Monday 29 January 2018

கல்வி தரும் விரதம்


பவுர்ணமியன்று விரதம் இருப்பவர்கள் குல தெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்து வணங்க வேண்டும். காலையும் மதியமும் சாப்பிடாமல், மாலையில் சிவன் கோயிலுக்குச் சென்று வணங்க வேண்டும். நவக்கிரக மண்டபத்திலுள்ள சந்திரனுக்கோ அல்லது கோயில் நுழைவு வாயிலை அடுத்து இருக்கும் சந்திர பகவானுக்கோ வெள்ளை வஸ்திரம் அணிவிக்க வேண்டும்.

எந்த தெய்வத்தை எண்ணி விரதம் இருக்கிறோமோ, அந்த தெய்வத்தின் முன்னால் அமர்ந்து மனமுருகி பாட வேண்டும். முடியாதவர்கள் மற்றவர்களைப் பாடச் சொல்லி கேட்டாலே போதுமானது. இரவில் பழம் அல்லது மிதமான உணவுகளைச் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். பவுர்ணமி விரதம் கல்வி அபிருவித்தியைத் தரும்.

அழகை விருத்தி செய்யும். எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம். அவர்கள் பட்டினியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. பழங்கள் அல்லது சாத்வீகமான உணவுகளை சாப்பிடக் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment