Friday 8 December 2017

தேனாய் பாடிய "கிளி'


மகாபாரதத்தை உலகிற்கு அளித்த வியாசரின் புதல்வர் சுகமுனிவர். கிளி முகம் கொண்ட இவருக்கு நாரதர் உபதேசம் செய்தார். தவவாழ்வில் ஈடுபட்ட இவர், எல்லா உயிர்களிலும் கடவுள் வியாபித்து இருப்பதை உணர்ந்தார். ஒரு நதிக்கரை வழியே தந்தையுடன் சுகப்பிரம்மர் சென்றபோது, நீராடும் தெய்வப்பெண்களைக் கண்டார். அவர்கள், வயோதிகரான வியாசரைக் கண்டதும் நாணத்தால் எழுந்து ஆடையால் உடலை மறைத்தனர். ஆனால், வாலிபரான சுகரைக் கண்டு வெட்கப்படவில்லை. 

"உங்களின் இந்த மாறுபாடான செயலுக்கு என்ன காரணம்?' என வியாசர் கேட்க, "எல்லாவற்றையும் சுகப்பிரம்மர் தெய்வீகமாக காண்பது தான்,'' என விடையளித்தனர். இவரே பரீட்சித்து மன்னனுக்கு கிருஷ்ணனின் கதைகளைப் போதித்தார். அது "பாகவதம்' என்னும் நூலாயிற்று. "சர்க்கரைப் பந்தலில் பெய்த தேன்மழை' என்று இந்நூலைப் பாராட்டுவர்.

No comments:

Post a Comment