Sunday 28 January 2018

பொட்டு வைப்பது ஏன் ?

Image result for பொட்டு வைப்பது

நெற்றியில் திலகம் (பொட்டு) இல்லாமல் செய்யும் வழிபாட்டிற்கு பலன் இல்லை என்கிறது சாஸ்திரம். ஹோமம், பிதுர் தர்ப்பணம் போன்றவற்றில் ஈடுபடும் போதும் திருநீறு அல்லது திருமண் இட்டிருப்பது அவசியம். "நீறில்லா நெற்றி பாழ்' என்று அவ்வையாரும் திருநீற்றின் முக்கியத்துவத்தைக் கூறியுள்ளார்.

நெற்றியில் புருவ நடுவில் பைனீயல் கிளாண்ட் என்னும் அகச்சுரப்பி உள்ளது. இதனை யோகிகள் "மூன்றாவது கண்' என்னும் நெற்றிக்கண்ணாக குறிப்பிடுகின்றனர். அதை தூண்டி விழிப்படையச் செய்யவே நெற்றியில் பொட்டு, திருநீறு இட்டுக் கொள்கிறோம்.

திருநீறு அணிந்தால் உடலும், உள்ளமும் தூய்மை பெறும். சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியையும், குங்குமம், மஞ்சள் ரத்த தூய்மையையும் தரும். நெற்றியில் இடும் திலகத்தால் திருஷ்டி தோஷமும் நீங்கும்.

No comments:

Post a Comment