Tuesday 30 January 2018

வாழ்வில் தடைக்கு மேல் தடை ஏற்படுகிறதா ? நீங்கள் செய்யவேண்டிய பரிகாரம்

temple1

வாழ்வில் ஒருவருடைய ஜாதகத்தில் தடைக்கு மேல் தடை ஏற்படுகிறதா? அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் ?

• எவர் ஒருவர் வாழ்வில் தொடர்ந்து தடை ஏற்படுகிறதோ, அவர்கள் குலதெய்வத்தை இடைவிடாமல் வணங்க வேண்டும். 

• நம் முன்னோர்களுக்கு திதி கொடுக்கின்றோமா என்று கவனிக்க வேண்டும். முன்னோர்கள் இறந்த தேதி, திதி சிலருக்கு மறந்துபோய் இருக்கலாம். இதனால், வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை.

முன்னோர்களை தினமும் வணங்கலாம். முக்கியமாக மாதந்தோறும் வரும் அமாவாசை மற்றும் வருடத்திற்கு ஒருமுறை வரும் தை அமாவாசை, மகாளய அமாவாசை அன்றாவது முன்னோர்களின் பெயர் சொல்லி எள் தண்ணீரை கொடுக்கலாம். 

• சிவன் கோவிலில் இருக்கும் நவக்கிரகங்களைத் தினமும் வலம்வர வேண்டும்

• ஒவ்வொரு பௌர்ணமி தோறும் அம்மனை வணங்கி வரலாம். 

No comments:

Post a Comment