
பழநியில் நடக்கும் தைப்பூச விழாவில் காவடி வழிபாடு மிக சிறப்பானது. காவடி சுமக்கும் பக்தர்கள் மார்கழி முதல் தேதியன்று மாலை அணிந்து, தைப்பூசம் வரை விரதம் மேற்கொள்வர். பூசத்திற்கு சிலநாள் முன்னதாக பாத யாத்திரையாக புறப்படுவர். அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை காவடியில் சுமந்து செல்வர். தைப்பூச விரதமிருந்தால் விருப்பம் எளிதில் நிறைவேறும் என்பர். விரும்பியதைக் கொடுக்கும் தேவலோக சிந்தாமணி போல, பூலோக சிந்தாமணியாக பழநி முருகன் விளங்குகிறார் என அருணகிரிநாதர் கூறுகிறார்.
No comments:
Post a Comment