
யானையின் காதிற்கு தனிச்சிறப்பு உண்டு. மற்ற விலங்குகளின் காது குழிவாக கிண்ணம் போல இருக்கும். ஆனால், யானையின் காது விசிறி போல பரந்திருக்கும். இதன் மூலம் ஒலி சிதறாமல் தெளிவாக காதில் விழும். அதனால் விநாயகருக்கு "கஜகர்ணர்' என்னும் பெயர். "யானைக்காது கொண்டவர்' என்பது இதன் பொருள். விநாயகருடைய சிற்பத்தில் அவரின் முகத்திற்கு சமமாக இருபுறமும் முன்புறம் நோக்கிய இரு காதுகள் இருக்கும். தன்னை நாடி வருபவர்களின் பிரார்த்தனையை "அப்படியே கேட்டு அருள்பவர்' என்னும் விதத்தில் விநாயகர் விளங்குகிறார்.
No comments:
Post a Comment