Tuesday 12 December 2017

தோஷ பரிகாரங்கள் செய்யும்போது…

தோஷ பரிகாரங்கள் செய்யும்போது…

கிரகங்களுக்குப் ப்ரீதி, பரிகாரங்கள் செய்யும்போது, மனம் ஒருநிலையில் இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரகங்களுக்குப் ப்ரீதி, பரிகாரங்கள் செய்யும்போது, மனம் ஒருநிலையில் இருக்க வேண்டும். ஒப்புக்காக, ஜோசியர் மற்றும் பெரியவர்கள் கூறிவிட்டார்களே என அலட்சியமாகச் செயல்படக் கூடாது.உள்ளம் உருக, பகவானையும், கிரகங்களையும் மனதார நினைத்து வழிபட்டால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

திருமண தோஷம் நீங்க சுயம்வரா பார்வதி ஜப, ஹோமம் செய்வதும் நல்லது. இந்த வழிபாட்டை வேத விற்பன்னர்களின் வழிகாட்டுதலோடு செய்ய வேண்டும்.

ஜாதகத்தில் திருமணத் தடை மற்றும் தாமதத்தை உண்டாக்கும் கிரகம் எது என்பதை அறிந்து, அந்தக் கிரகத்துக்குரிய சாந்தி பரிகாரங்கள் செய்துகொள்வது அவசியமாகும். அதன்மூலம் திருமண தோஷம் விலகவும், திருமணம் ஆகவும் வாய்ப்பு உண்டாகும்.

லக்னம், லக்னாதிபதி, 7-ம் வீடு, 7-ம் வீட்டோன், பூர்வ புண்ணியம், குரு பலம், சுக்கிர பலம் உள்ளவர்களுக்கு உரிய காலத்தில் சிறப்பாக திருமணம் நடக்கும் என்று சொல்லலாம். திருமண வாழ்வும் வெகு சிறப்பாக அமையும். குறிப்பிட்ட ஜாதக பலம் உள்ளவர்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வார்கள்.

No comments:

Post a Comment