Friday 1 December 2017

முருகனின் தூதுவர்


சூரசம்ஹாரத்தில் முருகனின் தோளோடு தோள் நின்றவர் வீரபாகு. சேனைத்தலைவரான இவர், முருகனுக்காக சூரபத்மனிடம் தூது சென்றார். ராமனுக்கு அனுமன் எப்படி பணியாற்றினாரோ, அதுபோலத் தான் முருகனுக்கு வீரபாகுவும். ராமநாமம் ஒலிக்கும் இடத்தில் சூட்சும வடிவில் அனுமன் இருப்பது போல "முருகா' என்ற நாமம் ஒலித்தால் அங்கே வீரபாகு இருப்பார் என்பது ஐதீகம். தேனி மாவட்டம் சுருளி வேலப்பர் கோயில் மூலஸ்தானத்தில், முருகன் அருகில் வீரபாகு வீற்றிருக்கிறார்.

No comments:

Post a Comment