சென்னை மயிலாப்பூரில் சிவநேசர் என்னும் சிவபக்தர் வசித்தார். இவர் தன் மகள் பூம்பாவையை, பார்வதியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். ஒருநாள் தோட்டத்தில் மலர் பறிக்கச் சென்ற பூம்பாவை பாம்பு தீண்டி உயிரிழந்தாள். அவளுக்கு இறுதி காரியங்களைச் செய்து முடித்த சிவநேசர் சாம்பலை ஒரு கலசத்தில் வைத்திருந்தார். இதையறிந்த சம்பந்தர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அப்போது சிவனுக்கு திருமண விழா நடந்து கொண்டிருந்தது. சாம்பல் கலசத்தை கோவில் முன் கொண்டு வரச் செய்தார் சம்பந்தர். அப்போது அவர் பாவைப்பதிகம் பாடினார். சிவனின் திருக்கல்யாணத்தை காணாமலே போகிறாயே என்ற பொருளில், "பலிவிழாப் பாடல் செய் பங்குனி யுத்திரநாள், ஒலிவிழா காணாதே போதியோ பூம்பாவாய்,'' என்ற வரிகள் அதில் அமைந்தன. இதையடுத்து பூம்பாவை உயிர் பெற்றாள். நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தருவாயில் இருப்பவர்கள் பிழைக்க பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து இந்த பதிகத்தைப் பாடலாம்.
Wednesday 31 January 2018
உயிரைக் காப்பாற்றும் விரதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment