பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம் பட்டீஸ்வரம். இங்குள்ள துர்க்கை சன்னிதி மிகவும் பிரசித்தமானது. மூன்று கண்களும், எட்டு கைகளும் கொண்ட இவள், புன்னகை ததும்பும் முகத்துடன் காட்சி தருகிறாள். எட்டுகைகளில் ஒன்று அபய ஹஸ்தமாகவும், மற்றொன்று இடுப்பில் வைத்த நிலையிலும் இருக்கிறது. மற்ற கைகளில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், வில், அம்பு ஆகிய ஆயுதங்கள் உள்ளன. இங்கு அம்மன் சாந்த நிலையில் இருப்பதால் வலப்புறம் இருக்கும் சிங்கம் இடப்புறமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆறடி உயரத்தில் இருக்கும் இந்த துர்க்கை மடிசார் புடவையுடன் காட்சி தருவது சிறப்பு. சாந்தரூபினியான பட்டீஸ்வரம் துர்க்கையை நவராத்திரி காலத்தில் வழிபட்டால் வாழ்வில் நன்மை பெருகும்.
Friday 26 January 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment