Tuesday 23 January 2018

கண்ணனின் பெயர் கொண்ட ஊர்


திருவாரூர் மாவட்டத்தில் கண்ணனின் பெயரால் அமைந்த ஊர் திருக்கண்ணமங்கை. இங்குள்ள மூலவரை "பத்தராவிப் பெருமாள்' என்பர். பக்தர்களின் அன்பைப் பெற ஆவி போல விரைந்து வருவதால் இப்பெயர் பெற்றார்.

பக்தர்கள் மீது குழந்தைபோல அன்பு காட்டுவதால் "பக்தவத்சலன்' என்றும் பெயர் உண்டு. இங்கு தேவர்கள் தேனீக்களாக உருவெடுத்து வந்து பெருமாளை வணங்குவதாக ஐதீகம். தாயார் சன்னிதியின் வடபுறத்தில் இப்போதும் தேன்கூடு காணப்படுகிறது. இங்கு ஒருநாள் தங்கி, பக்தியுடன் பெருமாளை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment