கோவில்களில் சுயம்பு மூர்த்தியாக உள்ள தெய்வத்தை பலமுறைகள் வலம் வரும்போது, தன்னம்பிக்கை அதிகரித்து தற்கொலை எண்ணங்கள் அகலும்.
எந்த மனிதனுக்கும் அவன் தாங்க முடியாத கஷ்டத்தை இறைவன் கொடுப்பதில்லை. இருந்தாலும் குடும்பம், தொழில், சமுதாய பிரச்சினைகளால் தற்கொலை போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து விடுகின்றன. இறை நம்பிக்கை குறைவதே தற்கொலை எண்ணத்திற்கு மூல காரணமாக உள்ளதாக பெரியோர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவில் மட்டும் கோடிக்கணக்கான சுயம்பு லிங்க மூர்த்திகள் உள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் சுயம்பு மூர்த்திகள் இருக்கின்றன. கோவில்களில் சுயம்பு மூர்த்தியாக உள்ள தெய்வத்தை பலமுறைகள் வலம் வரும்போது, தன்னம்பிக்கை அதிகரித்து தற்கொலை எண்ணங்கள் அகலும். அதுமட்டுமல்லாமல், எப்போதும் இறை நாமத்தை சொல்லி வருவது அல்லது அவரது பெயரையே அவர் சொல்லி வருவது போன்றவற்றால் தன்னம்பிக்கை அதிகரித்து தற்கொலை எண்ணங்கள் விலகும் என்று ஆன்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment