Tuesday 30 January 2018

உப்பை நம்பவில்லை



உன்னைத் தான் நம்புகிறேன் முருகன் அடியாரான பாம்பன் சுவாமி சென்னையில் வாழ்ந்தார். ஒருநாள் அவர் சாலையில் நடந்து செல்லும் போது குதிரை வண்டி மீது மோதி கால் எலும்பு முறிந்தது. அவர் உண்ணும் உணவில் உப்பு சேர்ப்பதில்லை என்பதை அறிந்த மருத்துவர்கள், உப்பு சத்து குறைபாடு இருப்பதால், எலும்பு மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு இல்லை என தெரிவித்தனர்.

படுக்கையில் கிடந்த பாம்பன் சுவாமிகள், "முருகா...! நான் உப்பை நம்பவில்லை. உன்னையே நம்புகிறேன்'' என்று தான் எழுதிய சண்முக கவசத்தைப் பக்தியுடன் பாடி வந்தார். நாளடைவில் மருத்துவர்களே வியக்கும் விதத்தில் அவரது எலும்பு முறிவு குணமானது. "எந்த கடவுளும் கந்தக்கடவுளுக்கு மிஞ்சாது' என்பது பாம்பன் சுவாமியின் அருள்வாக்கு. நோயால் அவதிப்படுபவர்கள் விரைவில் குணம் பெற 48 நாட்கள் சண்முக கவசத்தை (30 பாடல்கள்) படிக்கும் வழக்கம் இருக்கிறது.

No comments:

Post a Comment