Saturday 27 January 2018

மன்னிப்பு... இவருக்கு பிடித்த வார்த்தை

Image result for sivan

திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகிலுள்ள கீரனூர் சிவலோகநாதர் கோவிலிலுள்ள சிவன், தவறு செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவராக அருளுகிறார். சிவனுக்கு எதிராக தட்சன் யாகம் நடத்தியபோது அக்னிபகவான் அதில் கலந்து கொண்டு அசுரர்களுக்கு அவிர்பாகத்தை (வேள்வி குண்டத்தில் இடப்படும் பொருட்கள்) கொண்டு சென்று கொடுத்தான். இதனால் கோபம் கொண்ட சிவன் அக்னியை கிளியாக மாறும்படி சபித்துவிட்டார்.கிளி வடிவம் எடுத்த அக்னி, இத்தலம் வந்து சிவனை வழிபட்டு, மன்னிப்பு வேண்டினான். அவனது தவறை மன்னித்த சிவன் மீண்டும் பழைய உருவத்தை அருளினார். அறியாமல் செய்த தவறுக்கு வருந்தி பாவமன்னிப்பு வேண்டுபவர்கள் இத்தலத்து சிவலோகநாதரை வணங்கினால் விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment