Saturday 27 January 2018

ஆங்கிலேயர் கனவில் துன்புறுத்திய குரங்குகள்


ல ஆண்டுகளுக்கு முன் திருச்சி ரயில் நிலைய பணிக்காக வந்த கற்களில் ஒன்று ஆஞ்சநேயர் வடிவில் இருந்தது. அதை பிரதிஷ்டை செய்து மக்கள் வழிபடத் தொடங்கினர். 

ஒருநாள் அங்கு வந்த ரயில்வே அதிகாரி ஆர்ம்ஸ்பி, ஆஞ்சநேயர் சிலை மீது கால் தடுக்கி விழுந்தார். கோபம் கொண்ட அவர், உடனே அந்தச் சிலையை அகற்ற உத்தரவிட்டார். அவர் ஒரு ஆங்கிலேயேர். அன்றிரவு குரங்குகள் சூழ்ந்து கொண்டு துன்புறுத்துவது போல அவருக்கு கனவு ஏற்பட்டது. மறுநாளே ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆஞ்சநேயருக்கு புதிய கோவில் கட்ட அனுமதியளித்தார். சிறியளவில் கட்டப்பட்ட அந்தக் கோவில் பிற்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. திருச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள ரயில்வே காலனியில் இந்தக் கோவில் இருக்கிறது.

No comments:

Post a Comment