Sunday 28 January 2018

"மருத' சகோதரர்கள்

Image result for krishna leela

மருது சகோதரர்கள் பற்றி படித்திருப்பீர்கள். "மருத' சகோதரர்கள் பற்றி தெரியுமா ?

குபேரனின் மகன்களான நளகூபன், மணிகிரீவன் இருவரும் கயிலாய மலைச் சாரலில் உள்ள குளத்தில் நீராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த நாரதரை பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்தனர். கோபம் கொண்ட நாரதர், இருவரும் மருத மரமாக மாறும்படி சபித்தார். ஆயர்பாடியில் நந்தகோபன் வீட்டு வாசலில், சகோதரர்கள் இருவரும் மருத மரங்களாக நின்றனர். ஒருநாள் யசோதை, கண்ணனின் குறும்புத் தனத்தைப் பொறுக்க முடியாமல் கயிற்றில் பிணைத்து உரலில் கட்டிப் போட்டாள். உரலை இழுத்துச் சென்ற கண்ணனின் திருவடி மருத மரங்களின் மீது பட்டதும் மரங்களாக இருந்த இரு வரும் சுயவடிவம் பெற்றனர்.

No comments:

Post a Comment