Wednesday 31 January 2018

பக்தருக்காக பெயர் மாறியவர்


காஞ்சிபுரம் திருவெஃகாவில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வலமிருந்து இடமாக பள்ளி கொண்ட கோலத்தில் சுவாமி காட்சி தருகிறார். இதனால் இவர் "கிடந்தான்' என்று பெயர் பெற்றார். ஆழ்வார்கள் இவரை கச்சிக்கிடந்தான், கஞ்சைக்கிடந்தான், மணிவண்ணன் என்றெல்லாம் பெயர் சூட்டி பாடியுள்ளனர். திருமழிசையாழ்வாரின் சீடரான கணிகண்ணன் என்ற தீவிர பெருமாள் பக்தரை, தன் மீது பாடல் பாடும்படி உத்தரவிட்டான் மன்னன். அவர் மறுக்கவே நாடு கடத்த உத்தரவிட்டான். இதையறிந்த திருமழிசைஆழ்வார் இவ்வூரை விட்டுக் கிளம்பினார். 

இங்கிருந்த பள்ளி கொண்ட பெருமாளையும் தன்னுடன் அழைத்தார். ஆழ்வாரின் சொல் கேட்ட சுவாமியும் அவருடன் கிளம்பினார். இவ்வாறு தன் பக்தர் சொல்லிய செயலை செய்ததால் இவருக்கு "சொன்னவண்ணம் செய்த பெருமாள்' என்ற பெயர் அமைந்தது.

No comments:

Post a Comment