பெருமாள் கோயிலில் தரிசனம் முடிந்ததும், துளசி தீர்த்தம் வழங்குவது வழக்கம். அதை ஒரு முறை வாங்கியே பருகுகிறோம். ஆனால், தீர்த்தத்தை பயபக்தியுடன், இருகைகளாலும் மூன்று முறை தனித்தனியாகப் பெற்று, தனித்தனியாகவே பருக வேண்டும் என்று ஸம்ருதி ஸ்லோகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று முறை தீர்த்தம் குடித்தால் தான், உடல், உள்ளம், வாக்கு ஆகிய மூன்றாலும் செய்த காயிகம், மாநஸம், வாசிகம் என்னும் மூன்று வித பாவங்களும் நீங்கும். பெருமாளின் தீர்த்தம் மட்டுமில்லாமல், கலசம் வைத்து பூஜிக்கப்பட்டு தரும் தீர்த்தத்திற்கும் இது பொருந்தும்.
Tuesday 26 December 2017
மூன்று தடவை தீர்த்தம் வாங்குங்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment