Thursday 14 December 2017

சிவனுக்கு துளசி பூஜை

சிவனுக்கு துளசி பூஜை

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி என்ற இடத்தில், உள்ள சிவன் கோவிலில் திங்கட்கிழமைதோறும் இறைவனுக்கு துளசி இலை அர்ச்சனை செய்யப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி என்ற இடத்தில், மருநோக்கும் பூங்குழலியம்மை சமேத திருநோக்கிய அழகிய நாதர் ஆலயம் இருக்கிறது. அம்பாள் இத்தல இறைவனை, தன்னுடைய கோரிக்கைகள் நிறைவேற வேண்டி துளசி இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டதாக தல வரலாறு தெரிவிக்கின்றது.

எனவே திங்கட்கிழமைதோறும் இந்த ஆலயத்தில் இறைவனுக்கு துளசி இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. திருமண வரம் வேண்டுபவர்கள், கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் இந்த வழிபாட்டு வேளையில் இறைவனை தரிசித்தால் சிறந்த பலனைப் பெறுவார்கள்.

No comments:

Post a Comment