒன்று சேர்த்து, பூக்களை அள்ளி, சுவாமியின் திருவடியில் தூவ வேண்டும். இதற்கு "புஷ்பாஞ்சலி' என்று பெயர். தெய்வ கைங்கர்யங்களை வலது கையால் தான் செய்ய வேண்டும் என்றாலும், புஷ்பாஞ்சலியின்போது மட்டும், இடக்கையையும் சேர்த்து செய்வது தவறில்லை என்கிறது சாஸ்திரம்.

மலர் வேண்டாம் மனம் போதும்


சிவபெருமானுக்கு பூஜை செய்ய புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், நந்தியாவட்டை, நீலோத்பவம், பாதிரி, அரளி, செந்தாமரை ஆகிய எட்டு வகையான மலர்களை பயன்படுத்தலாம். இம்மலர்கள் "அஷ்ட புஷ்பங்கள்' எனப்படுகின்றன. இவற்றில் சில இப்போது கிடைப்பதில்லை. இம்மலர்களை படைத்து மட்டும்தான் சிவனை வழிபட வேண்டுமென்பதில்லை. "நமசிவாய' என அவர் திருநாமத்தை உச்சரித்து, மனம் என்னும் பூவால் வழிபட்டாலே போதும். மலர்களால் அர்ச்சித்து வணங்கிய பலன் கிடைத்து விடும்.

வெற்றி மேல் வெற்றி


ஒரு செயலைத் தொடங்குகிறோம். என்ன தான் திட்டமிட்டு துவங்கினாலும் இடையில் சில தடைகள் வருகின்றன. மீண்டும் முயற்சிக்க வேண்டியிருக்கிறது. இதுபோல, தடைகள் வராமல், ஆரம்பித்த செயல் தடங்கலின்றி வெற்றிகரமாக முடிய எளிய பரிகாரம் இருக்கிறது. அதுதான் மகாகணபதி சகஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்வது. அதாவது, விநாயகரை அவரது ஆயிரம் பெயர்கள் சொல்லி வணங்குவது. ஒரு செயலைத் துவங்குவதற்கு 48 நாட்கள் முன்னதாக, இந்த பாராயணத்தை சொல்ல ஆரம்பிக்கலாம். தினமும் அதிகாலை வேளையில் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொன்னால் பலன் இரட்டிப்பாக இருக்கும். இந்த பாராயணம் செய்ய வயது வரம்பு கிடையாது. ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

ஜாதிக்கு ஒரு சத்தம்


கல் என்றால் உயிரற்ற ஜடப்பொருள் என்று நினைக்கிறோம். கல்லுக்கும் உயிர் உண்டு என்கிறார் மாணிக்கவாசகர். சிவபுராணத்தில், ஓரறிவு கொண்ட புல், பூண்டு முதலிய பிறவிகளை எடுத்து அயர்ந்து விட்டதாகச் சொல்லும் போது, கல்லாகவும் பிறந்ததாக குறிப்பிடுகிறார். கல்லிலும் மூன்று வித ஜாதிகள் உண்டு என்கிறது சிற்ப சாஸ்திரம். கல்லில் எழும் ஒலியைப் பொறுத்து, ஆண், பெண், இரண்டும் அல்லாதது என மூன்றாகப் பிரிப்பர். தட்டும் போது, கனமான மணியோசை போல் ஒலி எழுப்புவது ஆண். மெல்லிய ஓசை எழுப்புவது பெண். ஒலியே எழுப்பாதது அலி. இந்த கற்கள் தூங்கும் நேரம், விழிக்கும் நேரம் கூட இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன. தஞ்சாவூர் நந்தி, சுசீந்திரம் ஆஞ்சநேயர் சிலைகள் இப்போதும் உயிரோட்டத்துடன் உள்ளதைப் பார்க்க முடிகிறது.

ஜீரணமாகவும் மந்திரம் இருக்கு


சாப்பிடும் முன் "கோவிந்தா...கோவிந்தா' என ஏழுமுறை சொல்ல வேண்டும் என்பது விதி. சாப்பிட்ட பின் சிலருக்கு வயிறு மந்தமாக இருக்கும். செரிமானக் கோளாறு ஏற்படும். இப்படிப்பட்டவர்கள், ""அகத்தியர், அக்னி, பாடபாக்னி ஆகியோர் நான் சாப்பிட்ட உணவை ஜீரணிக்கும்படி செய்யட்டும். நான் சாப்பிட்ட உணவு நன்றாக ஜீரணமாகி நன்மை தரட்டும். இந்த உணவால் உடலில் நோய் வராமல் இருக்கட்டும்,'' என்று சொல்லி விட்டு, தொப்புளிலும், வயிற்றைச் சுற்றிலும் சிறிது தண்ணீரைத் தடவிக்கொண்டால் போதும். உணவு ஜீரணமாகும்.

வயசு பார்த்து வணக்கம் சொல்லுங்க


நம்மை விட வயதில் மூத்தவர்கள் வந்தால், அவர்களை வணங்கி வரவேற்பது இயல்பு. ஆனால், இவ்வாறு வணக்கம் சொல்வதற்கு வயது வரம்பு இருக்கிறது. நம்மை விட மூன்று வயது அதிகமானவர்களையே வணக்கம் தெரிவித்து வரவேற்கலாம். அண்ணன், அக்காவுக்கு மட்டும் இந்த வயது வரம்பு பொருந்தாது. அவர்கள் நம்மை விட ஒரு வயது மூத்தவராக இருந்தாலும் கூட நமஸ்காரம் சொல்லலாம்.

கடவுள் உங்கள் பக்கம் வரவேண்டுமா ?


முதல் யுகமான கிருதயுகத்தில் உலகில் தர்மம் மட்டும் தழைத்திருந்தது. அந்த யுகத்தில் எதிரெதிர் குணம் படைத்த புலியும் ஆடும் கூட ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தியதாகச் சொல்வர். இப்போது கலியுகத்தில் கால்பங்கு கூட தர்மம் இல்லாமல் போனது. அதர்மமே கலியுக தர்மமாகி விட்டது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில், இன்றைய உலகமும் இருக்கிறது. அன்புநெறியைப் பின்பற்ற வேண்டிய மனிதர்கள் கூட பகைவர்களாக மாறி விட்டனர். "தர்மம் சர' என்று வேதம் மனிதனுக்கு கட்டளை இடுகிறது. "தர்மத்தைப் பின்பற்று' என்பது இதன் பொருள். 

தர்மத்தை பின்பற்றினால் உலகில் வாழ முடியாது என்று பெரும்பான்மையான மக்கள் தற்காலத்தில் கருத ஆரம்பித்து விட்டனர். ஆனால், நூறு பேராக இருந்த கவுரவர்களுக்கு கண்ணன் உதவி செய்யவில்லை. சிறுபான்மை பாண்டவர்களுக்கு தான் உடனிருந்து துணை புரிந்தார் என்கிறது மகாபாரதம். தர்மத்தின் வழியில் நடப்பவரைக் காப்பதே என் கடன் என்கிறார் கீதைநாயகன் கிருஷ்ணர். தர்மத்தின் பக்கம் நின்றால், கடவுள் உங்கள் பக்கம் வந்து விடுவார்.

குழந்தை இல்லையா ஜெயந்தி விரதம் இருங்க


திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை இல்லாதவர்கள், கிருஷ்ண ஜெயந்திஅன்று இந்த விரதம் மேற்கொள்வது சிறப்பு. தம்பதியர் காலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். கிருஷ்ணர் பாதத்தை வீடு முழுவதும் மாக்கோலமாக வரைந்து, பூஜைஅறையில் விளக்கேற்ற வேண்டும். கிருஷ்ணரின் வாழ்க்கையை விவரிக்கும் பாகவதம் என்ற நூலின், பத்தாவது அத்தியாயத்தை படிக்க வேண்டும். 

நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களையும் பாடலாம். கண்ணனுக்குப் படைத்த நைவேத்யத்தை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இரவில் கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். இதன் மூலம் விரைவில் வீட்டில் மழலைக் குரல் கேட்கும் என்பர். பிறக்கும் குழந்தைக்கு கண்ணன், ராதா என பெயரிடுவதாகவும் நேர்ந்து கொள்வர்.

Thursday 28 December 2017

திருமணத்துக்கு லட்சுமியே சாட்சி


திருமணத்திற்கு முன் நிச்சயதார்த்தம் நடக்கும். இதில் சம்பந்திகள் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தனம் பூசி, தாம்பூலம் என்னும் வெற்றிலைபாக்கு மாற்றிக் கொள்வது முக்கியமான சடங்கு. மங்கலப் பொருட்களில் ஒன்றான வெற்றிலையில் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். உலகைக் காக்கும் தாயான மகாலட்சுமியை சாட்சியாக வைத்து, மணவாழ்க்கையை நிச்சயிப்பதற்காகவே இச்சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. அக்னி சாட்சியாக திருமணம் நடக்கும் முன், லட்சுமி சாட்சியே முதல் சாட்சியாகக் கொள்ளப்படுகிறது.

திருமணத்திற்கு பத்திரிகை அளிக்கும் போது, தாய்மாமன் போன்ற நெருங்கிய உறவினர்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்தே அழைப்பது வழக்கம். "சுருள் வைத்தல்' என்று இதைச் சொல்வார்கள். வீட்டில் எந்த தெய்வத்திற்கு பூஜை நடந்தாலும், வெற்றிலை பாக்கு வைப்பது அவசியம். 

வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்கும்போது வெற்றிலை கொடுப்பது சிறப்பு. பாக்கு இல்லாமல் வெற்றிலையை மட்டும் தனியாக வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. 

முதல் நட்சத்திரம் கார்த்திகையே


நட்சத்திரங்களில் முதலாவதாகக் கருதப்பட்டது கார்த்திகை. கார்த்திகை முதல் நட்சத்திரமாகவும் பரணி கடைசி நட்சத்திரமாகவும் இருந்தது. பிற்காலத்தில் தான் "அசுவினி' என மாறியது. கார்த்திகையை முதல் நட்சத்திரமாக கொண்டதற்கு காரணம் இருந்தது. அந்த நட்சத்திரத்திற்குரிய தேவதை அக்னி. யாகம், ஹோமம் செய்ய அக்னியே முதல் தேவை. அக்னி இல்லாமல் சமைக்க முடியாது. அந்த அக்னிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் வேதகாலத்தில் கார்த்திகையை முதல் நட்சத்திரமாகக் கொண்டனர். ஜோதிட சாஸ்திரம் பிறந்த பின்தான் அசுவினி முதல் நட்சத்திரமானது. முருகன் சிவனின் நெற்றிக்கண்ணான அக்னியில் இருந்து பிறந்தவர் என்பதால், அவருக்கு கார்த்திகை நட்சத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

திருமண சமயத்தில் தர்ப்பணம் செய்யலாமா ?

Related image

பிதுர் தர்ப்பணத்தை எந்த காரணத்திற்காகவும் செய்யாமல் இருப்பது கூடாது. இருந்தாலும், திருமணம் போன்ற சுபவிஷயங்கள் நடந்திருக்கும் குடும்பங்களில், குறிப்பிட்ட காலம் தர்ப்பணத்தில் எள்ளைச் சேர்த்துக் கொள்ள விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

"விவாஹே சோபநயனே சௌளே ஸதி யதா க்ரமம் 
வர்ஷமர்த்தம் ததர்தம் ச நைத்யகே தில தர்ப்பணம்'' 

என்கிறது ஸ்லோகம். திருமணம் முடிந்து ஒரு வருட காலமும், உபநயனத்திற்கு ஆறு மாதமும் எள்ளினால் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக அட்சதையும், தர்ப்பைக்குப் பதிலாக அருகம்புல்லும் கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

உயிர் பெற்ற தலைகள்


நடராஜர் நடனமாடும் போது, அவர் கையிலுள்ள உடுக்கை இடைவிடாது ஒலிக்கும். சப்த ஸ்வரம் எனப்படும் ஏழு ஸ்வரங்களையும் உடுக்கையில் மிகச் சரியாக எழுப்ப முடியும். இசையுடன் நடனமாடும் இவர், அதுவரை தோன்றி மறைந்த பிரம்மாக்களின் 32 தலைகளை மாலையாகத் தொடுத்து அணிந்திருந்தார். ஒருமுறை, வேகமாக நடனமாடும் போது, அவர் தலையில் சூடியிருந்த சந்திரனிடமிருந்து, அமிர்ததாரை வழிந்தோடி, பிரம்ம தலைகள் மீது பட்டன. அமிர்தம் குடித்தால் இறந்தவை உயிர் பெறும். இதையடுத்து, 32 பிரம்ம தலைகளும் ஆனந்தமாக வாயசைத்துப் பாடத் தொடங்கின. ஆட்டம், பாட்டம் இருக்குமிடத்தில் ஆனந்தம் வந்து விடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

குருவும் தெய்வமும் ஒன்றே


கிருஷ்ணர் மீது 25 ஆயிரம் பாடல்கள் இயற்றிய சூர்தாசர், முற்பிறவியில் யது வம்சத்தில் அக்ரூரர் என்னும் பெயரில் பிறந்தார். கம்சனிடம் மந்திரியாக இருந்த அவர், கிருஷ்ணர் மீது அந்தரங்க பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார். சூர்தாசர் தன்னுடைய பாடல்களில் தன்னுடைய குருநாதரான வல்லபாச்சாரியாரின் பெயரை எந்தப்பாடலிலும் குறிப்பிட்டுப் பாடவில்லை. இதையறிந்த பக்தர் ஒருவர் சூர்தாசரிடம், "இத்தனை ஆயிரம் பாடல் எழுதிய நீங்கள், நன்றியுடன் ஒரு இடத்தில் கூட குருவின் பெயரைக் குறிப்பிடவில்லையே?'' எனக் கேட்டனர். அதற்கு, "குருநாதரான வல்லபாச்சாரியாரும், கிருஷ்ணரும், வேறு வேறல்ல. இருவரும் எனக்கு ஒருவரே'' என்று பதிலளித்தார்.

தானம் - தர்மம் வித்தியாசமானது


தானத்துக்கும், தர்மத்துக்கும் வித்தியாசம் தெரியுமா? 

உயர்ந்தவர்களுக்குக் கொடுப்பது தானம். எளியவர்களுக்கு கொடுப்பது தர்மம். பொதுவாக உதவி புரியும் எண்ணத்துடன் செய்யும் எந்த செயலுக்கும் இரவு, பகல் கிடையாது. அதற்குரிய புண்ணியம் கொடுத்தவருக்கு உடனே கிடைத்து விடும். ஆனால், மனதில் எண்ணியிருக்கும் விருப்பம் நிறைவேற வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படும் தானத்தை பகலில் தான் செய்ய வேண்டும். ஏனென்றால், அதற்கு சூரியதேவன் சாட்சியாக இருப்பார் என்பது ஐதீகம். சந்திர கிரகணம், திருமணச் சடங்கு, மாதப்பிறப்பு, வெளியூர் கிளம்பும் நேரம், ஆபத்து காலம்,குழந்தை பிறப்பு, ராமாயணம், மகாபாரத சொற்பொழிவு போன்றவற்றின் போது இரவு நேரத்திலும் தானம் செய்யலாம்.

புதன், சுக்கிர பெயர்ச்சிக்கு விழா இல்லையே ஏன் ?

Image result for புதன்

சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, ராகு, கேது, சனி என்பன நவக்கிரகங்கள் ஆகும். இக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம்பெயரும் போது வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும். சந்திரனை பொறுத்தளவில் இரண்டே கால் நாளுக்கு ஒருமுறையும், புதன், சூரியன், தலா ஒரு மாதமும், சுக்கிரன் ஒன்றரை மாதமும், செவ்வாய் ஒன்று முதல் 6 மாதங்கள் வரையிலான காலகட்டங்களில் இடம்பெயரும். குறைவான காலகட்டத்தில் இக்கிரகங்கள் இடம்பெயர்ந்து விடுவதால் பலனும், பாதிப்பும் குறைவான காலங்களிலே இருக்கும். இதே சுழற்சி அடுத்தடுத்து நிகழ்வதால் இக்கிரகங்களின் இடப்பெயர்ச்சி பெரியளவில் பேசப்படுவதில்லை.

ஆனால் குருவை பொறுத்தளவில் ஓராண்டிலும், ராகுகேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சனி 2.5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் என ஒரு ராசியில் சஞ்சரிக்க நேரம் எடுத்து கொள்ளும். இந்த வீரிய கிரகங்கள் குறைந்தது ஓராண்டு முதல் 2.5 ஆண்டுகள் வரை ராசிகளில் சஞ்சரிப்பதால் பாதிப்பும், பலனும் அக்காலம் முழுவதும் தொடரும். இதனால் இக்கிரக பெயர்ச்சிகள் விழா போன்று சிறப்பித்து கொண்டாடப்படுகிறது. பாதிப்பு ஏற்படுபவர்கள் நிவர்த்தி பூஜைகளும், பலன் கிடைக்கும் ராசிக்காரர்கள் அதனை முழுமையாக பெறவும் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.

குரு ஆண்டுதோறும் இடம்பெயர்வதால் பெரும்பாலான ஆண்டுகளில் குருப்பெயர்ச்சி ஏற்படும். ராகுகேதுவை பொறுத்தளவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதால் ஒரு சில ஆண்டுகளில் இதன் பெயர்ச்சி இருக்காது.

கல்யாணத்துக்கு உதவும் குருபகவான் ?

Image result for குருபகவான்

குரு என்ற சொல்லிற்கு அறியாமையை அகற்றுகிறவர் என்று பொருள். ஜோதிட சாஸ்திரத்தின்படி வியாழன் என்றும், பிரகஸ்பதி என்றும் அழைப்பர். தேவர்களின் அரசனாக விளங்கிய காரணத்தால் தேவகுரு என்றும், நுண்ணறிவு மிகப்படைத்து கல்வி, கேள்விகளில் சிறந்தவர் என்பதால் பிரகஸ்பதி என்ற திருநாமங்கள் அமைந்தன. நம் உடலிலும், உள்ளத்திலும் இறைவனுடைய சக்தியை பிரதிபலிக்கிறவராகவும், நம்முடைய வழிபாட்டின் மூலமாக இறைசக்தியை நம்மனத்துள் நிரப்புபவராகவும் உள்ளவர் இவர். இதனாலேயே இவரைத் தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும் மூலப்பொருளான காரகன் என்பார்கள். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று பொருட்செல்வம், இன்னொன்று புத்திர யோகம். இந்த இரண்டிற்கும் காரகன் அதாவது, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரகம் குருபகவான். 

அத்துடன் நீர்த்தன்மை வாய்ந்த கிரகம், மறைமிகு நூல்கள், மேதா விலாசம், சாஸ்திர ஞானம், நற்பண்புகள், செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு, ஐஸ்வர்யம், தங்கம், தனம், புகழ், கீர்த்தி, பக்தி, ஞானம், மந்திர உபதேசம், தானம், தியானம், தர்மம், புத்திரம், நிதி, நீதி, நீதிபதிகள். வக்கீல், மந்திரி மதபோதகர், மதத்தலைவர், மடாதிபதி, ஆன்மிகத்துறவிகள், அறங்காவலர்கள், ஆசான், ஆசிரியர், வழிகாட்டி, விரிவுரையாளர், பேச்சாளர், பள்ளிகள், கல்லூரிகள், தர்மஸ்தாபனங்கள், சமூக சேவை நிறுவனங்கள், வேதம், வேதபாட சாலைகள், அன்ன சத்திரங்கள், சாஸ்திர ஆராய்ச்சி, தான் சார்ந்த மதத்தில் அதிகமான பற்று, பூஜை, யாகம், ஆகம சாஸ்திர விஷயங்கள் என பல்வேறு விஷயங்களில் குருவின் ஆதிக்கம் உள்ளது. ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி தத்துவ கோட்பாடுகளை விளக்கி வழிகாட்டுபவர்களை குரு என்று சொல்வார்கள். நமக்குத் தெரியாததைத் தெளிவுபடுத்தி கற்றுத்தருபவர்களை குலகுரு, ஜகத்குரு, ஆசான் என்று அழைக்கின்றோம். குரு இல்லாத வித்தை பாழ் என்று சொல்வார்கள். 

குரு: ஞான வழியை போதிப்பவர், தெளிவை ஏற்படுத்துபவர்.

பரமகுரு: குரு பரம்பரை, குருவிற்கு குருவாக இருப்பவர், மரபுகளை பேணிக்காப்பவர். ஆதிசங்கரர் போன்றவர்கள்.

பராபரகுரு: தத்துவங்கள் தோன்ற காரணகர்த்தாக்கள், மகாகுரு. துவைதம், அத்வைதம்,  விசிஷ்டாத்வைதம் போன்றவற்றை நாம் அறிந்து உணர்ந்துகொள்ள காரணமானவர்கள். இவர்கள்தான் வேதவியாசர் போன்ற மகாரிஷிகள்.

பரமேஷ்டிகுரு: இகபர சுக இன்ப துன்பங்களில் இருந்து நம் கர்ம வினைக்கேற்ப பலாபலன்களை அருளும் மிகமிக உயர்ந்த இறை தூதர்கள், அடியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், மகான்கள். இதன் ஒட்டு மொத்த இறைக்கோலம்தான் சிவனின் தட்சிணாமூர்த்தி அம்சமாகும்.

ஜோதிடத்தில் குருவின் செயல்கள் :

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு விதமான அம்சம், ஆளுமை, காரகத்துவம் உள்ளன. நமக்கு நடைபெறும் பலாபலன்கள் பிறந்த ஜாதக கட்டத்தின் அடிப்படையில் அந்தக்காலத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் காரணமாகின்றன. ஒருவருக்கு நன்மை செய்யும் கிரகம் மற்றொருவருக்கு தீமை செய்யும். ஒருவருக்கு நல்ல யோகத்தை தரும் தசாபுக்தி, மற்றவருக்கு பாதகமான பலனை செய்யும். ஒருவருக்கு நல்ல ராஜயோக வசதி வந்தால் சுக்கிர தசை அடிக்கிறது என்பார்கள். ஒருவர் மிகவும் கஷ்ட நிலையில் இருந்தால் அதற்கு சனி காரணம் என்று வீண்வதந்தி பரப்புவார்கள்.  இந்த வகையில் தேவகுரு என்று சாஸ்திரத்தில் சிறப்பித்து கூறப்பட்டுள்ள முழு சுபகிரகமான குருவிற்கு சுப, அசுப, தோஷ பலன்கள் உண்டு. இவருக்கு மற்ற கிரகங்களைப்போலவே மறைவு ஸ்தானம், நீச்சம், வக்ரம், ஆட்சி, உச்சம் என்று கலவையான அம்சங்கள் உண்டு. 

குரு சுபகிரகமாக இருப்பதால் அவருக்கு பார்வை பலம் சுபமாக உள்ளது. குருவின் பார்வை பல தோஷங்களை போக்கும் என்பது சாஸ்திர விதி. குரு பார்வைதான் சிறப்பாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதுவும் குரு எந்த நிலையில் இருந்து பார்க்கிறார், எந்த வீட்டில் பார்வை படுகிறது குருவின் ஆதிபத்தியம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் உள்ளன. குரு எந்த வீட்டில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருப்பது நல்லது. அப்படி இல்லாமல் தனித்த குருவாக இருந்தால் அந்த ஸ்தானம் சுகப்படாது என்பது சாஸ்திர விளக்கம் மட்டுமல்ல, அனுபவத்திலும் பொருந்தி வருவது. குரு சில முக்கியமான வீடுகளில் தனியாக இருந்தால் அந்தக் குறிப்பிட்ட ஸ்தானம் பலம் குறைந்துபோகும். 

அந்த வகையில் லக்னம், இரண்டு, ஐந்து, ஏழு, பத்து போன்ற வீடுகளில் இருக்கும்பொழுது சில விஷயங்கள் வாழ்க்கையில் பிரச்னைகளையும், தடுமாற்றங்களையும் ஏற்படுத்தி விடுகின்றது. ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு ஆதிபத்தியம் வருவதால் அந்தவகையிலும் சில சங்கடங்கள் உருவாகி விடுகின்றது. லக்னத்தில் குரு: குரு லக்னத்தில் இருப்பது பொதுவாக ஜாதகரை மிகப்பெரிய குழப்பவாதியாக்கும். சுயமாக முடிவு எடுக்கமுடியாமல் திணறுவார். கொள்கை, கோட்பாடுகளை அடிக்கடி மாற்றிக்கொள்வார். எடுப்பார் கைப்பிள்ளை என்றும் சொல்லலாம். ஆனாலும் இப்படிப்பட்டவர்களுக்கு குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் படுவதால் பூர்வ புண்ணிய யோக அதிர்ஷ்ட பாக்கியங்கள் கிடைக்கும்.

இரண்டில் குரு: தனம், குடும்பம், வாக்கு, நேத்ரம் என்ற இந்த ஸ்தானத்தில் தனித்த குருவால் பல குறைகள் இருக்கும். சதா வாக்குவாதத்தில் ஈடுபட வைப்பார். பலநேரங்களில் பணத்தட்டுப்பாடுகள் வரலாம், கடன் கொடுத்த பணத்தை வசூலிப்பது மிகவும் சிரமம். பேச்சில் தடுமாற்றம், திக்குவாய் வரலாம். திருப்தியற்ற நிலை, சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். கண் சம்பந்தமான குறைபாடுகள் வரலாம்.

ஐந்தில் குரு: இந்த இடத்தில் தனித்த குரு இருப்பதால் ஜாதகர் ஏதாவது சிந்தனை செய்துகொண்டே இருப்பார். சாஸ்திர மறதி ஏற்படும். குழந்தை பாக்கிய பிரச்னைகள் இருக்கும். புத்திர தோஷம், புத்திர சோகம், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை, கொள்கை, தத்துவ, மரபுகளை மீறுவது, சாஸ்திர விரோத மார்க்கம் என இருக்கும்.

இரண்டாம் இடம், ஐந்தாம் இடம் இந்த இரண்டும் தனம், புத்திரம் ஆகிய இரண்டிற்கு ஆதாரமாக உள்ளவை. குருவின் முக்கிய அம்சமே தன, புத்திரகாரகன் என்ற அமைப்பாகும். மேலும் இதை அஸ்திவாரம் என்றும் சொல்லலாம். இந்த இரண்டு இடங்களில் குருவின் தனித்த நிலை ஏதாவது ஒன்றில் இருக்கும்போது மற்ற கிரக யோக பலம் மற்றும் பூர்வ கர்ம புண்ணிய பலம் காரணமாக செல்வம் செழித்து லட்சுமி தாண்டவமாடினாலும் அந்த ஜாதகர் எல்லாம் இருந்தும் எதையும் அனுபவிக்க முடியாத நிலை இருக்கும். குடும்பத்தோடு இருப்பார். ஆனால், பற்றற்ற மனநிலை இருக்கும். இதேபோல் புத்திரஸ்தானத்தில் குரு தனித்து நிற்கும்போது பூர்வ புண்ணிய  சுகிர்த விசேஷத்தினால் புத்திர பாக்கியம் கிடைத்தாலும், எதாவது குறை ஏற்பட்டு விடும். புத்திரர்களால் அவப்பெயர் வரக்கூடும். தக்க சமயத்தில் பிள்ளைகளின் அன்பு, ஆதரவு கிடைக்காது. காசு, பணம், பிள்ளைகள் என்று இருந்தாலும் முதியோர் இல்லத்தில் முடங்கிக் கிடக்க வேண்டியிருக்கும். ‘காரகோ பாவ நாஸ்தி’ என்ற ஸ்லோகப்படி தன, புத்திரகாரகன் காரகத்தில் அந்த குறிப்பிட்ட காரகாம்சம் கெட்டு விடுகின்றது.

ஏழில் குரு: லக்னத்திற்கு 7ம் இடமான சப்தம கேந்திரம் களத்திர ஸ்தானமாகும். சுபகிரக ஆதிக்கம் உள்ள குருவிற்கு இங்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டு. இந்த இடத்தில் குரு தனித்து இருப்பதால் மணவாழ்க்கை வளர்பிைற, தேய்பிறைபோல் போராட்டமாக அமையும். எதிலும் ஒரு நிச்சயமற்ற தன்மை இருக்கும். புரிந்துகொள்ளுதல் இருவருக்கும் சரியாக வாய்க்காது. குடும்ப உறவில்தான் இப்படி சிக்கல்கள் இருக்கும். ஆனால், வெளிவட்டாரத்தில் ஜாதகருக்கு அந்தஸ்து, கௌரவம், புகழ், செல்வாக்கு எல்லாம் குருவால் கிடைக்கும்.

பத்தில் குரு: லக்னத்திற்கு பத்தாம் இடம் என்பது தசம கேந்திரம். ஆகையால் கேந்திராதிபத்திய தோஷம் காட்டும். வியாபார, தொழில், உத்யோக, ஜீவனஸ்தானத்தில் குரு தனித்து இருக்கும்போது வியாபாரம், தொழிலில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். அடிக்கடி தொழிலை மாற்றுவார்கள். பல தொழில்கள் செய்தாலும் எதிலும் நிறைவு இருக்காது. தொழில் செய்யும் இடங்களில் வழக்குகள், அரசாங்க குறிக்கீடுகள் இருக்கும். உத்யோக வகையில் பல நிர்ப்பந்தங்கள் இருக்கும். வேண்டா வெறுப்பாக வேலை பார்ப்பார். ஊர் மாற்றம், இலாகா மாற்றம், பதவி உயர்வில் தடங்கல்கள் வரும். இந்தளவிற்கு இடைஞ்சல் தர காரணம் முழுச் சுபகிரகமான குரு தனித்து 10ல் இருப்பதுதான். இதனால்தான் ஜோதிட சாஸ்திர வழிமுறைப்படி பத்தில் பாம்போ அல்லது சூரியனோ இருப்பது சிறப்பு.

குரு சண்டாள யோகம்: ராகுகேது இருவரும் தாம் இருக்கின்ற இடம், பார்க்கின்ற கிரகம், சேருகின்ற கிரகம், சாரபலம் போன்றவை மூலம் பல யோகங்களை, தோஷங்களை தரவல்லவர்கள். சுபகிரகங்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டு. ஆனால் ராகு, கேதுவிற்கு கேந்திர, திரிகோணங்களில் அதிக யோகபலம் உண்டு. ராகுவை, யோககாரகன், போககாரகன் என்று சாஸ்திரம் சிறப்பித்துக் கூறுகிறது. இப்படிப்பட்ட ராகு பவித்திரமான குருவுடன் சேரும்போது எதிர்பாராத விஷயங்கள் கூடிவந்துவிடுகிறது. ஒருவகையில் குருவும் போககாரகனாகும். குரு சண்டாள யோகம் ஒருவருக்கு பரிபூரணமாக பலன் தரும்போது நடக்குமா, நடக்காதா, கிடைக்குமா, கிடைக்காதா என்று ஏங்கித் தவித்த விஷயங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெறும். 

உயர் பதவிகள், அதிகார மையங்களின் தொடர்புகள், ஒரு காலத்தில் சாதாரண நிலை, இன்று நினைத்துப் பார்க்க முடியாத  மிரள வைக்கும் அசுர வளர்ச்சி, போக இச்சை, வன்முறை, அடக்குமுறை, அடியாள், கட்ட பஞ்சாயத்து, கொடுஞ்செயல்கள், அதிகார துஷ்பிரயோகம் என்று பல்வேறு வகைகளில் கொடிகட்டிப் பறப்பார்கள். அரசியலில் உயர்பதவிகள் தேடிவரும். லட்சுமிதேவியின் அருள் தானாக வந்து தழைக்கும். பொன்னும், பொருளும், முத்து சிவிகையும் கிடைக்கும் என்கிறது புலிப்பாணி பாடல். இந்த காலத்தில் மிக உயர்ந்த  நான்கு சக்கர வாகனம். ராகுவின் மூலம் வரும். செல்வம், யோகம் எல்லாம் நிழலான, மறைவான, சட்டத்திற்கு புறம்பான வகையில்தான் கிடைக்கும் என்பது சாஸ்திர நியதியாகும்.

குரு தர்ம பாக்கிய யோகம் :

ராகுகேது இருவருக்கும் எதிர்மறையான குண இயல்புகள் உண்டு. ராகு மூலம் எது கிடைத்தாலும் அதில் எதிர்மறை நீச்சத்தன்மை இருக்கும். ஆனால், கேது மூலம் ஏற்படுகின்ற அமைப்புகள் சீரும் சிறப்பும் உடையதாக இருக்கும். குருவிற்கும், கேதுவிற்கும் ஜோதிட அமைப்புகளில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. குரு, தவம், ஞானம், மந்திர சித்தி, மகான்கள், நீதி, மதம் போன்றவற்றை தன்னகத்தே கொண்டவர். கேது, ஞானம், மதம், குருஸ்தானம், மருத்துவம், ஞான மோட்சகாரகன் என்ற அமைப்பைப் பெற்றவர். குருவும்கேதுவும் சம்பந்தப்படுவது நல்ல அமைப்பாகும். குரு கேதுசாரம், கேதுவுடன் சேர்க்கை, சார பரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், பார்வை என்று எந்த வகையிலாவது சம்பந்தம் ஏற்பட்டால் மதம், மதக்கோட்பாடு, இறைசக்தி, வேதாந்த ஞானம், கௌரவம், செல்வாக்கு, தலைமைப்பதவி, சாதனை படைப்பது, நல்லோர் சேர்க்கை நாடாளும் யோகம் என ராஜயோக பலன்கள் ஏற்படும்.

குருவுடன், கேது சேர்க்கை பெற்று, அந்த குருவிற்கும், கேதுவிற்கும் ஒன்பதாவது வீட்டில் புதனும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அல்லது இருவரில் ஒருவராவது இருக்க வேண்டும். இத்தகைய அமைப்புள்ள ஜாதகம் எந்த வகையிலாவது கோடீஸ்வர ராஜயோகத்தை அனுபவிக்கும். ஜாதகத்தில் எந்த வகையிலாவது குருகேது சம்பந்தப்பட்டு இந்த இருவரின் தசா, புக்தி காலங்களில் அவரவர் கர்ம பூர்வ புண்ணிய சுகிர்த விசேஷத்திற்கேற்ப குபேர சம்பத்தை ஜாதகர் அனுபவிப்பார். ஆன்மிக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார். மத போதகர், மதப்பிரசாரகர் மற்றும் கதை, காலட்சேபம், சொற்பொழிவு போன்றவற்றில் முன்னிலைப்படுத்துவார். மகான்களின் ஆசி பெறுவர். 

மடாதிபதி, அறநிலையத்துறை, கோயில் தக்கார், அறங்காவலர்கள் போன்ற பதவிகள் கிட்டும். கோயில் கட்டுதல், புனரமைத்தல், குளம் வெட்டுதல், கும்பாபிஷேகம் போன்றவற்றை முன்நின்று நடத்தும் பேறு பெறுவர். பெரிய தர்மஸ்தாபனம், கட்டளைகள் அறச்செயல்கள், கல்விச்சாலைகள், வேத பாடசாலைகள், நிதிநிறுவனங்கள் அமைக்கும் பாக்கியம் கிடைக்கும். ஜோதிடம், சாஸ்திர ஆராய்ச்சி, இஷ்ட தெய்வ உபாசனை. குறி சொல்லுதல் போன்றவற்றில் தேர்ச்சியும், ஞானமும் கிடைக்கும். இயல், இசை, நாடகம், நடனம், நாட்டியம், சங்கீதம், பாட்டு ஆகியவற்றில் சிறப்படைவர்.

வியாழ வட்டம் :

ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும், குருவளையம் என்றும் அழைக்கப்படுகின்றன. நம் ஆட்காட்டி விரல்  குருவிரல் என்றும் அந்த விரலுக்கு கீழே உள்ள மேடு குரு மேடு என்றும் அழைக்கப்படுகிறது. மேற்சொன்ன ராசிகளில் குரு இருக்கப் பிறந்தவர்களுக்கு, குருமேட்டைச் சுற்றி மோதிரம் போன்ற வளையம் தோன்றும். இதற்கு குருவளையம் (சாலமன் ரிங்) என்று பெயர். இத்தகைய அமைப்புள்ள ஜாதகர்கள் மரியாதையும், மாண்புகழும் உடையவர்களாக இருப்பார்கள். நாட்டின் உயர் அந்தஸ்துள்ள பதவிகளில் அமருவர். நிதி, நீதித்துறைகளில் இவர்களின் பங்களிப்பு இருக்கும். வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிக்கப்பட இடமுண்டு. சமூகத்தில் இவர்களின் சொல்லிற்கும், பேச்சிற்கும், எழுத்திற்கும் மதிப்பு இருக்கும்.

வெளிநாட்டு சம்பந்தம் :

ஜலராசி அமைப்பு என்பது முக்கியமானதாகும். இதில் குருவின் பங்கு மிகவும் முக்கியமானதும், இன்றியமையாததுமாகும். காரணம் கடகம் என்ற ஜலராசியில் குரு உச்சம் பெறுகிறார். மீனம் என்ற ஜலராசியில் குரு ஆட்சி பெறுகிறார். மகரம் என்ற ஜலராசியில் குரு நீச்சம் அடைகிறார். இதில் கடகம், மீனம் ஆகிய இரண்டு ராசிகளிலும் குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், பூரட்டாதி அமைகின்றன. மேலே சொன்ன ராசிகளில் குரு இருப்பது அல்லது பார்வை, சம்பந்தம் கொண்டு பிறக்கும் ஜாதகர்கள் வெளிநாட்டில் நிரந்தரமாகத்  தங்குவதற்கான பாக்கியம் இருக்கும். அடிக்கடி கடல்கடந்து சென்று வருவார்கள். தொழில்ஸ்தான அமைப்பு சம்பந்தப்படும்போது ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் கைகொடுக்கும். தண்ணீர் சம்பந்தமான, மீள்வளத்துறை மற்றும் கப்பல், வாணிபம் கூடிவரும்.

சந்திராதி யோகங்கள் :

கிரக சேர்க்கை, பார்வை மூலம் பலவகையான யோகங்கள் உண்டாகின்றன. குரு சம்பந்தமாக பல்வேறு யோக அம்சங்கள் நிறைய உள்ளன. யோகங்கள் பெரும்பாலும் லக்னம், சந்திரனை வைத்து செயல்படுகிறது. சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது, ராசிக்கு 4, 7, 10 ஆகிய வீடுகளில் குரு இருப்பது கஜகேசரி யோகம், குருவுடன் புதன் சேர்ந்தால் வித்யா கஜகேசரி யோகம். இந்த அமைப்பு ஜாதகரை உச்சத்திற்கு கொண்டு செல்லும். கல்வியில் பிரகாசிப்பார்கள். செல்வாக்கு, சொல்வாக்கு உண்டு. குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9 ஆகிய இடங்களில் குரு இருந்தாலும் குருசந்திர யோகம் உண்டாகிறது இதனால் நிறைய உயர்வுகள் இருந்தாலும் மனக்குறை இருந்துகொண்டே இருக்கும். பெரும்பான்மையானவர்களுக்குப் படித்த படிப்பிற்கும், பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது.

பூலோகத்தில் பிரவேசிக்கும் பித்ருக்கள் ?

Image result for பித்ருக்கள்

ராமேஸ்வரத்தில் 64 தீர்த்தக் கட்டங்களில் ஒன்றான அக்னி தீர்த்தம் எனப்படும் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சந்திர தீர்த்தம் அருகே உள்ள ஆலமரத்தடியில் ருத்ரபாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அங்கு மஹாளயபட்ச தர்ப்பணம் செய்து முன்னோர்கள் அருள்பெறுவோர் ஆயிரக்கணக்கில் உண்டு. திருப்பூவனம் பூவனநாதர் ஆலயத்தில் சூரியனால் உண்டாக்கப்பட்ட மணிகன்னிகை தீர்த்தக் கரையில் மஹாளயபட்ச தினத்தன்று தர்ப்பணாதி காரியங்களை புரிபவர்கள் முன்னோர்களின் பரிபூரண அருளைப் பெறுகிறார்கள்.

விருத்த காசி எனப்படும் விருத்தாசலத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு அருகேயே ஓடும் மணிமுத்தாறு நதி தீரத்திலும் நீத்தார் கடனை மக்கள் நிறைவேற்றுகிறார்கள்.

திருச்சியில் ரங்கநாதர் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கத்தில் காவிரி நதிக்கரையில் சாஸ்திர விதிப்படி தர்ப்பணம் செய்தால் அபரிமிதமான பலன்கள் கிட்டும்.

பவானி சங்கமேஸ்வரர் ஆலயம், கூடுதுறையில், பக்தர்கள் முன்னோர்களுக்கு சிராத்தம் கொடுத்து மங்கலங்கள் பெறுகின்றனர். திருவையாற்றுப் படித்துறையில் முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து தர்ப்பணம் செய்தால் தீவினைகள் அகன்று நன்மைகள் கிட்டும். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் தர்ப்பணம் செய்து கரையில், ஆலமரத்தடியில் தான தர்மங்கள் செய்தால் நன்மைகள் சூழும். கங்கை நதி ஓடும் காசியில், தர்ப்பணாதி பூஜைகள் செய்வதை சாஸ்திரங்கள் சிறப்பிக்கின்றன. காசியின் அருகே உள்ள விஷ்ணுகயா ஆலமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விஷ்ணு பாதத்தில் தர்ப்பணம் செய்தால் மகத்தான புண்ணியங்கள் வந்து சேரும்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் வைத்திய வீரராகவர் ஆலய திருக்குளத்தில் ஒவ்வொரு அமாவாசையன்றுமே முன்னோர்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவர். மஹாளய அமாவாசை அன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குழுமுவார்கள். கும்பகோணம், நன்னிலம், பூந்தோட்டத்திற்கு அருகே உள்ள திலதைப்பதியில் தர்ப்பணம் செய்து வழிபட முன்னோர்கள் ஆசி கிட்டும். ராமபிரான் தன் தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலம் இது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய திருக்குளக்கரையில் முன்னோர்களை வழிபட, அவர்கள்  வம்சம் தழைக்கும். சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் ஆலய நந்தவனத்தின் பின் பகுதியில் பக்தர்கள் தம் முன்னோர் கடன்களை செய்து புண்ணியம் பெறுகின்றனர். கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் அங்குள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அத்தல குளக்கரையில் முன்னோர் கடன் தீர்த்து அருள் பெறுபவர்கள் ஏராளம்.

வேதாரண்யத்தில் ஆதிசேது எனும் கோடியக்கரை தீர்த்தக்கரையில் மூழ்கி திதி கொடுத்து பக்தர்கள் வாழ்வில் வளம் பெறுகிறார்கள். ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் உள்ள குப்த கங்கையில்  நீத்தார் கடனை நிறைவேற்றினால் பெரும் புண்ணியம் கிட்டும். காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயத்தில், ராமபிரான், ஜடாயுவிற்கு நீத்தார் கடன் நிறைவேற்றினார். அங்கு, திதி நிறைவேற்றினால் முன்னோர் ஆசியுடன், திருமாலின் திருவருளும் கிட்டும்.

அளகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயிலில் நவகிரக சந்நதியில் சூரியனும் சந்திரனும் எதிரெதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இதனால் மஹாளயபட்சத்தன்று அங்கு நீத்தார் கடனை நிறைவேற்றும் பக்தர்கள் அனேகம். திருச்சி, பூவாளூர் திருமூலநாதர் ஆலயத்திற்கு அருகே ஓடும் பங்குனி ஆற்றின் கரையில் மஹாளயபட்ச தர்ப்பணம் செய்தால் திதி கொடுக்கத் தவறிய தோஷங்கள் நீங்கி, முன்னோர்கள் ஆசி கிட்டும்.

Wednesday 27 December 2017

தோஷங்கள் நீக்கும் நள தீர்த்தம்

Image result for நள தீர்த்தம்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனிபகவான். சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம். இங்கே நளதீர்த்தத்தில் நீராடி சனீசுவரை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார். விரும்பிய பலன்களை அளிப்பார் என்பது  புராண வரலாறு. 

நளன்குளம் வரலாறு : 

பிரமாண்டமான அரண்மனை கொலு மண்டபத்திலே தமயந்தியின் சுயம்வரத் திருமணம் நடந்தேறியது. நள மகராஜனை மணந்து கொண்ட தமயந்தி, மனமகிழ்ச்சியுடன் நளனுடன் கைகோர்த்துக்கொண்டு மணமாலை சகிதமாய் மணிமண்டபத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். தமயந்தியின்  சுயம்வரம் திருவிழாவில் தானும் பங்கேற்று தமயந்தியை அடைய வேண்டும் என்ற ஆவலோடு எதிரே சற்று தொலைவில் சனீஸ்வர பகவான் வந்து கொண்டிருந்தார்.  

சனீஸ்வரனின் ஒரு கால் ஊனமாக இருந்ததால் அவரால் குறிப்பிட்ட நேரத்துக்குள் சுயம்வரத்துக்கு வரமுடியாமல் போனது. இப்போது சுயம்வரம் முடிந்து நளனும், தமயந்தியும் எதிரே வருவதை கண்டார். தமயந்தி தமக்கு கிடைக்காமல் போனதால் வேதனையும், கோபமும் கொண்டு அப்படியே நின்றுவிட்டார். நளனும் தமயந்தியும் பெருமகிழ்ச்சியுடன் ஆனந்தமாக சிரித்தபடி சனீஸ்வரனை கண்டும் காணாமலும் சென்றனர். சனிபகவானுக்கு அவர்கள் இருவரையும் ஆட்டிப்படைக்கும் சந்தர்ப்பமும் கிட்டியது. இறைவனை பூஜிப்பதற்காக பாதத்தில் தண்ணீர் ஊற்றி கழுவ முனைந்த நளன், சரிவரக்கழுவாமல் பூஜைக்கு சென்றமர்ந்தான். இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த சனிபகவான், நளனின் இடது கால் பாதத்தை பற்றிக்கொண்டான்.  

சனியின் தோஷத்திற்கு ஆளான நள சக்கரவர்த்தி, ஏழரை ஆண்டு சனி பிடித்து, எல்லா துன்பங்களையும் அனுபவித்தார். நாரத மகரிஷி அறிவுரையின்படி சனிப்பிரீத்தி செய்ய தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். பல மகான்களை தரிசித்தும், புண்ணிய நதிகளில் நீராடியும் அவனது மனக்கலக்கம் தீரவில்லை. இறுதியில் பரத்வாஜ முனிவரை சந்தித்து தன் மனக்கலக்கம் தீர வழிகேட்டான். அவரும், திருநள்ளாறு சென்று வழிபடுமாறு கூறினார். நளமகராஜனின் இந்த பிரமை நீங்க திருநள்ளாறுக்கு குடும்பத்துடன் வந்து அங்குள்ள குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை தரிசித்து கருமை நிற வஸ்திரம் சாற்றி, எள் அன்னம் நிவேதனம் செய்து, எள் விளக்கேற்றி தம் பிழையை பொறுத்தருளவும், நல்வாழ்வு கிட்டவும் வேண்டிக்கொண்டான்.   

சனிபகவான் தனக்கு காட்சி கொடுத்து பேரருள் வழங்கியதால் நளமகராஜனின் ஏழரை சனியின் கொடுமை, துன்பங்களும் நீங்கியதாம். நீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கு. இந்த நளதீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீக்கப்படும் என்று சனிபகவான் வரம் அருளினார். நளனும் நள தீர்த்தத்தை  உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு பல திருவிழாக்களை வைகாசி மாதம் புனர்பூச நாளில் நடத்தி இறைபணி செய்து உய்யுற்றான் என்பது வரலாறு.

கோயிலின் தீர்த்தமே அக்னி தீர்த்தம் ?

Image result for அக்னீஸ்வரர்

மதுரை மாவட்டம் தேவன்குறிச்சி, டி.கல்லுப்பட்டி எனும் தலத்தில் அக்னீஸ்வரராக ஈசன் அருள்பாலிக்கிறார். கும்பகோணத்திற்கு அருகேயுள்ள கஞ்சனூர் எனும் பிரசித்தி பெற்ற சுக்கிரன் தலத்தில் அக்னீஸ்வரரே மூலவராக அருளாட்சி நடத்துகிறார். நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள நல்லாடை எனும் தலத்தில் மூலவராக அக்னீஸ்வரர் அருள்கிறார்; அம்பாள் சுந்தரநாயகி எனும் திருநாமத்தோடு அபயம் அளிக்கிறாள். இங்கு அக்னி சொரூபமாக இருப்பதால் அதை தணிக்கும் வகையில் அருகேயே தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டிருப்பது சிறப்பாகும். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் மூலவராகவே அக்னீஸ்வரர் அருள்கிறார்.

கோயிலின் தீர்த்தமே அக்னி தீர்த்தம்தான். திருச்சி, ஸ்ரீரங்கத்திற்கு அருகேயுள்ள எட்டரை கிராமத்தில் அக்னீஸ்வரர் அருள்கிறார். திருநெல்வேலிக்கு அருகேயுள்ள கரிவலம்வந்த நல்லூர் அக்னித்தலமாக கருதப்படுகிறது. அதேபோல ராஜவல்லிபுரம் எனும் தலத்தில் அக்னீஸ்வரர் மூலவராக ஆருள்பாலிக்கிறார். அக்னி பகவான் சிவபெருமானை பூசித்த திருத்தலங்கள் ஏழு ஆகும். அவை திருப்புகலூர், கஞ்சனூர், அன்னியூர், திருத்துறைப்பூண்டிக்கு அருகேயுள்ள திருக்கொள்ளிக்காடு, கோட்டூர், திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணத்திற்கு அருகேயுள்ள முழையூர் ஆகும். முழையூர் ஈசனுக்கு வன்னீஸ்வரர் என்பது பெயராகும். ‘வன்னிக்குடி முழையூர்’ என்றே இவ்வூர் அழைக்கப்பட்டிருந்திருக்கிறது. 

கரூருக்கு அருகேயுள்ள நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. இதற்கு அருகேயே அக்னீஸ்வரர் எனும் திருப்பெயரில் கோயில் அமைந்துள்ளது. ஈசனின் நெற்றிக் கண்ணை உலைக்கண் என்பார்கள். உலை என்பது கனன்று நெருப்புப் பொறியோடு காணப்படுவதாகும். மாமல்லபுரத்தில் பழைய கலங்கரை விளக்கம் என்ற பெயரில் இருப்பது உலைக்கண்ணீஸ்வரருக்கு கட்டப்பட்ட கோயிலாகும். கார்த்திகை மாதத்தில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு பிரம்மா-விஷ்ணுக்கிடையே ஏற்பட்ட போட்டியால் ஈசனே நெருப்பு ஸ்தம்பமாய் நின்ற நிகழ்வையே விளக்குகிறது. 

அந்த பெருந்தீயையே நாம் புறத்திலே எரியவிட்டு அகத்திலும் எரிய வேண்டுமென பிரார்த்திக்கிறோம். இதுதவிர அக்னியை கரத்தில் ஏந்தி (அக்னி சட்டி) வருதல், நெருப்பு மிதித்தல், அக்னிக் காவடி என்று பல்வேறு சடங்குகளினூடாகவும் அக்னி வழிபாட்டை நாம் மேற்கொண்டு வருகிறோம். அந்தணர்கள் மூன்று சந்நதிகளிலும் ‘செந்தீ வேட்டல்’ எனப்படும் ஆஹிதாக்னியை வழிபட்டு அக்னி ஹோத்ரம் செய்வர். ஈசன் இவர்களின் வேள்விக் குண்டத்தில் முத்தீயின் வடிவமாக விளங்குகிறார். அக்னி காலையில் பாலகனாகவும், முற்பகலும் பிற்பகலும் சந்திக்கும் வேளையில் யௌவனாக்னியாகவும், இரவு தொடங்கும் அந்திப் பொழுதில் விருத்தாக்னியாகவும் வழிபடப்படுகிறார். வேதங்கள் அந்தணர்கள் வேட்பித்து வணங்கும் தீயை தட்சிணாக்னி, காருகபத்யம், ஆஹவனீயம் என்று வகைப்படுத்தி வேள்வி செய்து வணங்குகின்றார்கள். அக்னீஸ்வரராக இருந்து இறைவன் அருள்பாலிப்பதுபோல அக்னி தீர்த்தமாகவும் பல்வேறு தலங்களில் அமைந்திருக்கின்றன. திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கே அமைந்துள்ளது திருவெண்காடு, ராமேஸ்வரம், கீழ்வேளூர், கூவம் ஆகிய தலங்களிலும் அருள்பாலிக்கின்றார்.

மார்கழி மாதம் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் ?

Image result for guru god

தனம், புத்திரம் ஆகிய இரண்டிற்கும் முக்கிய அதிகாரம் பெற்றிருக்கும் குருவின் சொந்த வீட்டில் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதத்தை மார்கழி மாதம் என்று அழைக்கின்றோம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மனோபலமும், ஆன்ம பலமும் நிரம்பப் பெற்றவர்கள். எதையும் வேகமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அரசியல், ஆன்மிகம், தத்துவம் போன்ற பல துறைகளில் பொறுப்புள்ள பதவிகளில் திறமையாக செயல்படுபவர்களுக்கு கல்வி அறிவும், அரிய பல நூல்களை கற்பதில் அதிக ஆர்வமும் இருக்கும். இவர்களில் பலர் பல மொழிகளில் பாண்டித்யம் பெற்று இருப்பார்கள். வெளிவிஷயங்களையும், பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் உடனே கிரகிக்கும் சக்தி உடையவர்கள். எந்த விஷயத்தை பற்றி விவாதிப்பது என்றாலும் அதைப்பற்றி உடன் படித்து தெரிந்து கொண்டு புள்ளி விவரங்களுடன் பேசுவார்கள். 

நுனிப்புல் மேய்வது இவர்களுக்குப் பிடிக்காது. பிடிவாத குணமும், முன்கோபமும் இருக்கும். அதே நேரத்தில் சூழ்நிலைக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்வார்கள். நியாயத்திற்கும், நேர்மைக்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். இவர்களிடம் ஒளிவு மறைவு இருக்காது. இதனால் பலரின் எதிர்ப்பை இவர்களே தேடிக்கொள்வார்கள். எந்த ஒரு வேலை அல்லது பொறுப்பை இவரை நம்பி, இவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்தால் அதை செவ்வனே செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். பருவ வயதில் உள்ள ஆண்கள், பெண்கள் எதிலும் கவனமாக இருப்பது அவசியம். இவர்கள் பெற்றோர்களின் கண்காணிப்பில் வளர்வது மிகவும் அவசியமாகும். கூடா நட்பு கேடாய் விளையும் என்பதற்கேற்ப சிறு வயதில் தகாத சேர்க்கையால் சில இடையூறுகள் வரவாய்ப்புள்ளது. தீய பழக்கவழக்கங்கள் இவர்களை எளிதில் வந்து பற்றும். எதிலும் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கக்கூடியவர்கள் என்பதால் பிரச்னைகளை இவர்களே வலிய சென்று வரவழைத்துக்கொள்வார்கள். பின்பு அதற்காக மிகவும் வருந்துவார்கள். 

போட்டி, பந்தயங்களில் கலந்துகொள்வது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அறிவுத்திறன் போட்டிகள், படம் வரைவது கலைகளில் ஆர்வம் செலுத்துவது இயற்கையிலேயே அமைந்து இருக்கும். ஓட்டப்பந்தயம், தடகள விளையாட்டு, உடற்பயிற்சி, பளுதூக்குதல், நீச்சல், கேரம், செஸ் போன்ற விளையாட்டுக்களில் அதிக ஆர்வமும் எளிதாக அதில் உள்ள நுணுக்கங்களை கிரகித்துக்கொள்ளும் ஆற்றலும் மிக்கவர்கள். லக்கினம், லக்கினாதிபதி, குரு, புதன் ஆகியவை நல்ல அம்சத்தில் இருக்கப் பிறந்தவர்கள் எல்லா வகையிலும் வெற்றியாளர்களாகத் திகழ்வதற்கு யோகம் உண்டு. சாஸ்திர சம்பிரதாய ஒழுக்கம், ஞானம், சமூக நலன், பொதுநலனிலும் அக்கரை உடையவர்களாக இருப்பார்கள்.

தனம்  குடும்பம்  வாக்கு :

இவர்கள் குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அடிக்கடி இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை, பிடிவாத குணம் தலை தூக்கும். இவர்களின் குற்றங்களை மிக சாமர்த்தியமாக மறைப்பார்கள். மற்றவர்களின் குற்றங்குறைகளை தேடிக் கண்டுபிடித்து சுட்டிக்காட்ட தயங்க மாட்டார்கள். பேசுவதை எல்லாம் பேசிவிட்டு வார்த்தைகளை அள்ளிக்கொட்டிவிட்டு பின்பு வருத்தப்படுவார்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் கறாராக இருந்தாலும், நெளிவு, சுழிவு பார்த்து நடந்துகொள்வார்கள். சேமிப்பில் இவர்கள் அதிக கவனமாக இருப்பார்கள். குரு, சனி, செவ்வாய் சாதகமாக இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு பல வகைகளில் வருமானம் வரும். தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வது இவர்களுக்கு லாபத்தை தரும். நல்ல விஷயங்களை பேசி முடிப்பதற்கும், மத்தியஸ்தம், தூது செல்வதற்கும் மிகவும் ஏற்றவர்கள். சுய தேவைக்கும், ஆசைக்கும் பணம் செலவு செய்ய தயங்க மாட்டார்கள்.

திட  தைரிய  வீரியம் :

தைரியமாகவும், விவேகமாகவும், வேகமாகவும் காரியம் சாதிப்பதில் இவர்களுக்கு இணை இவர்களே, பேச்சில் ஒளிவு, மறைவு இருக்காது. தற்புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். அதே நேரத்தில் பிறரை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதில் கை தேர்ந்தவர்கள். வெளி விஷயங்கள், மனக்குழப்பங்களை பிறர் மீது காட்ட மாட்டார்கள். எந்த பிரச்னையாக இருந்தாலும் அைத சரியாக முடித்துவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள். சனி, புதன் பலமாக அமையப் பெற்றவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். கால நேரத்தை விரயம் செய்யாமல் குறித்த நேரத்தில் எதுவும் நடக்க வேண்டும் என்று திடமாக செயல்படுவார்கள். மறைமுக, நேர்முக எதிர்ப்புக்கள் இவர்களுக்கு இருக்கும். இருந்தாலும் எதை எதை எப்படி கையாள வேண்டுமோ அப்படி செயல்பட்டு வெற்றியடைவார்கள்.

சொத்து  சுகம் :

தனபுத்திரகாரகன் குருவின் அமைப்பு நல்ல யோக அம்சத்தில் இருந்தால் படிப்பறிவும் அனுபவ அறிவும் கை கொடுக்கும். தாய்வழி மூலம் சொத்து சேருவதற்கு அதிக வாய்ப்புண்டு. பூர்வீகச் சொத்துக்கள் இவர்களுக்கு உரிய காலத்தில் பலன் தரும். செவ்வாய் சாதகமாக இருந்தால் பூமி லாபம் உண்டு. எஸ்டேட், தோட்டம், தோப்பு போன்றவைகள் இவர்களுக்கு எளிதாக அமையும். கட்டிடங்கள், பிளாட்டுக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். சிந்தனா சக்திமிகுந்தவர்கள், எப்பொழுதும் எதையாவது கணக்குப்போட்டுக் கொண்டே இருப்பார்கள். மூளைக்கு அதிக உழைப்பைத் தருவதால் அடிக்கடி கழுத்துவலி, ஒற்றைத் தலைவலி, நரம்புத் தளர்ச்சி, பார்வை கோளாறுகள் ஏற்படும். ஜீரண கோளாறுகள் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. ஆகையால் கண்ட நேரங்களில் இவர்கள் கண்டதை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ரத்த சம்பந்தமான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக மஞ்சள் காமாலை போன்றவற்றில் கவனமாக இருப்பது அவசியம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அடிக்கடி சரிபார்த்துக் கொள்வது நல்லது.

பூர்வ புண்ணியம்  குழந்தைகள் :

இவர்கள் கைராசி, வாக்குபலிதம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களால் தொடங்கி வைக்கப்படும் நல்ல விஷயங்கள் மளமளவென பல்கிப் பெருகும். இவர்களுக்கு E.S.P. என்று சொல்லக்கூடிய காலத்தை முன்கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் இருக்கும். உள்ளுணர்வு அதிகம் இருக்கும். ஒருவரின் எண்ண ஓட்டத்தை சில நிமிடங்களிலேயே தெரிந்து கொள்வார்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். மந்திர, தந்திர, சாஸ்திர விஷயங்கள் மற்றும் தியானப் பயிற்சி இவர்களுக்கு சித்தியாகும். திருப்புகழ், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களில் உள்ள பாடல்களை அதன் பொருள் உணர்ந்து  ஓதி மனதை செம்மைப்படுத்தும் வழிமுறைகள் இவர்களுக்கு கைகூடும். சிவன், விநாயகர், முருகர் வழிபாடு இவர்களுக்கு நல்ல பலனைத் தரும். மகான்களின் சமாதிகளுக்குச் சென்று தரிசனம் செய்வதால் ஆன்ம பலம், லயம் கிட்டும். செவ்வாய், வியாழன் மற்றும் அமாவாசை நாட்களில் விரத வழிபாடு மேற்கொண்டால் நல்ல ஞான யோகம் சித்திக்கும். குழந்தைகள், பேரப்பிள்ளைகள் மூலம் பெருமை அடைவார்கள். சகோதர உறவுகளும் இவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

ருணம்  ரோகம்  சத்ரு :

இவர்களின் குணாதிசயங்கள் அடிக்கடி மாறுவதால் மறைமுக, நேர்முக எதிர்ப்புக்கள் இருக்கும். இருந்தாலும் அதையெல்லாம் இவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். சனி சாதகமாக அமைந்தால் பெரிய அளவில் கடன் பிரச்னைகள் வராது. இவர்களின் எதையும் சமாளிக்கும் திறமை காரணமாக எதிலும் அகலக்கால் வைத்து சிக்கிக்கொள்ள மாட்டார்கள். ரத்த சொந்தங்கள் மூலம் பிரச்னைகள் வர வாய்ப்பில்லை. ஆனால் அக்கம், பக்கம் உள்ளவர்கள், தொழில் போட்டியாளர்கள் மூலம் சில வருத்தங்கள், சங்கடங்கள் வந்து தீரும். பெண்கள் மூலம் சில பிரச்னைகள், வம்பு வழக்குகள், சர்ச்சைகள் வருவதற்கு இடம் உண்டு.

பயணங்கள்  மனைவி  கூட்டாளிகள் :

பயணங்களில் அதிக ஆர்வமும் நாட்டமும் உடையவர்களாக இருப்பார்கள். சிறுவயதில் நண்பர்களுடன் உல்லாசப் பயணங்கள் செல்வது மிகவும் பிடிக்கும். மலை, அருவி, எழில் தோற்றங்களை கண்டு ரசிப்பார்கள். அழகை ஆராதிப்பவர்கள். பயண அனுபவங்களை ரசனையுடன் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். கப்பல் மற்றும் விமான பயணங்களில் அலாதி பிரியம் இருக்கும். நண்பர்கள், தொழில், வியாபார கூட்டாளிகளுடன் இவர்களுக்கு நல் உறவு இருக்கும். இவர்களின் விடாப்பிடியான குணநலன்களை புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து விடுவார்கள். மனைவி வகையில் நல்ல யோக, போக, பாக்கியத்தை அடையக்கூடியவர்கள். பொதுவாக திருமணத்திற்கு பிறகுதான் இவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டகரமான வாழ்க்கை அமையும். சுக்கிரன் சாதகமாக அமைந்தால் இருவருக்கும் இல்லறம் இனிக்கும். சில நேரங்களில் இவர்களின் பிடிவாத குணம் காரணமாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்துபோகும். கிரக தசா புக்திகள் சாதகமாக இல்லாமல் இருப்பார்கள். சிறிது காலம் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலைகளும் வரும்.

தசமஸ்தானம்  தொழில் :

வேலைவாய்ப்பு, தொழில் வியாபாரம் போன்ற அமைப்புக்களில் இவர்கள் தனியார், அரசுத்துறையில் பெரிய பதவிகளில் அமரும் யோகம் உடையவர்கள். சமயோசித புத்தி, அறிவு, அனுபவ ஞானம் இவர்களுக்கு பெருமளவு கைகொடுக்கும். அரசாங்க நிர்வாக பதவிகளில் பணிபுரியும் அமைப்பு உண்டு. குரு, சனி, புதன் சாதகமாக அமையப்பெற்ற ஜாதகர்கள் நிதி, நீதித்துறையில் பணிபுரிபவர்கள் திறமை வாய்ந்த வக்கீல்களாக விளங்குவார்கள். சமய நெறி போதகர்களாகவும், சாஸ்திர, விஞ்ஞான ஆராய்ச்சி நிபுணராகவும், பேராசிரியர்களாகவும், வணிகவியல், கணக்கு, அக்கவுன்டன்சி, ஆடிட்டர்களாகவும் இருப்பார்கள். மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் இன்ஜினீயர்களாக உருவாவதற்கு இடம் உண்டு. பத்திரிக்கை சம்பந்தமான தொழில் அச்சகத்தொழில், பதிப்பகம், புத்தக வணிகம் போன்றவற்றில் நல்ல நிலையை அடைவார்கள். இயல், இசை, நாடகம் திரைப்படம் சம்பந்தமான கலைத்துறை அது சார்ந்த உபதொழில்கள் இவர்களுக்கு அமையும். கார், லாரி, பஸ் போன்ற வாகனம் சம்பந்தமான டூரிஸ்ட் தொழில்கள் கைகொடுக்கும். நிலம் சம்பந்தமான ரியல் எஸ்டேட், அடுக்குமாடி கட்டி விற்பது, கமிஷன், புரோக்கர், கான்ட்ராக்ட் தொழில்கள் மூலம் பெரும் தனமும், புகழும் பெரும் அமைப்பும் இவர்களுக்கு கிடைக்கும்.