Sunday 28 January 2018

காயத்ரி மந்திரத்தின் ஆற்றல்

காயத்ரி மந்திரத்தின் ஆற்றல்

சூரிய பகவானை நித்தமும் வணங்குகிற விதத்தில் உச்சரிக்கப்படுகின்ற காயத்ரி மந்திரத்தின் வலிமை வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று.

அக்னி பகவானை வணங்கும் விதமாக தினமும் தங்கள் இல்லங்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் யாகத் தீ மூட்டி, அக்னி பகவானை ஆராதித்தவர்கள்!

வி‌ஷ வாயு தன் கோரத் தாண்டவத்தை மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் நடத்திய வேளையில் - குறிப்பிட்ட தெருவில் ஒரு சில வீடுகளில் வசித்தவர்கள் மட்டும் - எத்தகைய பாதிப்புக்கும் உட்படாமல் இயல்பாக இருக்கிறார்கள் என்றால், அது பெரும் அதிசயம் ஆயிற்றே!

காதுகளுக்கு இனிமையான ஒலியை வழங்கக் கூடிய சங்கீதத்தை மெய்மறந்து கேட்கிறோம் அல்லவா? அந்த நேரத்தில் நம்மையே இழந்து விடுகிறோம்.

அதுபோல் நம் வேத சாஸ்திரங்களில் சொல்லப் பட்டிருக்கிற மந்திர ஒலிகளுக்கும் அபரிமிதமான ஆற்றல் உண்டு. ‘மந்திரங்களிலேயே உயர்ந்தது காயத்ரி மந்திரம்’ என்று பகவான் கிருஷ்ண பரமாத்மா பூரிக்கிறார்.

சூரிய பகவானை நித்தமும் வணங்குகிற விதத்தில் உச்சரிக்கப்படுகின்ற காயத்ரி மந்திரத்தின் வலிமை வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று. இதன் மகிமை, நம் முன்னோர்களுக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது.

காயத்ரி மந்திரத்தை நித்தமும் ஜபிக்கிற பண்டிதர்கள் தன் தேசத்தில் இருந்தால், அது நாட்டுக்கே பெரிய பாதுகாப்பு என்று அவர்களுக்கு சகல வசதிகளையும் கவுரத்துடன் செய்து கொடுத்தார்கள் அன்றைய மன்னர்கள்.

ஒவ்வொரு ஒலியும் அதற்கு உண்டான நேர்மறை அல்லது எதிர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று மேலைநாட்டினர் அறிவியல்பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.

காயத்ரி மந்திரம் ஜபித்தால், என்னென்ன நேர்மறை மாற்றங்கள் (பாஸிடிவ் வைப்ரே‌ஷன்) வெளியே நிகழும் என்பதை மேலைநாட்டினர் கண்டறிந்து வியந்திருக்கிறார்கள்.

நம் நாட்டில் உள்ளவற்றின் சிறப்புகளை நம்மவர்கள் சொன்னால், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதே வேளையில் அந்நிய தேசத்தினர் சொன்னால், ‘அப்படியா...’ என்று வாய் பிளந்து கேட்பார்கள்.

இதோ, காயத்ரி மந்திரத்தைப் பற்றி அந்நியர்கள் சொல்வதைக் கேட்போம்.

அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர், ‘‘ஒரு விநாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் காயத்ரி மந்திரத்துக்கு உண்டு. அத்தனையும் பாஸிட்டிவ் அதிர்வலைகள். இந்த மந்திரம் ஒலிக்கப்படும் இடத்துக்கு நாலா திசைகளிலும் பல நூற்றுக்கணக்கான மைல் தொலைவு வரை உள்ள இடம் மந்திர வலிமையால் தூய்மை அடைகிறது’’ என்கிறார்.

இந்துக்கள் சொல்கிற மந்திரங்களின் வலிமையை பிரபல ஆராய்ச்சியாளரான ஹான்ஸ் ஜென்னி என்பவர் வியந்து பாராட்டி இருக்கிறார். ‘‘இத்தகைய மந்திர ஆற்றல் தங்களுக்குக் கிடைத்திருக்கிறதே என்று இந்துக்களான அனைவரும் பெருமைகொள்ள வேண்டும்’’ என்கிறார் ஹான்ஸ் ஜென்னி.

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்வார்: ‘‘நிறைய மந்திரங்கள் உச்சரித்து, தவம் புரிந்து சாதனைகள் நிகழ்த்த வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள், பெரிய சிரமமான மந்திரங்கள் எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். காயத்ரி மந்திரத்தை ஜபித்தாலே போதும். சிறிய மந்திரம்தான். ஆனால், இதன் ஆற்றல் அளப்பரியது.’’

காயத்ரி மந்திரத்தை ஒருவர் ஜபிப்பதால் ஏற்படும் அதிர்வலைகள் அவரது உடலில் 24 சுரப்பி களைத் தூண்டுகிறதாம். இதனால் ஜபிப்பவருக்குப் புது சக்தி ஏற்படுவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. இப்படி காயத்ரி மந்திரத்தின் மகிமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

No comments:

Post a Comment