Wednesday 31 January 2018

ஏன் போடுகிறோம் எலுமிச்சை மாலை ?


பத்ரகாளி, துர்க்கை, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது எலுமிச்சை மாலை சாத்துவார்கள். இந்த மாலையை தயாரிக்கும் போது ஒரே அளவுள்ள மஞ்சள் நிறமுள்ள பழங்களை மாலையாக கோர்ப்பது நல்லது. பழங்களின் எண்ணிக்கை 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பழங்கள் காயாக இருந்தால் தவிர்த்து விடலாம். எலுமிச்சை மாலை சாத்தும் போது அத்தெய்வங்களை குளிர்விக்க தயிர்சாதம், பானகம் நிவேதனம் செய்ய வேண்டும். கூழ் வார்த்தும் பக்தர்களுக்கு கொடுக்கலாம். நீண்டநாள் தடைபட்ட செயல்கள் நிறைவேற எலுமிச்சை மாலை சாத்தும் வழக்கம் இருக்கிறது.

No comments:

Post a Comment