Sunday 28 January 2018

முருகன் பழமொழிகள்


தமிழ்த் தெய்வமான முருகனைக் குறித்த பழமொழிகள் பல உள்ளன. அவை முருகனின் சிறப்பையும், பழமையையும் வெளிப்படுத்துகின்றன. 

* சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை.
* சிந்தை நொந்தவனுக்கு கந்தனே துணை 
* வழிக்குத் துணை வடிவேல்
* வடிவேல் அறிய வஞ்சகம் இல்லை 

ஆகிய பழமொழிகள் கலியுகத்தில் ஏற்படும் தீமைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வது பற்றி வலியுறுத்துகின்றன. 

முருகன் அன்றி வேறு கதியில்லை என்பதை விளக்கும் வகையில் "கலிக்கும்(கலியுகத்திற்கும்) கிலிக்கும்(பயத்திற்கும்) கந்தனை எண்ணு' என்ற பழமொழியும் இருக்கிறது. 

"திக்கற்றவருக்கு தெய்வமே துணை' என்ற பழமொழி உண்டு. அந்த தெய்வம் எது என்பதற்கு விடையாக "கேள்(உறவினர்) அற்றவருக்கு வேள்(முருகன்)' என்று ஒரு பழமொழி இருக்கிறது. இந்த உண்மையை நமக்கு உணர்த்தவே தைப்பூச நன்னாளில் தன்னை நாடி வரும் பக்தர்களை நோக்கி, பழநி முருகப்பெருமான் "யாமிருக்க பயமேன்' என்று அபயகரம் காட்டி காட்சியளிக்கிறார்.

No comments:

Post a Comment